ETV Bharat / state

சிறுமி பாலியல் தொழில் வழக்கு - தேடப்பட்டுவந்த பெண் கைது

author img

By

Published : Feb 9, 2020, 8:13 PM IST

திருப்பத்தூர்: ஆம்பூரில் 17 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் தேடப்பட்டு வந்த பெண்ணை காவல் துறையினர் ஆந்திர மாநிலம் திருப்பதியில் கைது செய்துள்ளனர்.

thirupathi
thirupathi

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த உமராபாத் பகுதியில் கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் அதிமுக மாவட்ட பிரதிநிதி பிரேமா மற்றும் சிறுமியின் தாய் லதா ஆகியோர் கடந்த மாதம் 31ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

ஆம்பூர் மகளிர் காவல் நிலையம்

இதனால் பிரேமா மாவட்ட பிரதிநிதி பதவியிலிருந்து நீக்கப்பட்டார். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய காட்பாடி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பவரைக் காவல் துறையினர் தேடி வந்தனர். அதைத்தொடர்ந்து காவல் துறையினர் இன்று லட்சுமியின் செல்போன் சிக்னலை வைத்து அவர் ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருப்பதைக் கண்டறிந்தனர்.

உடனே தனிப்படை காவல் துறையினர் அங்கு விரைந்து அவரைக் கைது செய்து ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துவந்தனர். அதன்பின் அவர், குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: 12 வயது சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு - நான்கு பேர் கைது

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த உமராபாத் பகுதியில் கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் அதிமுக மாவட்ட பிரதிநிதி பிரேமா மற்றும் சிறுமியின் தாய் லதா ஆகியோர் கடந்த மாதம் 31ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

ஆம்பூர் மகளிர் காவல் நிலையம்

இதனால் பிரேமா மாவட்ட பிரதிநிதி பதவியிலிருந்து நீக்கப்பட்டார். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய காட்பாடி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பவரைக் காவல் துறையினர் தேடி வந்தனர். அதைத்தொடர்ந்து காவல் துறையினர் இன்று லட்சுமியின் செல்போன் சிக்னலை வைத்து அவர் ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருப்பதைக் கண்டறிந்தனர்.

உடனே தனிப்படை காவல் துறையினர் அங்கு விரைந்து அவரைக் கைது செய்து ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துவந்தனர். அதன்பின் அவர், குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: 12 வயது சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு - நான்கு பேர் கைது

Intro:Body:ஆம்பூரில் 17 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் தேடப்பட்டு வந்த மற்றொரு பெண் கைது ஆந்திர மாநிலம் திருப்பதியில் கைது 


திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உமராபாத் பகுதியில் கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய உமராபாத் வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவரும் அதிமுக பெண் பிரமுகருமான பிரேமா  மற்றும் பெங்களூரு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியின் தாய் லதா ஆகியோர் 31.01.2020 அன்று கைது செய்தனர் இந்நிலையில் அதிமுக  கட்சியில் பிரேமா வகித்து வந்த மாவட்ட பிரதிநிதி பொறுப்பிலிருந்து  அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இவரை நீக்கி உத்தரவிட்டுள்ளனர் மேலும் வேலூர்  காட்பாடி காந்திநகர் பகுதியை சேர்ந்த லட்சுமியை தேடி வந்த நிலையில் இன்று லட்சுமியின் செல்போன் எண்ணை சிக்னல் வைத்து கண்டுபிடித்த தனிப்படை போலீசார் லட்சுமியை ஆந்திர மாநிலம் திருப்பதியில் கைது செய்தனர் பின்னர் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த தனிப்படை ஆய்வாளர் நிர்மலா தலைமையிலான போலீசார் ஆம்பூரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் அதன் பெயரில் ஏற்கனவே இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரேமா மற்றும் லட்சுமி ஆகியோர் சிறையில் உள்ள நிலையில் ஆம்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர் படுத்தி லட்சுமியை தற்போது வேலூர் பெண்கள் மத்திய சிறையில் அடைத்தனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.