ETV Bharat / state

ஆட்டோவும், பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து - தந்தை, மகன் உயிரிழப்பு

author img

By

Published : Oct 21, 2020, 7:32 AM IST

வேலூர்: குடியாத்தம் அருகே அரசு பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தந்தை, மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து
விபத்து

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வெட்டுவானம் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் சிவா. இவர் நேற்று (அக். 20) தனது மகன் சஞ்ஜய்யுடன் வெட்டுவானம் பகுதியிலிருந்து குடியாத்தம் நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது குடியாத்தம் அருகே சென்று கொண்டு இருந்தபோது, எதிரே வந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சிவா மற்றும் அவரது மகன் சஞ்ஜய் (10) உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற குடியாத்தம் காவல்துறையினர் இருவரின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் காவல்துறையினர் இவ்விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வெட்டுவானம் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் சிவா. இவர் நேற்று (அக். 20) தனது மகன் சஞ்ஜய்யுடன் வெட்டுவானம் பகுதியிலிருந்து குடியாத்தம் நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது குடியாத்தம் அருகே சென்று கொண்டு இருந்தபோது, எதிரே வந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சிவா மற்றும் அவரது மகன் சஞ்ஜய் (10) உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற குடியாத்தம் காவல்துறையினர் இருவரின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் காவல்துறையினர் இவ்விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 14 இருசக்கர வாகனங்களை திருடிய இருவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.