ETV Bharat / state

திமுக-காங்கிரஸ் உறவில் விரிசல்?

author img

By

Published : Jul 18, 2019, 5:04 PM IST

Updated : Jul 18, 2019, 7:34 PM IST

வேலூர்: கூட்டணிக் கட்சியான திமுக போட்டியிடும் வேலூரில் காங்கிரஸ் பிரமுகர் வேட்புமனு தாக்கல் செய்திருப்பது இரு கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

congress

வேலூர் மக்களவைத் தொகுதி வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவுபெற்றது. இதையொட்டி பல்வேறு சுயேச்சை வேட்பாளர்கள், சிறிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பில் திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடும் சூழலில், காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் இன்று மனு தாக்கல் செய்துள்ள சம்பவம் இரு கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பின்னணி என்ன?

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், காங்கிரஸ் பிரமுகருமான வாலாஜா அசேன் ஏற்கனவே கடந்த வாரம் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார். அதில், 'வேலூர் தொகுதியில் பணப்பட்டுவாடா புகாரால் தேர்தல் நிறுத்தப்பட்டது.

ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தற்போது மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை தேர்தலை தள்ளி வைக்க வேண்டும்' என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று அவர் திடீரென வேலூர் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்ய வந்தார். மனு தாக்கல் செய்த பிறகு அவர் கூறியதாவது, "வேலூர் தொகுதியில் இருபெரும் அணியினர் இடையே போட்டி நிகழவுள்ளது. பணப்பட்டுவாடா தொடர்பாக ஏற்கெனவே மனு அளித்ததன் பேரில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்று புகார் அளித்துள்ளேன்; எனது சுய விருப்பப்படியே தேர்தலில் நிற்க வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன்" என்றார்

இச்சம்பவம் வேலூர் தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பையும், திமுக-காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திமுகவை எதிர்த்து காங்கிரஸ் பிரமுகர் மனு தாக்கல்!

அவர் மீது காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் இரு கட்சிகளிடையே விரிசல் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

வேலூர் மக்களவைத் தொகுதி வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவுபெற்றது. இதையொட்டி பல்வேறு சுயேச்சை வேட்பாளர்கள், சிறிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பில் திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடும் சூழலில், காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் இன்று மனு தாக்கல் செய்துள்ள சம்பவம் இரு கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பின்னணி என்ன?

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், காங்கிரஸ் பிரமுகருமான வாலாஜா அசேன் ஏற்கனவே கடந்த வாரம் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார். அதில், 'வேலூர் தொகுதியில் பணப்பட்டுவாடா புகாரால் தேர்தல் நிறுத்தப்பட்டது.

ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தற்போது மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை தேர்தலை தள்ளி வைக்க வேண்டும்' என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று அவர் திடீரென வேலூர் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்ய வந்தார். மனு தாக்கல் செய்த பிறகு அவர் கூறியதாவது, "வேலூர் தொகுதியில் இருபெரும் அணியினர் இடையே போட்டி நிகழவுள்ளது. பணப்பட்டுவாடா தொடர்பாக ஏற்கெனவே மனு அளித்ததன் பேரில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்று புகார் அளித்துள்ளேன்; எனது சுய விருப்பப்படியே தேர்தலில் நிற்க வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன்" என்றார்

இச்சம்பவம் வேலூர் தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பையும், திமுக-காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திமுகவை எதிர்த்து காங்கிரஸ் பிரமுகர் மனு தாக்கல்!

அவர் மீது காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் இரு கட்சிகளிடையே விரிசல் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Intro:வேலூர் தேர்தல் களத்தில் பரபரப்பு திமுக வேட்பாளரை எதிர்த்து காங்கிரஸ் பிரமுகர் மனு தாக்கல்

இரண்டு பெரும் முதலாளிகளுக்கு இடையே போட்டி நடப்பதாக பேட்டிBody:பணப் பட்டுவாடா புகாரால் நிறுத்தப்பட்ட வேலூர் மக்களவை தேர்தல் தற்போது மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி வரும் ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது இதையொட்டி கடந்த 11ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவுறும் நிலையில் பல்வேறு சுயேட்ள்சைகள் மற்றும் சிறிய கட்சிகளை சேர்ந்தவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர் இந்த நிலையில் வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சி சார்பில் திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடும் சூழலில் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் இன்று மனு தாக்கல் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அதாவது வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி முன்னாள் எம்எல்ஏவும் தற்போதைய காங்கிரஸ் பிரமுகருமான வாலஜா அசைன் ஏற்கனவே கடந்த வாரம் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார் அதில் வேலூர் தொகுதியில் பணப்பட்டுவாடா புகாரால் தேர்தல் நிறுத்தப்பட்டது ஆனால் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தற்போது மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று மனு அளித்திருந்தார் இந்த நிலையில் இன்று அவர் திடீரென வேலூர் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்ய வந்தார் அவர் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியான சண்முகசுந்தரத்திடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் அதன் பிறகு வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், " நான் தற்போது காங்கிரசில் தான் உறுப்பினராக உள்ளேன் ஏற்கனவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராக இருந்துள்ளேன் வேலூர் தொகுதியில் இரண்டு பெருமுதலாளிகள் இடையே போட்டி நடைபெறுகிறது ஏற்கனவே தேர்தல் நிறுத்தப்பட்டபோது சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை இது பொதுத் தேர்தல் அல்ல கட்சி தேர்தலை போன்றது எனவே தான் சமூக அக்கறையோடு இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன் காங்கிரஸ் கட்சியானது ஜனநாயக முறையில் இயங்கி வருகிறது எனவே எனக்கு காங்கிரஸ் ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன் ஏற்கனவே குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளேன் நான் எனது தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் தேர்தலில் போட்டியிடுகிறேன் இதற்காக கட்சியை எதிர்த்து நான் போட்டியிடவில்லை என்றார் இருப்பினும் தற்போது திமுக காங்கிரஸ் கூட்டணியில் உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர் வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு சம்பவம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது அதாவது வேலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்துக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர் இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவரே தேர்தலில் போட்டியிடுவதால் காங்கிரஸ் வட்டாரத்தில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதுConclusion:
Last Updated : Jul 18, 2019, 7:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.