வேலூர் மாவட்டம் குடியாத்தம், சித்தூர் சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க்கில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக எரிபொருள் நிரப்பும் வாகன ஓட்டிகள் அனைவருக்கும் இலவசமாக முக கவசம் அளிக்கப்பட்டது. மேலும் கரோனா நோய் கட்டுப்பாட்டுக்குள் வரும்வரை தினமும், இலவசமாக முகக்கவசங்கள் வழங்கப்படும் என பெட்ரோல் நிலையத்தினர் தெரிவித்தனர்.
ஒரு நாளைக்கு சுமார் 500 வீதம் இலவசமாக முகக்கவசங்கள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தனர். இன்று இலவச முகக்கவசத்தை குடியாத்தம் வட்டாட்சியர் வச்சலா, கலந்துகொண்டு வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக வழங்கினார்.
இதையும் படிங்க: வேலூரில் கரோனா மருத்துவ முகாம் அமைக்க எதிர்ப்பு