ETV Bharat / state

டெங்கு காய்ச்சலால் ஒரு உயிர்கூட போகாது - அமைச்சர் விஜயபாஸ்கர்

author img

By

Published : Sep 9, 2019, 9:09 PM IST

திருச்சி: டெங்கு காய்ச்சல் காரணமாக ஒரு உயிரிழப்புகூட ஏற்படாது என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

டெங்கு காய்ச்சலால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாது - அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

திருச்சி மாவட்டம் கலையரங்கத்தில் உள்ளாட்சித் துறை சார்பில் இன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் பேட்டி

அப்போது, ”செப்டம்பர், அக்டோபர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களில் பருவ நிலை மாற்றம் காரணமாக மழையை எதிர்நோக்கி தமிழ்நாடு முழுவதும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சித் துறை சார்பில் 1.63 லட்சம் களப்பணியாளர்கள் மூலம் கொசு உற்பத்தியாகும் பகுதிகளை கண்டறிந்து அழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் டெங்கு போன்ற காய்ச்சல் காரணமாக ஒரு உயிரிழப்புகூட ஏற்படக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது” என்றார்.

திருச்சி மாவட்டம் கலையரங்கத்தில் உள்ளாட்சித் துறை சார்பில் இன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் பேட்டி

அப்போது, ”செப்டம்பர், அக்டோபர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களில் பருவ நிலை மாற்றம் காரணமாக மழையை எதிர்நோக்கி தமிழ்நாடு முழுவதும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சித் துறை சார்பில் 1.63 லட்சம் களப்பணியாளர்கள் மூலம் கொசு உற்பத்தியாகும் பகுதிகளை கண்டறிந்து அழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் டெங்கு போன்ற காய்ச்சல் காரணமாக ஒரு உயிரிழப்புகூட ஏற்படக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது” என்றார்.

Intro:டெங்கு காய்ச்சல் காரணமாக ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.


Body:திருச்சி: டெங்கு காய்ச்சல் காரணமாக ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
உள்ளாட்சி துறை சார்பில் திருச்சி கலையரங்கத்தில் இன்று நடந்த கலந்தாய்வு கூட்டத்திற்கு பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
செப்டம்பர், அக்டோபர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களில் பருவ நிலை மாற்றம் காரணமாக மழையை எதிர்நோக்கி பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி சென்னையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. சென்னையிலுள்ள அனைத்து வார்டுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 1.63 லட்சம் களப்பணியாளர்கள் மூலம் கொசு உற்பத்தியாகும் பகுதிகளை கண்டறிந்து அழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உள்ளாட்சித் துறை சார்பில் இந்த களப்பணியாளர்கள் கொசு ஒழிப்பு பணியில் சுகாதாரத் துறையுடன் இணைந்து செயல்படுகிறார்கள். 3 மாதங்களுக்கு இரு துறைகள் இணைந்து செயல்படும். தற்போது திருச்சியில் நடந்த 7 மாவட்ட ஆலோசனைக் கூட்டத்திலும் கொசு ஒழிப்பு நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. தண்ணீரை மூடி வைக்க வேண்டும். தினமும் தண்ணீர் வினியோகம் நடைபெறுவதால் தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. டெங்கு போன்ற காய்ச்சல் காரணமாக ஒரு உயிரிழப்பு கூட ஏற்படக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. தற்போதைய சூழ்நிலை அனைத்தும் சுகாதார துறையின் கட்டுக்குள் உள்ளது என்றார்.


Conclusion:கொசு உற்பத்தியாகும் பகுதிகளை கண்டறிந்து அழிக்கும் பணி நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.