ETV Bharat / state

மணிப்பூர் வன்முறை: தமிழ்நாடு முழுவதும் அமைதி பேரணி நடத்த தமிழக ஆயர் சங்கம் அறிவிப்பு!

மணிப்பூர் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், வருகிற ஜூலை 2ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் அமைதி பேரணி நடத்தப் போவதாக தமிழக ஆயர் பேரவை அறிவித்து உள்ளது.

author img

By

Published : Jun 30, 2023, 1:57 PM IST

தமிழகம் முழுவதும் அமைதி பேரணி நடத்த தமிழக ஆயர் சங்கம் அறிவிப்பு
தமிழகம் முழுவதும் அமைதி பேரணி நடத்த தமிழக ஆயர் சங்கம் அறிவிப்பு
தமிழகம் முழுவதும் அமைதி பேரணி நடத்த தமிழக ஆயர் சங்கம் அறிவிப்பு

திருச்சி: மேலப்புதூர் பகுதியில் உள்ள தூய மரியன்னை ஆலய மண்டபத்தில் தமிழக ஆயர் பேரவை சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக ஆயர் பேரவை தலைவர் பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி, மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி, பாளையங்கோட்டை மறைமாவட்டம் ஆயர் அந்தோணிசாமி, திருச்சி மறைமாவட்டம் ஆயர் ஆரோக்கியராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி, “இந்தியாவில் வடகிழக்கில் அமைந்துள்ள மிகச்சிறிய மாநிலம், மணிப்பூர். இங்கு கடந்த இரு மாதங்களாக வன்முறையால் நூற்றுக்கு மேல் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். வீடுகள், குடியிருப்புக்கள், உடமைகள் என அனைத்தும் எரிக்கப்பட்டுள்ளன. ஏறத்தாழ 300 தேவாலயங்கள் திட்டமிட்டுத் தாக்கப்பட்டுள்ளன.

புனிதப் பொருட்கள் சூறையாடப்பட்டு உள்ளன. உயிருக்கு அஞ்சி ஊர்களிலிருந்து இடம் பெயர்ந்து காடுகளிலும், முகாம்களிலும் ஏறத்தாழ 30 ஆயிரம் மக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். கடந்த மே மாதம் பழங்குடி மாணவரமைப்பு ஊர்வலம் நடத்திய அன்று வெடித்த வன்முறை 50 நாட்கள் கடந்து இன்றும் தொடர்கிறது. மேலும் மணிப்பூரில் 53 சதவீதம் ‘மெய்தி’ (Meit) இனத்தவரும், 41 சதவீதம், ‘குகா (Kuka), ‘மீசோ’ (Mizo) மற்றும் ‘நாகா’ (Nagi) போன்ற பழங்குடிகளும் வாழ்கின்றனர்.

மெய்தி சமூகத்தினரைப் பழங்குடியினப் பட்டியலில் சேர்ப்பதற்கான அறிக்கை: பெரும்பாலும் ‘மெய்தி’ இனத்தவர் சமவெளிகளிலும், பழங்குடியினர் மலைப்பகுதிகளிலும் வாழ்கின்றனர். அடிப்படையில் மெய்தி இனத்தவர் சமூக, அரசியல் பொருளாதார வலிமை பெற்றுள்ளனர். பழங்குடியின மக்களோ சற்றுப் பின் தங்கியவர்கள்.

ஆனால், தங்களையும் பழங்குடியினப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என மெய்தி இனத்தவர்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில், மெய்தி சமூகத்தினரை பழங்குடியினப் பட்டியலில் சேர்ப்பதற்கான அறிக்கையை மத்திய அரசுக்கு அளிக்க வேண்டுமென கடந்த ஏப்ரல் 19, 2023 அன்று மணிப்பூர் உயர் நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த முடிவு தங்களின் நிலம் மற்றும் உரிமைகளைப் பறிக்குமென பழங்குடியினர் அஞ்சினர். அதற்காகப் பழங்குடிகள் ஊர்வலம் நடத்தியபோதே கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். சிலர் கொல்லப்பட்டனர். குறிப்பாக தலைநகர் இம்பால் மற்றும் மெய்தி மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளிலிருந்து குகி இனத்தவர் வேட்டையாடப்பட்டு உள்ளனர். மேலும், குகி இனத்தவர் அதிகமாக வாழும் கிராமங்களிலிருந்தும் மெய்தி இனத்தவர் உயிர் தப்பி ஓடியுள்ளனர்.

