ETV Bharat / state

ஆற்காடு அருகே பீடி இலை குடோனில் பயங்கர தீ விபத்து

வேலூர்: ஆற்காடு அருகே உள்ள பீடி இலை குடோனில் ஏற்பட்ட தீ விபத்தினால், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பீடி இலை பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.

author img

By

Published : May 14, 2019, 7:33 AM IST

ஆற்காடு அருகே பீடி இலை குடோனில் பயங்கர தீ விபத்து

வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த கீழ்விஷாரம் சாதிக்பாட்ஷா நகர் பகுதியில் தனியார் பீடி இலை சேமிப்பு குடோன் அமைந்துள்ளது. இந்த குடோனில் நேற்று, எதிர்பாராதவிதமாக, திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

ஆற்காடு அருகே பீடி இலை குடோனில் பயங்கர தீ விபத்து

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு பீடி இலை குடோனை உடைத்து பல மணி நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்தினால், குடோனில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான பீடி இலை பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. மேலும் இச்சம்பவம் குறித்து ஆற்காடு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த கீழ்விஷாரம் சாதிக்பாட்ஷா நகர் பகுதியில் தனியார் பீடி இலை சேமிப்பு குடோன் அமைந்துள்ளது. இந்த குடோனில் நேற்று, எதிர்பாராதவிதமாக, திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

ஆற்காடு அருகே பீடி இலை குடோனில் பயங்கர தீ விபத்து

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு பீடி இலை குடோனை உடைத்து பல மணி நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்தினால், குடோனில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான பீடி இலை பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. மேலும் இச்சம்பவம் குறித்து ஆற்காடு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆற்காடு அருகே பரபரப்பு

பீடி இலை குடோனில் பயங்கர தீ விபத்து



வேலூர் மாவட்டம்ஆற்காடு அடுத்த கீழ்விஷாரம் சாதிக்பாட்ஷா நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பவுடா பீடி கம்பெனிக்கு சொந்தமான பீடி இலை சேமிப்பு குடோன் அமைந்துள்ளது இந்த குடோனில் இன்று திடீரென தீப்பிடித்து எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஆற்காடு காவல்நிலையத்திற்கும் ஆற்காடு தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆற்காடு காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகியும் தீயை அணைக்க முடியாத காரணத்தினால் ராணிப்பேட்டை ஆற்காடு ஆகிய இரண்டு தீயணைப்பு துறையினர் உடன் இணைந்து தற்போது தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த  பீடி நிலை சேமிப்பு குடோன் ஆனது சுற்றிலும் இரும்பு தகடுகளால் கட்டப்பட்டு இருப்பதால் தீயை அணைக்கும் பணியில் சற்று தொய்வு ஏற்பட்டு உள்ளது இதன் காரணமாக ஜேசிபி இயந்திரம் கொண்டு பீடி இலை குடோனை உடைத்து தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த தீவிபத்தில் குடோனில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான பீடி இலை போன்ற பல பொருட்கள் தீயில் எரிந்து முற்றிலும் நாசமாகி இருப்பதாக தெரிவிக்கின்றனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.