ETV Bharat / state

வேலூரில் மாணவர்களுக்கு பூகம்ப கால மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி

author img

By

Published : Apr 5, 2019, 3:59 PM IST

வேலூர்: பேரிடர் காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பூகம்ப கால மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்டுள்ளது.

பூகம்ப கால மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நடந்த ஒத்திகை நிகழ்ச்சியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 38 பேர், அதிவிரைவு படையைச் சேர்ந்த 28 பேர் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

பூகம்பம் ஏற்பட்டவுடன் அடிக்கும் எச்சரிக்கை ஒளியுடன் தொடங்கிய ஒத்திகை நிகழ்ச்சியின்போது இடர்பாடுகளில் சிக்கியவர்களை கயிறு கட்டி மீட்பது, தீயணைப்பு துறையினர் தீயுடன் போராடுவது, நவீன உபகரணங்களைக் கொண்டு மீட்புப் பணிகளில் ஈடுபடுவது, குழந்தைகள் மீட்பு அவசரகால முதலுதவி சிகிச்சைகள் வழங்குதல் உள்ளிட்டவை தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பேசிய அரக்கோணம் படையணி தலைவர் நம்பியார், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயிற்சி அளிக்கும் வகையில் இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதன் மூலம் மாணவர்களிடமும், பொது மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே தங்கள் நோக்கம் என குறிப்பிட்டார்.

மேலும் ஒத்திகை குறித்து பேசிய மாணவர்கள், நிகழ்ச்சியை பரவசத்துடனும் ஆச்சரியத்துடனும் கண்டுகளித்ததாகவும், இத்தகைய நிகழ்ச்சி மிகவும் பயனுள்ள வகையில் இருந்ததாகவும் பேரிடர் காலங்களில் நம்மை மட்டுமல்லாமல் உடனிருப்பவர்களையும் காக்க இது உதவும் என தெரிவித்தனர்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நடந்த ஒத்திகை நிகழ்ச்சியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 38 பேர், அதிவிரைவு படையைச் சேர்ந்த 28 பேர் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

பூகம்பம் ஏற்பட்டவுடன் அடிக்கும் எச்சரிக்கை ஒளியுடன் தொடங்கிய ஒத்திகை நிகழ்ச்சியின்போது இடர்பாடுகளில் சிக்கியவர்களை கயிறு கட்டி மீட்பது, தீயணைப்பு துறையினர் தீயுடன் போராடுவது, நவீன உபகரணங்களைக் கொண்டு மீட்புப் பணிகளில் ஈடுபடுவது, குழந்தைகள் மீட்பு அவசரகால முதலுதவி சிகிச்சைகள் வழங்குதல் உள்ளிட்டவை தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பேசிய அரக்கோணம் படையணி தலைவர் நம்பியார், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயிற்சி அளிக்கும் வகையில் இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதன் மூலம் மாணவர்களிடமும், பொது மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே தங்கள் நோக்கம் என குறிப்பிட்டார்.

மேலும் ஒத்திகை குறித்து பேசிய மாணவர்கள், நிகழ்ச்சியை பரவசத்துடனும் ஆச்சரியத்துடனும் கண்டுகளித்ததாகவும், இத்தகைய நிகழ்ச்சி மிகவும் பயனுள்ள வகையில் இருந்ததாகவும் பேரிடர் காலங்களில் நம்மை மட்டுமல்லாமல் உடனிருப்பவர்களையும் காக்க இது உதவும் என தெரிவித்தனர்.

Intro:கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கும்ப கால ஒத்திகை நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்


Body:அரக்கோணத்தில் அமைந்துள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையின் நாலாவது படையணி சார்பில் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகத்தில் பூகம்ப கால மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது நிகழ்ச்சியை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு பூகம்பம் ஏற்படும் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாகவும் இது போன்ற பேரிடர் சமயங்களில் போது காயமடைந்தவர்களுக்கு முதல்வர் உதவி சிகிச்சை அளிப்பது தொடர்பாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது மேலும் பேரிடர் காலங்களில் போது செய்யக்கூடாதவை குறித்தும் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது குறித்து பேரிடர் குழு உறுப்பினர்கள் நேரடியாக பயிற்சி அளித்தனர் இதனையடுத்து நிகழ்ச்சியின் முக்கிய ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது இதில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 38 பேர் அதிவிரைவு படையைச் சேர்ந்த 28 பேர் தீயணைப்பு துறையை சேர்ந்த 8 பேர் தமிழ்நாடு சிறப்பு காவல் படையைச் சேர்ந்த 28 பேர் செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்த 5 பேர் வனத்துறையை சேர்ந்த 30 பேர் உள்ளூர் பாதுகாப்பு குடும்பத்தைச் சேர்ந்த 36 பேர் மற்றும் மாவட்ட ஓம்கார் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர் பூகம்பம் ஏற்பட்ட உடன் அடிக்கும் எச்சரிக்கை ஒளியுடன் துவங்கிய ஒத்திகை நிகழ்ச்சியின்போது இடர்பாடுகளில் சிக்கியவர்களை கயிறு கட்டி நிற்பது தீயணைப்பு துறையினர் தீயுடன் போராடுவது நவீன உபகரணங்களைக் கொண்டு மீட்புப் பணிகளில் ஈடுபடுவது மருத்துவ குழுவினர் வழி ஏற்படுத்துவது குழந்தைகள் மீட்பு அவசரகால முதலுதவி சிகிச்சைகள் வழங்குதல் உள்ளிட்டவை தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது இதைத் தொடர்ந்து பேசிய அரக்கோணம் படையணி தலைவர் ரேகா நம்பியார் முன்னேறி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயிற்சி அளிக்கும் வகையில் இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு உள்ளதாகவும் இதன் மூலம் மாணவர்களிடமும் பொது மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே நோக்கம் என குறிப்பிட்டார். இது குறித்து மாணவர்கள் கூறுகையில் நிகழ்ச்சியை பரவசத்துடன் ஆச்சரியத்துடனும் கண்டுகளிப்பதற்காக மாணவ மாணவிகள் தெரிவித்தனர் இந்த நிகழ்ச்சி மிகவும் பயனுள்ள வகையில் இருந்ததாகவும் பேரிடர் காலங்களில் நம்மை மட்டுமல்லாமல் உடனிருப்பவர்களையும் காக்க இது உதவும் என தெரிவித்தனர் கோவையில் கடந்த 1900ம் ஆண்டு சித்தூரை மையமாக கொண்டு ஏற்பட்ட பூகம்பத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர் நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை பூகம்பம் நிகழ்ந்த இடத்தில் மீண்டும் பூகம்பம் ஏற்படும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில் பூகம்ப எச்சரிக்கையில் மூன்றாவது ஜூன் எனப்படும் நிலநடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ள பகுதியில் அமைந்துள்ள கோவையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.