ETV Bharat / state

ராமஜெயம் கொலை வழக்கு: மருத்துவ பரிசோதனை நிறைவு

ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்படும் நபர்களுக்கு இன்று திருச்சி அரசு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது.

author img

By

Published : Nov 20, 2022, 6:54 AM IST

Etv Bharat
Etv Bharat

திருச்சி: தற்போதைய தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்த 12 பேருக்கும் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, மருத்துவ அறிக்கையுடன் வரும் 21ஆம் தேதி குற்றவியல் நீதிமன்றம் எண் 6-ல் ஆஜராக நீதிபதி சிவகுமார் உத்தரவிட்டிருந்தார்.

இந்தநிலையில் அந்த 12 பேரில், திலீப், சாமி ரவி, சிவா, சத்யராஜ், ராஜ்குமார், சுரேந்தர் ஆகிய 6 பேரும் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் நவ.19 மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.

மீதமுள்ள கலைவாணன், மாரிமுத்து, திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ் தற்போது திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு தற்போது மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இதையும் படிங்க: ராமஜெயம் கொலை வழக்கு: உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒருவர் மறுப்பு

திருச்சி: தற்போதைய தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்த 12 பேருக்கும் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, மருத்துவ அறிக்கையுடன் வரும் 21ஆம் தேதி குற்றவியல் நீதிமன்றம் எண் 6-ல் ஆஜராக நீதிபதி சிவகுமார் உத்தரவிட்டிருந்தார்.

இந்தநிலையில் அந்த 12 பேரில், திலீப், சாமி ரவி, சிவா, சத்யராஜ், ராஜ்குமார், சுரேந்தர் ஆகிய 6 பேரும் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் நவ.19 மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.

மீதமுள்ள கலைவாணன், மாரிமுத்து, திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ் தற்போது திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு தற்போது மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இதையும் படிங்க: ராமஜெயம் கொலை வழக்கு: உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒருவர் மறுப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.