ETV Bharat / state

சிறுவன் கொலை வழக்கில் தொடர்பு - ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளி கைது! - Vellore Crime News

வேலூர்: சிறுவன் கொலை வழக்கில் பிணையில் வெளி வந்து ஆறு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த, குற்றவாளியை திருப்பத்தூர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

குற்றவாளி கைது
author img

By

Published : Nov 8, 2019, 11:49 PM IST

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரிமலை அத்தனாவூரைச் சேர்ந்தவர் குட்டி. இவருக்கும் கொட்டையூர் பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவரும் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு குட்டி, பொதுஇடத்தில் வைத்து பணம் கேட்டு அவமானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெருமாள், பள்ளி முடிந்து வீடு திரும்பிய குட்டியின் 9 வயது மகனான ராகேஷ் குமாரை(9) கடத்திச் சென்று தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவியில் தள்ளிக் கொலை செய்தார்.

இது குறித்து குட்டி கொடுத்த தகவலின் அடிப்படையில், ஏலகிரி மலை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து பெருமாள், அவரது தோழி காளியம்மாள்(36) ஆகிய இருவரையும் கைது செய்து, திருப்பத்துார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு திருப்பத்தூர் நீதி மன்றத்தில் நடந்து வந்தநிலையில், இருவரும் பிணை பெற்று தலை மறைவானார்கள். நீதிபதி உத்தரவின் பேரில் தலை மறைவாக இருந்த இருவரையும் காவல் துறையினர் தேடி வந்த நிலையில், நீலாவூரில் பதுங்கியிருந்த இருவரையும் ஏலகிரி மலை காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.


இதையும் படிங்க;காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய் கொலை - காதலனுடன் மகள் கைது

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரிமலை அத்தனாவூரைச் சேர்ந்தவர் குட்டி. இவருக்கும் கொட்டையூர் பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவரும் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு குட்டி, பொதுஇடத்தில் வைத்து பணம் கேட்டு அவமானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெருமாள், பள்ளி முடிந்து வீடு திரும்பிய குட்டியின் 9 வயது மகனான ராகேஷ் குமாரை(9) கடத்திச் சென்று தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவியில் தள்ளிக் கொலை செய்தார்.

இது குறித்து குட்டி கொடுத்த தகவலின் அடிப்படையில், ஏலகிரி மலை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து பெருமாள், அவரது தோழி காளியம்மாள்(36) ஆகிய இருவரையும் கைது செய்து, திருப்பத்துார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு திருப்பத்தூர் நீதி மன்றத்தில் நடந்து வந்தநிலையில், இருவரும் பிணை பெற்று தலை மறைவானார்கள். நீதிபதி உத்தரவின் பேரில் தலை மறைவாக இருந்த இருவரையும் காவல் துறையினர் தேடி வந்த நிலையில், நீலாவூரில் பதுங்கியிருந்த இருவரையும் ஏலகிரி மலை காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.


இதையும் படிங்க;காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய் கொலை - காதலனுடன் மகள் கைது

Intro:திருப்பத்தூர் அருகே 2013ல் சிறுவன் கொலை வழக்கில் ஜாமீனில் வெளியேவந்து தலைமறைவான குற்றவாளிகள் கைது
Body:



வேலுார் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே ஏலகிரி மலை அத்தனாவூரை சேர்ந்தவர் குட்டி விவசாயி இவருக்கும் கொட்டையூர் பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் குட்டி பெருமாளை பொது இடத்தில் வைத்து பணம் கேட்டு அவமதித்ததால் ஆத்திரமடைந்த பெருமாள் தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்த குட்டியின் மகன் ராகேஷ்குமாரை(9),கடந்த 2013ம் ஆண்டு பள்ளி முடித்து வீடு திரும்பியபோது சிறுவனை பெருமாள் கடத்திச்சென்று தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவியில் தள்ளி கொலை செய்தார். பின்னர் இது தொடர்பாக ஏலகிரி மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து பெருமாள் மற்றும் அவரது கள்ளக்காதலி காளியம்மாள்(36). ஆகிய இருவரையும் கைது செய்து திருப்பத்துார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திருப்பத்துார் கோர்ட்டில் நடந்து வந்தது பின்னர் ஜாமீனில் வெளியே வந்த இருவரும் தலைமறைவானார்கள். இந்நிலையில் திருப்பத்துார் கோர்டில் கொலை வழக்கில் தலைமறைவான இருவரையும் பிடிக்க பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.

இதையடுத்து ஏலகிரி மலை காவல்துறையினர் இன்று மாலை ஏலகிரி மலை நிலாவூரில் பதுங்கியிருந்த பெருமாள் மற்றும் காளியம்மாள் இருவரையும் கைது செய்து திருப்பத்துார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.