ETV Bharat / state

அமரர் ஊர்தி இல்லாததால் மருத்துவமனை வார்டிலேயே 7 மணி நேரம் இருந்த உடல்!

author img

By

Published : May 22, 2021, 8:57 PM IST

வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள மருத்துவமனையில் அமரர் ஊர்தி இல்லாததால், காலை ஏழு மணிக்கு இறந்தவரின் உடல் சுமார் எட்டு மணி நேரத்திற்குப் பின்பு சொந்த ஊர் கொண்டு செல்லப்பட்டது.

அமரர் ஊர்தி இல்லாததால் மருத்துவமனை வார்டிலே 7மணி நேரம் கிடந்த உயிரிழந்தவரின் உடல்
அமரர் ஊர்தி இல்லாததால் மருத்துவமனை வார்டிலே 7மணி நேரம் கிடந்த உயிரிழந்தவரின் உடல்

வேலூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், பருகூர் பகுதியைச் சேர்ந்தவர் சின்ன பாப்பா (60). இவர், கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று (மே.22) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தொடர்ந்து அவரது உடலை சொந்த ஊர் கொண்டு செல்ல அவருடைய உறவினர்கள் அரசு அமரர் ஊர்தியைப் பதிவு செய்த நிலையில், எட்டு மணி நேரம் அமரர் ஊர்தி வராததால் அவரது குடும்பத்தினர் செய்வதறியாது தவித்தனர். மேலும், சின்ன பாப்பாவின் உடல் சுமார் ஏழு மணி நேரத்திற்கும் மேலாக வார்டிலிருந்து அகற்றப்படாமலேயே இருந்தது.

தொடர்ந்து, சின்ன பாப்பாவின் உறவினர்கள், வார்டில் உள்ள நோயாளிகள் என அனைவரும் எதிர்ப்பு தெரிவித்ததன் பின்பு பிணவறைக்கு அவரது உடல் மாற்றப்பட்டது. தொடர்ந்து உறவினர்களின் நீண்டப் போராட்டத்திற்குப் பிறகு சுமார் எட்டு மணி நேரம் தாமதமாக அரசு அமரர் ஊர்தி வரவழைக்கப்பட்டு உடல் பருகூர் கொண்டு செல்லப்பட்டது.

மேலும், பருகூர் வரை ஒரே உடலை எடுத்துச் செல்லமுடியாது எனவும், இன்னொரு உடல் இருந்தால்தான் பருகூர் வரமுடியும் என அமரர் ஊர்தி ஓட்டுநரும், மருத்துவமனை நிர்வாகமும் அலட்சியமாக பதில் கூறியதாக சின்ன பாப்பாவின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது தொடர்பாக, அமரர் ஊர்தி பொறுப்பாளர் வெங்கடேஷிடம் கேட்டபோது, "அதிக உயிரிழப்புகள் காரணமாக அமரர் ஊர்தி வாகனங்கள் வெளியில் சென்றதால் தாமதம் ஏற்பட்டது" என்றார்.

இதையும் படிங்க: ஆக்சிஜன் பற்றாக்குறையால் இயக்காமல் நிறுத்தப்பட்டுள்ள தனியார் ஆம்புலன்ஸ்கள்

வேலூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், பருகூர் பகுதியைச் சேர்ந்தவர் சின்ன பாப்பா (60). இவர், கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று (மே.22) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தொடர்ந்து அவரது உடலை சொந்த ஊர் கொண்டு செல்ல அவருடைய உறவினர்கள் அரசு அமரர் ஊர்தியைப் பதிவு செய்த நிலையில், எட்டு மணி நேரம் அமரர் ஊர்தி வராததால் அவரது குடும்பத்தினர் செய்வதறியாது தவித்தனர். மேலும், சின்ன பாப்பாவின் உடல் சுமார் ஏழு மணி நேரத்திற்கும் மேலாக வார்டிலிருந்து அகற்றப்படாமலேயே இருந்தது.

தொடர்ந்து, சின்ன பாப்பாவின் உறவினர்கள், வார்டில் உள்ள நோயாளிகள் என அனைவரும் எதிர்ப்பு தெரிவித்ததன் பின்பு பிணவறைக்கு அவரது உடல் மாற்றப்பட்டது. தொடர்ந்து உறவினர்களின் நீண்டப் போராட்டத்திற்குப் பிறகு சுமார் எட்டு மணி நேரம் தாமதமாக அரசு அமரர் ஊர்தி வரவழைக்கப்பட்டு உடல் பருகூர் கொண்டு செல்லப்பட்டது.

மேலும், பருகூர் வரை ஒரே உடலை எடுத்துச் செல்லமுடியாது எனவும், இன்னொரு உடல் இருந்தால்தான் பருகூர் வரமுடியும் என அமரர் ஊர்தி ஓட்டுநரும், மருத்துவமனை நிர்வாகமும் அலட்சியமாக பதில் கூறியதாக சின்ன பாப்பாவின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது தொடர்பாக, அமரர் ஊர்தி பொறுப்பாளர் வெங்கடேஷிடம் கேட்டபோது, "அதிக உயிரிழப்புகள் காரணமாக அமரர் ஊர்தி வாகனங்கள் வெளியில் சென்றதால் தாமதம் ஏற்பட்டது" என்றார்.

இதையும் படிங்க: ஆக்சிஜன் பற்றாக்குறையால் இயக்காமல் நிறுத்தப்பட்டுள்ள தனியார் ஆம்புலன்ஸ்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.