ETV Bharat / state

செருப்பால் அடித்த மனைவி - கொலை செய்த கணவன்

author img

By

Published : Aug 29, 2020, 5:59 PM IST

வேலூர் : மனைவி தன்னை செருப்பால் அடித்ததை பொறுத்துக்கொள்ள முடியாத கணவன், இரும்பு கம்பியைக் கொண்டு அவர்மீது பதில் தாக்குதல் நடத்தியதில் மனைவி உயிரிழந்தார்.

dispute between the couple, wife killed by husband in vellore
dispute between the couple, wife killed by husband in vellore

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அருகே உள்ள பத்திரபல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜ் (வயது 22). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சுப்புலட்சுமி (வயது 18) என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு திருமணமாகி ஒன்பது மாதங்களே ஆன நிலையில், கணவன் மனைவிக்கிடைய அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று (ஆக. 28) யுவராஜ் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய நிலையில், கணவன் மனைவிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து, இருவருக்குமிடைய தகராறு முற்றிய நிலையில், தனது கணவர் யுவராஜை சுப்புலட்சுமி செருப்பால் அடித்தாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த யுவராஜ், தன் அருகே இருந்த இரும்பு ஊதாங்குழலால் சுப்புலட்சுமியின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் சுப்புலட்சுமி ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார்.

தொடர்ந்து, சுப்புலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு, பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரது உடல் உடற்கூறு ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுப்புலட்சுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் யுவராஜை கைது செய்த காவல் துறையினர், அவரை நீதிமன்றக் காவலில் குடியாத்தம் கிளைச்சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து குடியாத்தம் கோட்டாட்சியர் சேக் மன்சூர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அருகே உள்ள பத்திரபல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜ் (வயது 22). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சுப்புலட்சுமி (வயது 18) என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு திருமணமாகி ஒன்பது மாதங்களே ஆன நிலையில், கணவன் மனைவிக்கிடைய அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று (ஆக. 28) யுவராஜ் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய நிலையில், கணவன் மனைவிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து, இருவருக்குமிடைய தகராறு முற்றிய நிலையில், தனது கணவர் யுவராஜை சுப்புலட்சுமி செருப்பால் அடித்தாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த யுவராஜ், தன் அருகே இருந்த இரும்பு ஊதாங்குழலால் சுப்புலட்சுமியின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் சுப்புலட்சுமி ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார்.

தொடர்ந்து, சுப்புலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு, பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரது உடல் உடற்கூறு ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுப்புலட்சுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் யுவராஜை கைது செய்த காவல் துறையினர், அவரை நீதிமன்றக் காவலில் குடியாத்தம் கிளைச்சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து குடியாத்தம் கோட்டாட்சியர் சேக் மன்சூர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.