அண்டை மாநிலங்களுக்கு தஞ்சம்: இருதரப்பிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கிராமங்கள் சூறையாடப்பட்டுள்ளன. பலர் உயிருக்கு அஞ்சி, தங்கள் வீடு வாசலைத் துறந்து முகாம்களில் அடைக்கலம் புகுந்துள்ளனர். மேலும், தற்காலிக முகாம்களில் அடிப்படை வசதிகளின்றி, மக்கள் அலைமோதுகின்றனர். பலர் மிசோராம் போன்ற அண்டை மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். குறிப்பாக கல்வி பயிலும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வன்முறையை நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்றாட வாழ்க்கைக்கான உணவு, மருந்து பொருட்கள் உள்பட அனைத்திற்கும் கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மேலும், இரு மாதங்களாக இணைய சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார். மேலும் பேசிய அவர், “மத்திய மற்றும் மாநில அரசு உடனடியாக மணிப்பூரில் நடக்கும் வன்முறையை முற்றிலும் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அங்கு அமைதியான சூழல் உருவாக வழிவகை செய்ய தமிழக ஆயர் பேரவை வலியுறுத்துகிறது.

தமிழ்நாடு முழுவதும் அமைதிப் பேரணி: இனி வரும் காலங்களில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இதனைத் தொடர்ந்து, அடுத்த மாதம் ஜூலை 2ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் அமைதிப் பேரணி, மெழுகுதிரிப் பேரணி நடைபெறும். சமூகச் செயல்பாடுகள் மூலம் மணிப்பூர் மக்களின் துயரங்களை நாம் உணர்த்திடவும். பிறருக்கு உணர்த்திடவும் முயல்வோம். அது அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தின் செய்தியாக அமையும்.

மேலும் மணிப்பூர் மக்களுக்கும், குறிப்பாக கல்வி பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும் நமது நிறுவனங்களின் மூலம் இயன்ற வழிகளில் நாம் உதவிட முயல்வோம். மணிப்பூர் மக்களின் துயர் துடைக்க தமிழக ஆயர்களின் சமூகப்பணி நிறுவனத்தின் மூலம் நம்மாலான பொருளாதார உதவிகளை செய்ய முயல்வோம்” என தமிழக ஆயர் பேரவை தலைவர் பேராயர் ஜார்ஜ் அந்தோணி சாமி திருச்சியில் அறிவித்தார்.

இதையும் படிங்க: ‘போலியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டால் உடனடி நடவடிக்கை’ - அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை!

தமிழகம் முழுவதும் அமைதி பேரணி நடத்த தமிழக ஆயர் சங்கம் அறிவிப்பு

திருச்சி: மேலப்புதூர் பகுதியில் உள்ள தூய மரியன்னை ஆலய மண்டபத்தில் தமிழக ஆயர் பேரவை சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக ஆயர் பேரவை தலைவர் பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி, மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி, பாளையங்கோட்டை மறைமாவட்டம் ஆயர் அந்தோணிசாமி, திருச்சி மறைமாவட்டம் ஆயர் ஆரோக்கியராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி, “இந்தியாவில் வடகிழக்கில் அமைந்துள்ள மிகச்சிறிய மாநிலம், மணிப்பூர். இங்கு கடந்த இரு மாதங்களாக வன்முறையால் நூற்றுக்கு மேல் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். வீடுகள், குடியிருப்புக்கள், உடமைகள் என அனைத்தும் எரிக்கப்பட்டுள்ளன. ஏறத்தாழ 300 தேவாலயங்கள் திட்டமிட்டுத் தாக்கப்பட்டுள்ளன.

புனிதப் பொருட்கள் சூறையாடப்பட்டு உள்ளன. உயிருக்கு அஞ்சி ஊர்களிலிருந்து இடம் பெயர்ந்து காடுகளிலும், முகாம்களிலும் ஏறத்தாழ 30 ஆயிரம் மக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். கடந்த மே மாதம் பழங்குடி மாணவரமைப்பு ஊர்வலம் நடத்திய அன்று வெடித்த வன்முறை 50 நாட்கள் கடந்து இன்றும் தொடர்கிறது. மேலும் மணிப்பூரில் 53 சதவீதம் ‘மெய்தி’ (Meit) இனத்தவரும், 41 சதவீதம், ‘குகா (Kuka), ‘மீசோ’ (Mizo) மற்றும் ‘நாகா’ (Nagi) போன்ற பழங்குடிகளும் வாழ்கின்றனர்.

