ETV Bharat / state

கரோனா: சாலை ஓவியங்கள் மூலம் விழிப்புணர்வு - கரோனா: சாலை ஓவியங்கள் மூலம் விழிப்புணர்வு

வேலூர்: சாலைகளில் கரோனா குறித்த வாசகங்களை ஓவியங்களாக வரைந்து மாவட்ட ஓவியர் சங்கத்தினர் விழப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.

CORONA VIRUS AWARENESS PAINTING ON ROAD
CORONA VIRUS AWARENESS PAINTING ON ROAD
author img

By

Published : Apr 8, 2020, 3:19 PM IST

வேலூர் மாவட்டத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 45 வயது மதிக்கத்தக்க நபர் நேற்று உயிரிழந்தார். இது ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு ஆகும். இருப்பினும், வேலூர் மாவட்ட மக்கள் பலர் தங்களை தற்காத்துக்கொள்ள ஊரடங்கு உத்தரவினை கடைப்பிடிப்பதில்லை.

இதையடுத்து, வேலூர் மாவட்ட ஒவியர் சங்கத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தனது சொந்த முயற்சியில் காவல் துறையினரின் உதவியோடு கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்துள்ளார்.

கரோனாா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஓவியம்

அந்த ஓவியம், கரோனா வைரஸ் ரத்தம் படிந்த பற்களோடு மக்களை அச்சுறுத்தும் வகையில் வரையப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தனித்திரு, விலகி இரு, வீட்டில் இரு, கரோனாவை ஒழிப்போம் என்ற விழிப்புணர்வு வாசகங்களும் அதில் அடங்கியுள்ளன.

இதையும் படிங்க:கரோனா வைரஸ் வரைபடம் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு!

வேலூர் மாவட்டத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 45 வயது மதிக்கத்தக்க நபர் நேற்று உயிரிழந்தார். இது ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு ஆகும். இருப்பினும், வேலூர் மாவட்ட மக்கள் பலர் தங்களை தற்காத்துக்கொள்ள ஊரடங்கு உத்தரவினை கடைப்பிடிப்பதில்லை.

இதையடுத்து, வேலூர் மாவட்ட ஒவியர் சங்கத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தனது சொந்த முயற்சியில் காவல் துறையினரின் உதவியோடு கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்துள்ளார்.

கரோனாா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஓவியம்

அந்த ஓவியம், கரோனா வைரஸ் ரத்தம் படிந்த பற்களோடு மக்களை அச்சுறுத்தும் வகையில் வரையப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தனித்திரு, விலகி இரு, வீட்டில் இரு, கரோனாவை ஒழிப்போம் என்ற விழிப்புணர்வு வாசகங்களும் அதில் அடங்கியுள்ளன.

இதையும் படிங்க:கரோனா வைரஸ் வரைபடம் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.