ETV Bharat / state

அமைச்சர் வளர்மதிக்கு கரோனா தொற்று உறுதி

திருச்சி: அமைச்சர் வளர்மதிக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

author img

By

Published : Apr 29, 2021, 10:34 PM IST

அமைச்சர் வளர்மதிக்கு கரோனா தொற்று உறுதி
அமைச்சர் வளர்மதிக்கு கரோனா தொற்று உறுதி

கரோனா இரண்டாவது அலை தமிழ்நாட்டில் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தினமும் ஆயிரக்கணக்கானோருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது.

முக்கிய புள்ளிகள், அரசியல்வாதிகள், வேட்பாளர்கள், அரசு அலுவலர்கள் என யாரும் கரோனா தாக்குதலுக்கு தப்ப முடியவில்லை. இந்த வகையில் திருச்சி ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான வளர்மதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் திருச்சி அப்போலோ மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையும் படிங்க: பெண் தூய்மைப் பணியாளர்களைத் தாக்கிய இளைஞர்கள்- காவல்துறை விசாரணை!

கரோனா இரண்டாவது அலை தமிழ்நாட்டில் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தினமும் ஆயிரக்கணக்கானோருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது.

முக்கிய புள்ளிகள், அரசியல்வாதிகள், வேட்பாளர்கள், அரசு அலுவலர்கள் என யாரும் கரோனா தாக்குதலுக்கு தப்ப முடியவில்லை. இந்த வகையில் திருச்சி ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான வளர்மதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் திருச்சி அப்போலோ மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையும் படிங்க: பெண் தூய்மைப் பணியாளர்களைத் தாக்கிய இளைஞர்கள்- காவல்துறை விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.