ETV Bharat / state

'முன்னாள் பிரதமரை கொலை செய்ய முயன்றது திமுக'

வேலூர்: மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை திமுக கொலை செய்ய முயன்றதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

author img

By

Published : Aug 1, 2019, 12:35 AM IST

jayakumar

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு வரும் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, நெல்லை மேயர் கொலை வழக்கில் திமுக பிரமுகர் கைதாகியுள்ளது குறித்து அவரிடம் கேட்கப்பட்டதற்கு பதிலளித்த அவர்,

"சிபிஐ விசாரணை சென்று கொண்டிருக்கின்றது. இதில் ஆரம்ப கட்ட விசாரணையிலேயே திமுக பிரமுகர் ஒருவர் சிக்கியுள்ளார். திமுக ஒரு கொலை செய்கிற இயக்கம் என்று இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது.

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பதவியில் இல்லாதபோது ஒருமுறை மதுரைக்கு வந்தார். அப்போது திமுக அவரை கொலை செய்ய முயன்றுள்ளது. அப்படியானால் சாதாரண குடிமக்களின் நிலைமையைக் கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள்.

செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் ஜெயக்குமார்

பாலாற்றில் தண்ணீர் ஓடாததற்கு காரணமே திமுகதான். 16 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் திமுக அங்கம் வகித்த போது இப்பிரச்சனைக்கு தீர்வு காணவில்லை.

சட்டம் ஒழுங்கை ஆட்சியில் இருக்கும் போதும், ஆட்சியில் இல்லாத போதும் கையில் எடுப்பதில் திமுக போன்ற ஒரு கட்சி கிடையாது.

மேலும், அரசியலில் நேற்று முளைத்த காளான் உதயநிதி எல்லாம் அதிமுகவை அடிமைகள் என்று சொல்கிறார். இவர்கள் எத்தனை ஆண்டுகள் கொத்தடிமைகளாக இருந்தவர்கள் என்று எங்களுக்கு தெரியும்.

திமுக அதிகார வெறிபிடித்த இயக்கம். அவர்கள் எவ்வளவு முயன்றாலும் இனி நாங்கள் தான் வெற்றி பெறுவோம்" என்று தெரிவித்தார்.

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு வரும் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, நெல்லை மேயர் கொலை வழக்கில் திமுக பிரமுகர் கைதாகியுள்ளது குறித்து அவரிடம் கேட்கப்பட்டதற்கு பதிலளித்த அவர்,

"சிபிஐ விசாரணை சென்று கொண்டிருக்கின்றது. இதில் ஆரம்ப கட்ட விசாரணையிலேயே திமுக பிரமுகர் ஒருவர் சிக்கியுள்ளார். திமுக ஒரு கொலை செய்கிற இயக்கம் என்று இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது.

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பதவியில் இல்லாதபோது ஒருமுறை மதுரைக்கு வந்தார். அப்போது திமுக அவரை கொலை செய்ய முயன்றுள்ளது. அப்படியானால் சாதாரண குடிமக்களின் நிலைமையைக் கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள்.

செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் ஜெயக்குமார்

பாலாற்றில் தண்ணீர் ஓடாததற்கு காரணமே திமுகதான். 16 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் திமுக அங்கம் வகித்த போது இப்பிரச்சனைக்கு தீர்வு காணவில்லை.

சட்டம் ஒழுங்கை ஆட்சியில் இருக்கும் போதும், ஆட்சியில் இல்லாத போதும் கையில் எடுப்பதில் திமுக போன்ற ஒரு கட்சி கிடையாது.

மேலும், அரசியலில் நேற்று முளைத்த காளான் உதயநிதி எல்லாம் அதிமுகவை அடிமைகள் என்று சொல்கிறார். இவர்கள் எத்தனை ஆண்டுகள் கொத்தடிமைகளாக இருந்தவர்கள் என்று எங்களுக்கு தெரியும்.

திமுக அதிகார வெறிபிடித்த இயக்கம். அவர்கள் எவ்வளவு முயன்றாலும் இனி நாங்கள் தான் வெற்றி பெறுவோம்" என்று தெரிவித்தார்.

Intro: வாணியம்பாடியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்கள் சந்திப்பு.


Body: வேலூர் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறுகிற நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அதில் அவர் பேசியதாவது.

நெல்லை மேயர் கொலை வழக்கில் திமுக பிரமுகர் கைதாகியுள்ளார் என்ற கேள்விக்கு ;

சிபிஐ விசாரணை சென்றுகொண்டிருக்கின்றது இதில் ஆரம்ப கட்ட விசாரணையிலேயே திமுக பெரிய அளவில் கொலை செய்கிற இயக்கம்,என்பதை இதன் மூலம் நிரூபித்திருக்கிறது.

திமுகவின அனுகுமறை என்பது இந்தியாவின் பிரதமராக இல்லாத போது இந்திரா காந்தி மதுரை வந்தபோது அவரை கொலை செய்ய முயற்சித்தது திமுக பிரதமரையே கொலை செய்ய முயற்சித்தவர்கள் அதனால் நீங்கள் அன்றாட மக்களின் நிலையை புரிந்துகொள்ளவேண்டும்.

சட்ட ஒழுங்கை ஆட்சியில் இருக்கும் போதும் ஆட்சியில் இல்லாத போதும் கையில் எடுப்பதில் திமுக போன்ற ஓர் கட்சி இந்தியாவில், கிடையாது.

பாலாற்றில் தண்ணீர் ஓடாததற்கு காரணமே திமுக தான் 16 ஆண்டுகள் மத்தியில் இருந்த போது மத்தியிலேயே இப்பிரச்சனையை தீர்த்து இருக்கலாம்,

மேலும் அரசியலில் நேற்று முளைத்த காளான் உதயநிதி எல்லாம் அதிமுகவை அடிமைகள் என்று சொல்லுகிறார்,

இவர்கள் எத்தனை ஆண்டுகள் கொத்தடிமைகளாக இருந்தவர்கள் என்று எங்களுக்கு தெரியும்.

மேலும் தமிழகத்தில் ஊழலை அறிமுகப்படுத்தியது திமுக தான்

திமுக ஆட்சியில் இருக்கும்போது இலவச தொலைக்காட்சிகளை வழங்கியது தங்கள் குடும்ப தொலைக்காட்சிகள் வளர்ச்சிக்காகவும் தங்களுடைய வருமானத்திற்காகவும் தான் அது இலவசமாக மக்களுக்கு வழங்கி அதில் லாபம் பார்த்தவர்கள் திமுகவினர்.


Conclusion: மேலும் திமுக அதிகார வெறி பிடித்த இயக்கம் அவர்கள் எவ்வளவு முயற்சித்தாலும் இனி நாங்கள் தான் வெற்றி பெறுவோம்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.