மெய்தி சமூகத்தினரைப் பழங்குடியினப் பட்டியலில் சேர்ப்பதற்கான அறிக்கை: பெரும்பாலும் ‘மெய்தி’ இனத்தவர் சமவெளிகளிலும், பழங்குடியினர் மலைப்பகுதிகளிலும் வாழ்கின்றனர். அடிப்படையில் மெய்தி இனத்தவர் சமூக, அரசியல் பொருளாதார வலிமை பெற்றுள்ளனர். பழங்குடியின மக்களோ சற்றுப் பின் தங்கியவர்கள்.

ஆனால், தங்களையும் பழங்குடியினப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என மெய்தி இனத்தவர்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில், மெய்தி சமூகத்தினரை பழங்குடியினப் பட்டியலில் சேர்ப்பதற்கான அறிக்கையை மத்திய அரசுக்கு அளிக்க வேண்டுமென கடந்த ஏப்ரல் 19, 2023 அன்று மணிப்பூர் உயர் நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த முடிவு தங்களின் நிலம் மற்றும் உரிமைகளைப் பறிக்குமென பழங்குடியினர் அஞ்சினர். அதற்காகப் பழங்குடிகள் ஊர்வலம் நடத்தியபோதே கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். சிலர் கொல்லப்பட்டனர். குறிப்பாக தலைநகர் இம்பால் மற்றும் மெய்தி மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளிலிருந்து குகி இனத்தவர் வேட்டையாடப்பட்டு உள்ளனர். மேலும், குகி இனத்தவர் அதிகமாக வாழும் கிராமங்களிலிருந்தும் மெய்தி இனத்தவர் உயிர் தப்பி ஓடியுள்ளனர்.

அண்டை மாநிலங்களுக்கு தஞ்சம்: இருதரப்பிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கிராமங்கள் சூறையாடப்பட்டுள்ளன. பலர் உயிருக்கு அஞ்சி, தங்கள் வீடு வாசலைத் துறந்து முகாம்களில் அடைக்கலம் புகுந்துள்ளனர். மேலும், தற்காலிக முகாம்களில் அடிப்படை வசதிகளின்றி, மக்கள் அலைமோதுகின்றனர். பலர் மிசோராம் போன்ற அண்டை மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். குறிப்பாக கல்வி பயிலும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வன்முறையை நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்றாட வாழ்க்கைக்கான உணவு, மருந்து பொருட்கள் உள்பட அனைத்திற்கும் கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மேலும், இரு மாதங்களாக இணைய சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார். மேலும் பேசிய அவர், “மத்திய மற்றும் மாநில அரசு உடனடியாக மணிப்பூரில் நடக்கும் வன்முறையை முற்றிலும் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அங்கு அமைதியான சூழல் உருவாக வழிவகை செய்ய தமிழக ஆயர் பேரவை வலியுறுத்துகிறது.

தமிழ்நாடு முழுவதும் அமைதிப் பேரணி: இனி வரும் காலங்களில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இதனைத் தொடர்ந்து, அடுத்த மாதம் ஜூலை 2ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் அமைதிப் பேரணி, மெழுகுதிரிப் பேரணி நடைபெறும். சமூகச் செயல்பாடுகள் மூலம் மணிப்பூர் மக்களின் துயரங்களை நாம் உணர்த்திடவும். பிறருக்கு உணர்த்திடவும் முயல்வோம். அது அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தின் செய்தியாக அமையும்.

மேலும் மணிப்பூர் மக்களுக்கும், குறிப்பாக கல்வி பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும் நமது நிறுவனங்களின் மூலம் இயன்ற வழிகளில் நாம் உதவிட முயல்வோம். மணிப்பூர் மக்களின் துயர் துடைக்க தமிழக ஆயர்களின் சமூகப்பணி நிறுவனத்தின் மூலம் நம்மாலான பொருளாதார உதவிகளை செய்ய முயல்வோம்” என தமிழக ஆயர் பேரவை தலைவர் பேராயர் ஜார்ஜ் அந்தோணி சாமி திருச்சியில் அறிவித்தார்.

இதையும் படிங்க: ‘போலியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டால் உடனடி நடவடிக்கை’ - அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.