ETV Bharat / state

பணி சுமை காரணமாக மருத்துவ மாணவி தூக்கிட்டு தற்கொலை- திருச்சியில் சோகம் - திருச்சி அரசு மருத்துவ கல்லூரி

திருச்சி: மருத்துவக் கல்லூரி மாணவி விடுதியில், மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி கயல்விழி
author img

By

Published : Aug 24, 2019, 6:54 PM IST

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள அம்புஜம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் கயல்விழி. இவர் திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவப்படிப்பு படித்துவந்தார்.

இதற்கிடையே இவருக்கும், மருத்துவர் சக்தி கணேசன் என்பவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. அவர் சேலத்தில் மருத்துவராக உள்ளார்.

இந்நிலையில் இன்று காலையில் கயல்விழி தங்கியிருந்த அறை நீண்ட நேரமாகியும் திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த சக மாணவிகள் அறைக் கதவை உடைத்து பார்த்தபோது, அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. உடனே இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்துகொண்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள அம்புஜம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் கயல்விழி. இவர் திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவப்படிப்பு படித்துவந்தார்.

இதற்கிடையே இவருக்கும், மருத்துவர் சக்தி கணேசன் என்பவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. அவர் சேலத்தில் மருத்துவராக உள்ளார்.

இந்நிலையில் இன்று காலையில் கயல்விழி தங்கியிருந்த அறை நீண்ட நேரமாகியும் திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த சக மாணவிகள் அறைக் கதவை உடைத்து பார்த்தபோது, அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. உடனே இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்துகொண்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Intro:திருச்சி மருத்துவக் கல்லூரி மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.Body:திருச்சி:

திருச்சி மருத்துவக் கல்லூரி மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர் மாவட்டம் அம்புஜவல்லி பேட்டையை சேர்ந்தவர் தென்னிவளவன். ஓய்வுபெற்ற விஏஓ. இவரது மகள் கயல்விழி (22). இவர் திருச்சி கி ஆ பெ விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு எம்எஸ் படித்து வந்தார். மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார். இவருக்கு கடந்த 40 தினங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவரது கணவர் சக்திகணேஷ். இவர் சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்எஸ் படித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை கயல்விழி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த கண்டோன்மென்ட் போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே கயல்விழியின் உறவினர்கள் கயல்விழியின் உடலில் காயங்கள் இருப்பதாக போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து அவர்கள் கண்டோன்மென்ட் மகளிர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். பின்னர் போலீசார் சமரசம் செய்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கயல்விழியை எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கயல்விழியை எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.