ETV Bharat / state

கணவன், குழந்தையை கொன்று புதைத்த கொடூர மனைவி கைது!

வேலூர்: ஆற்காடு அருகே கணவர் மற்றும் ஒரு வயது குழந்தையை கொன்று புதைத்துவிட்டு நாடகமாடிய மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர்.

author img

By

Published : May 18, 2019, 10:41 AM IST

Lady buried husband and child near arcot

வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த திமிரி பாடி பகுதியை சேர்ந்தவர் ராஜா (25). இவர் எல்க்ட்ரீசியனாக பணியாற்றி வந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் மந்தைவெளியைச் சேர்ந்த தீபிகா(20) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிரவின்குமார்(1) என்ற மகன் உள்ளான்.

இந்நிலையில் மே 13ஆம் தேதி, ஆற்காடு தாலுகா காவல்நிலையத்தில் தனது கணவர் மற்றும் மகனை காணவில்லை என்று தீபிகா புகார் கொடுத்துள்ளார். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தீபிகாவிடம் இது குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாக அவர் பதில் அளித்துள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர், அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில், 'கணவர் ராஜா மற்றும் மகன் பிரவினை எரித்து கொன்று அருகில் ஏரிக்கரையில் புதைத்ததாக' அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஆற்காடு வட்டாட்சியர் வத்சலா இராணிப்பேட்டை துணை கண்காணிப்பாளர் கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் காவல்துறையினர் தீபிகாவின் கணவர் மற்றும் குழந்தையின் சடலங்களை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திமிரி பாடி

மேலும் இந்த சம்பவம் குறித்து தீபிகாவிடம் காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த திமிரி பாடி பகுதியை சேர்ந்தவர் ராஜா (25). இவர் எல்க்ட்ரீசியனாக பணியாற்றி வந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் மந்தைவெளியைச் சேர்ந்த தீபிகா(20) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிரவின்குமார்(1) என்ற மகன் உள்ளான்.

இந்நிலையில் மே 13ஆம் தேதி, ஆற்காடு தாலுகா காவல்நிலையத்தில் தனது கணவர் மற்றும் மகனை காணவில்லை என்று தீபிகா புகார் கொடுத்துள்ளார். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தீபிகாவிடம் இது குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாக அவர் பதில் அளித்துள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர், அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில், 'கணவர் ராஜா மற்றும் மகன் பிரவினை எரித்து கொன்று அருகில் ஏரிக்கரையில் புதைத்ததாக' அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஆற்காடு வட்டாட்சியர் வத்சலா இராணிப்பேட்டை துணை கண்காணிப்பாளர் கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் காவல்துறையினர் தீபிகாவின் கணவர் மற்றும் குழந்தையின் சடலங்களை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திமிரி பாடி

மேலும் இந்த சம்பவம் குறித்து தீபிகாவிடம் காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Intro:ஆற்காடு அருகே பரிதாபம்

கணவர் மற்றும் ஒரு வயது குழந்தையை எரித்துக் கொன்ற பெண்

கள்ளக்காதல் பிரச்சினை காரணமா என போலீசார் தீவிர விசாரணை


Body:வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த திமிரி பாடி பகுதியை சேர்ந்தவர் ராஜா (25)இவர் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்தார் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆற்காடு அடுத்த தாஜ்புரா கூட்ரோடு மந்தைவெளி பகுதியை சேர்ந்த தீபிகா(20) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை ஒன்று இருந்தது. திருமணத்திற்கு பிறகு தம்பதியினர் மந்தவெளி பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளனர் இந்த நிலையில் திடீரென கடந்த 13ம் தேதி தீபிகா ஆற்காடு கிராமியக் காவல் நிலையம் சென்று தனது மகன் மற்றும் கணவரை காணவில்லை என்று புகார் அளித்துள்ளார் அதிர்ச்சி அடைந்த போலீசார் தீபிகாவிடம் விசாரணை மேற்கொண்டனர் அப்போது தீபிகா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது இதையடுத்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் என் கணவருடன் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. திடீரென என்னுடன் சண்டை போட்டுக் கொண்டு குழந்தையை தூக்கிக்கொண்டு சென்று விட்டார் என முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார் இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தீபிகாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர் அப்போது தீபிகா அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார் அதாவது கணவர் ராஜா மற்றும் மகன் பிரனீஷை எரித்து கொன்று அருகில் ஏரிக்கரையில் புதைத்ததாக தெரிவித்ததை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர் இதையடுத்து இன்று போலீசார் மற்றும் ஆற்காடு வட்டாட்சியர் வத்சலா இராணிப்பேட்டை துணை கண்காணிப்பாளர் கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் ராஜா மற்றும் குழந்தையின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டது பின்னர் தீபிகா ரெண்டு பேரையும் அடையாளம் காட்டினார் இதையடுத்து 2 பேரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது இந்த நிலையில் கொலை குறித்து போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தீபிகாவிற்கு வேறு சிலருடன் திருமணத்தை மீறிய தொடர்பு இருந்திருக்கலாம் என்றும் அதன் காரணமாக ஏற்பட்ட பிரச்சனையால் கணவர் மற்றும் குழந்தையை எரித்து கொலை செய்திருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது ஒரு வயது குழந்தை என்று கூட பார்க்காமல் கணவருடன் சேர்த்து குழந்தையையும் எரித்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஆர்க்காடு கிராமிய காவல்துறை வழக்கு பதிவு செய்து தீபிகா மற்றும் அவரது தாயார் விஜயா ஆகியோரை விசாரித்து வருகின்றனர்


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.