ETV Bharat / state

இரண்டு பெண் குழந்தைகளை கொன்ற தாய்க்கு ஆறு ஆண்டுகள் சிறை ! - six year jail for killed for lady

வேலூர்: அடுத்தடுத்து பெண் குழந்தைகள் பிறந்த விரக்தியில் இரண்டு குழந்தைகளை கொன்ற தாய்க்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

lady-get-six-year-jail-for-killed-her-two-daughter
author img

By

Published : Sep 27, 2019, 11:22 PM IST

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா பெருமாள்குப்பம் கொல்லைமேடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன்-சத்யா தம்பதிக்கு லத்திகா(7), ஹாசினி(3) மற்றும் கீர்த்திகா என்ற ஒன்றை மாதத்தில் ஒரு பெண்குழந்தையும் இருந்தது. இந்நிலையில் கர்ப்பமாகியிருந்த சத்யாவிற்கு நான்காவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

தொடர்ச்சியாக பெண் குழந்தைகளாக பிறக்கிறது என்று மன வேதனையடைந்த சத்யா கடந்த 22.07.2016 அன்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து பாலில் விஷம் கலந்து தனது மகள் ஹாசினிக்கும் ஒன்றரை மாத பெண்குழந்தைக்கும் கொடுத்துள்ளார். இதில் அந்த இரண்டு குழந்தைகளும் உயிரிழந்தனர்.

இதன் பின்னர் சத்யாவும் விஷம் கலந்த பாலை குடித்துள்ளார். இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சத்யாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சைக்குப்பின் சத்யா உயிர்பிழைத்தார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரித்து வந்தனர். மேலும் இந்த வழக்கு சத்துவாச்சாரியில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்நிலையில் வழக்கின் குற்றம் நிரூபிக்கப்பட்டதால்,குற்றவாளி சத்யாவிற்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி குணசேகரன் இன்று தீர்ப்பளித்தார்.

வழக்கு நடைபெற்று கொண்டிருந்த வேளையிலேயே சத்யாவிற்கு ஐந்தாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு உயிரிழந்த ஹாசினியின் பெயரையே சூட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இரட்டை கொலை வழக்கு - இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா பெருமாள்குப்பம் கொல்லைமேடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன்-சத்யா தம்பதிக்கு லத்திகா(7), ஹாசினி(3) மற்றும் கீர்த்திகா என்ற ஒன்றை மாதத்தில் ஒரு பெண்குழந்தையும் இருந்தது. இந்நிலையில் கர்ப்பமாகியிருந்த சத்யாவிற்கு நான்காவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

தொடர்ச்சியாக பெண் குழந்தைகளாக பிறக்கிறது என்று மன வேதனையடைந்த சத்யா கடந்த 22.07.2016 அன்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து பாலில் விஷம் கலந்து தனது மகள் ஹாசினிக்கும் ஒன்றரை மாத பெண்குழந்தைக்கும் கொடுத்துள்ளார். இதில் அந்த இரண்டு குழந்தைகளும் உயிரிழந்தனர்.

இதன் பின்னர் சத்யாவும் விஷம் கலந்த பாலை குடித்துள்ளார். இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சத்யாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சைக்குப்பின் சத்யா உயிர்பிழைத்தார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரித்து வந்தனர். மேலும் இந்த வழக்கு சத்துவாச்சாரியில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்நிலையில் வழக்கின் குற்றம் நிரூபிக்கப்பட்டதால்,குற்றவாளி சத்யாவிற்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி குணசேகரன் இன்று தீர்ப்பளித்தார்.

வழக்கு நடைபெற்று கொண்டிருந்த வேளையிலேயே சத்யாவிற்கு ஐந்தாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு உயிரிழந்த ஹாசினியின் பெயரையே சூட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இரட்டை கொலை வழக்கு - இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

Intro:வேலூர் மாவட்டம்

அடுத்தடுத்து பெண் குழந்தைகள் பிறந்த விரக்தியில் இரண்டு குழந்தைகளை கொன்ற தாய்க்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை

வேலூர் மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்புBody:வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா பெருமாள் குப்பம் கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் இவரது மனைவி சத்யா வெங்கடேசன் கூலி வேலை செய்து வருகிறார் இந்த தம்பதிக்கு லத்திகா (7) ஹாசினி (3
1/2) கீர்த்திகா மற்றும் ஒன்றரை மாதத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தது இந்நிலையில் சத்யா மீண்டும் கர்ப்பமாகி 4வது ஆக ஒரு பெண் குழந்தை பிறந்தது இதனால் மனவேதனை அடைந்த சத்தியா கடந்த 22.07.2016 அன்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து பாலில் விஷம் கலந்து கொடுத்து தனது மகள் ஹாசினிக்கும் ஒன்றை மாத பெண் குழந்தைக்கும் கொடுத்துள்ளார் பின்னர் விஷம் கலந்த பாலை சத்யாவும் குடித்துள்ளார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சத்தியா தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார் ஆனால் பரிதாபமாக இரண்டு குழந்தைகளும் உயிரிழந்தது சம்பவம் குறித்தும் மேல்பாடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் மேலும் இந்த வழக்கு சத்துவாச்சாரியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி குணசேகர் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கினார் அதில் சத்தியா தனது 2 குழந்தைகளை பாலில் விஷம் கலந்து கொன்றது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது எனவே அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ 2000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார் இதனிடையே வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையிலே சத்யாவுக்கு ஐந்தாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது அந்த குழந்தைக்கு உயிரிழந்த ஹாசினியின் பெயரையே சூட்டியுள்ளார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.