ETV Bharat / state

திருச்சி விமான நிலையத்தில் முதலமைச்சருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு!

author img

By

Published : Oct 22, 2020, 11:21 AM IST

திருச்சி விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருச்சி விமான நிலையத்தில்  முதலமைச்சருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு
திருச்சி விமான நிலையத்தில் முதலமைச்சருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று (அக். 22) காலை திருச்சி வந்தார்.

திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பரமேஸ்வரி, செல்வராஜ், சந்திரசேகர், மாவட்ட செயலாளர்கள் பரஞ்சோதி, குமார், திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, ஆவின் தலைவர் கார்த்திகேயன், அதிமுக நிர்வாகிகள், அரசு அலுவலர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோர் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

மேலும், தாரை தப்பட்டைகள், பேண்டு வாத்தியங்கள் முழங்க அதிமுகவினர் முதலமைச்சருக்கு வரவேற்பளித்தனர். அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காரில் ஏறி நின்று தொண்டர்களை பார்த்து கை அசைத்து உற்சாகப்படுத்தினார்.

இதையடுத்து கார் மூலம் முதலமைச்சர் விராலிமலை புறப்பட்டுச் சென்றார். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு விமான நிலையம் மற்றும் அவர் பயணித்த சாலைகளில் பலத்த காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

இதையும் படிங்க...சோத்துப்பாறை நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று (அக். 22) காலை திருச்சி வந்தார்.

திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பரமேஸ்வரி, செல்வராஜ், சந்திரசேகர், மாவட்ட செயலாளர்கள் பரஞ்சோதி, குமார், திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, ஆவின் தலைவர் கார்த்திகேயன், அதிமுக நிர்வாகிகள், அரசு அலுவலர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோர் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

மேலும், தாரை தப்பட்டைகள், பேண்டு வாத்தியங்கள் முழங்க அதிமுகவினர் முதலமைச்சருக்கு வரவேற்பளித்தனர். அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காரில் ஏறி நின்று தொண்டர்களை பார்த்து கை அசைத்து உற்சாகப்படுத்தினார்.

இதையடுத்து கார் மூலம் முதலமைச்சர் விராலிமலை புறப்பட்டுச் சென்றார். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு விமான நிலையம் மற்றும் அவர் பயணித்த சாலைகளில் பலத்த காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

இதையும் படிங்க...சோத்துப்பாறை நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.