ETV Bharat / state

கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா கோலாகலம் - Thiruvizha

வேலூர்: கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா லட்சக்கணக்கான பக்தர்கள் ஆரவாரத்துடன் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

திருவிழா
author img

By

Published : May 15, 2019, 1:43 PM IST

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கவுண்டன்ய மகா நதிக்கரையில் கோபாலபுரம் பகுதியில் அமைந்துள்ளது கெங்கையம்மன் கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் ஒன்றாம் தேதி சிரசு திருவிழா நடைபெறும். விஷ்ணுவின் அம்சமான பரசுராமன் தனது தாயின் தலையை வெட்டி மீண்டும் உயிர் பிழைக்கவைத்த புராணக் கதையை நினைவுகூறும் வகையில் சிரசு திருவிழா கொண்டாடப்படுகிறது.

இதேபோல், இந்த வருடத்திற்கான சிரசு திருவிழா இன்று காலை தொடங்கியது. குடியாத்தம் தரணம்பேட்டை முத்தியாலம்மன் கோயிலில் இருந்த அம்மனின் சிரசு லட்சக்கணக்கான பக்தர்கள் புடை சூழ ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கெங்கையம்மன் கோயிலில் வைக்கப்பட்டது. இதனையடுத்து பொதுமக்களுக்கு கூழ்வார்த்தல், அன்னதானம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா கோலாகலம்

மேலும், இத்திருவிழாவை முன்னிட்டு குடியாத்தம் பகுதியில் இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கவுண்டன்ய மகா நதிக்கரையில் கோபாலபுரம் பகுதியில் அமைந்துள்ளது கெங்கையம்மன் கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் ஒன்றாம் தேதி சிரசு திருவிழா நடைபெறும். விஷ்ணுவின் அம்சமான பரசுராமன் தனது தாயின் தலையை வெட்டி மீண்டும் உயிர் பிழைக்கவைத்த புராணக் கதையை நினைவுகூறும் வகையில் சிரசு திருவிழா கொண்டாடப்படுகிறது.

இதேபோல், இந்த வருடத்திற்கான சிரசு திருவிழா இன்று காலை தொடங்கியது. குடியாத்தம் தரணம்பேட்டை முத்தியாலம்மன் கோயிலில் இருந்த அம்மனின் சிரசு லட்சக்கணக்கான பக்தர்கள் புடை சூழ ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கெங்கையம்மன் கோயிலில் வைக்கப்பட்டது. இதனையடுத்து பொதுமக்களுக்கு கூழ்வார்த்தல், அன்னதானம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா கோலாகலம்

மேலும், இத்திருவிழாவை முன்னிட்டு குடியாத்தம் பகுதியில் இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Intro:வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பிரசித்தி பெற்ற கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா கோலாகலம் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர் (திருத்தப்பட்ட செய்தி)


Body:வேலூர் மாவட்டம் குடியாத்தம் கவுண்டன்ய மகா நதிக்கரையில் கோபாலபுரம் பகுதியில் அமைந்துள்ளது கெங்கையம்மன் கோயில் இந்த கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் ஒன்றாம் தேதி நடைபெறும் இத்திருவிழா மிகவும் புகழ்பெற்றதாகும் விஷ்ணுவின் அம்சமான பரசுராமன் தனது தாயின் தலையை வெட்டி மீண்டும் உயிர் பிழைக்க வைத்த புராணக் கதையை நினைவு கூறும் வகையில் இந்த சிரசு திருவிழா கொண்டாடப்படுகிறது அதாவது இந்த திருவிழாவை காண வேலூர் மாவட்டத்தில் மட்டும் இல்லாமல் அண்டை மாநிலங்களான ஆந்திரா கர்நாடகா ஆகிய பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திரள்வார்கள் இந்த ஆண்டு கடந்த சித்திரை மாதம் கொடியேற்றத்துடன் கங்கை அம்மன் கோவில் திருவிழா தொடங்கியது இந்த நிலையில் இன்று காலை பிரசித்தி பெற்ற சிரசு திருவிழா தொடங்கியது அதன்படி குடியாத்தம் தரணம்பேட்டை முத்தியாலம்மன் கோவிலில் உள்ள அம்மனின் சிரசு பக்தர்கள் படை சூழ ஊர்வலமாக கெங்கையம்மன் கோயில் நோக்கி எடுத்துச் செல்லப்பட்டது அப்போது வழிநெடுகிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு அம்மனை வழிபட்டனர் அப்போது அம்மனே நீதான் எங்களுக்கு துணை என்று பக்தர்கள் தேங்காய் உடைத்தும் தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர் தொடர்ந்து பக்தர்கள் வெள்ளத்தில் வீதி உலாவாக எடுத்துச் செல்லப்பட்ட அம்மனின் சிரசு கோபாலபுரத்தில் உள்ள கங்கை அம்மன் கோயிலில் வைக்கப்பட்டது திருவிழாவை காண வழக்கம்போல் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் குடியாத்தத்தில் திரண்டனர் இதையொட்டி பாதுகாப்புக்காக குடியாத்தம் பகுதியில் இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் திருவிழாவையொட்டி குடியாத்தம் பகுதி மக்கள் கூழ்வார்த்தல் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குதல் ஆகிய நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர் இளைஞர்கள் பெண்கள் என அனைவரும் உற்சாகமுடன் திருவிழாவைக் கண்டு ரசித்து வருகின்றனர் இனால் குடியாத்தம் பகுதி கோலாகலமாக உள்ளது. வேலூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் திருவிழா என்பதால் ஆண்டுதோறும் உள்ளூர் விடுமுறை விடப்படுவது வழக்கம் அந்த வகையில் இந்த ஆண்டும் குடியாத்தம் கங்கை அம்மன் கோவில் திருவிழாவிற்காக இன்று ஒரு நாள் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.