ETV Bharat / state

பாஜகவின் பிடியிலிருந்து அதிமுகவால் விலக முடியாது - ஜவாஹிருல்லா எம்எல்ஏ பேச்சு

author img

By

Published : Jun 13, 2023, 7:54 AM IST

திருச்சியில் நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாக குழு கூட்டத்தில் முஸ்லீம் சிறைவாசிகளை விடுதலை செய்யவும், அதிமுக மற்றும் நீட் தேர்வு குறித்தும் அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டு பேசினார்.

பேட்டியளித்த மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா
பேட்டியளித்த மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா
பேட்டியளித்த மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா

திருச்சி: மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகக் குழு கூட்டம் திருச்சியில் நேற்று (ஜூன் 12) நடைபெற்றது. இந்த கூட்டமானது மனிதநேய மக்கள் கட்சி மாநிலத் தலைவரும், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய ஜவாஹிருல்லா, “20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு சிறைச் சாலைகளில் உள்ள முஸ்லீம் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பல முறை இது குறித்து பேசி உள்ளோம்.

37 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை குறித்து தமிழ்நாடு அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது தமிழ்நாட்டின் கவனத்தை ஈர்த்த வழக்குகளில் பலர் விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள். அதேப் போல தற்போதைய அரசும் முஸ்லீம் சிறைவாசிகள் விடுதலையில் கவனம் செலுத்தி, இது குறித்து அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வருகிற ஜீலை 9ஆம் தேதி கோவை மத்திய சிறைச் சாலையை முற்றுகையிடும் போராட்டம் நடத்த உள்ளோம். திமுக அரசு ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் அவர்கள் அளித்த பல தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார்கள். கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு முஸ்லீம் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்” என கூறினார்.

மேலும் பேசிய அவர் “நேற்று தமிழ்நாடு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜகவினரை உற்சாகமூட்டவே தமிழ்நாட்டில் 25 எம்பிக்கள் வெற்றி பெறுவார்கள் என பேசி உள்ளார். ஒரு படி மேலே போய் அவர் தமிழர் ஒருவர்தான் பிரதமர் ஆவார் என கூறி இருக்கிறார். தற்போதைய பிரதமர் மோடி மீது அவருக்கு என்ன கடுப்போ தெரியவில்லை.

ஆனால், தமிழ்நாடு பாசிசத்திற்கு ஆதரவாக மதச்சார்பின்மைக்கும், ஜனநாயகத்திற்கும் எதிராக அரசியலமைப்புச் சட்டத்தையே மதிக்காத பாஜகவையும், அவர்களுடன் கூட்டணி வைப்பவர்களையும் ஒன்று சேர்ந்து முறியடிக்கும். பள்ளிகொண்டாவில் அமித்ஷா பேசிய பேச்சு பள்ளிக்கூட மாணவரை போன்ற கற்பனையான பேச்சுதான் என்ற அளவில்தான் எடுத்துக் கொள்ள முடியும்.

ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். நடிகர்களாக இருப்பதாலேயே அவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்பதில்லை. ஆனால், அரசியலுக்கு வருவதற்கு முன்பு உள்ள நிலையும், அரசியலுக்கு வந்த பின்பு உள்ள எதார்த்த நிலையும் வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அதிமுகவும், பாஜகவும் கூட்டணியில் இருந்து பிரிவார்கள் என கூறுவது நாடகம்தான். பாஜகவின் கடும் பிடியிலிருந்து, கொடும் பிடியிலிருந்து, அடிமை பிடியிலிருந்து அதிமுகவால் விலகி வர முடியாது. நீட் தேர்வைக் கொண்டு வந்து தமிழ்நாடு மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்தது போல, தற்போது அகில இந்திய அளவில் மருத்துவத்திற்கு ஒரே கலந்தாய்வு வைப்பது என்பது தவறான முடிவு. இது மாணவர்களின் மருத்துவ கனவை பாதிக்கும். மத்திய அரசின் இந்த முடிவை தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: Minister Moorthy: "சிபாரிசு செய்த மாணவிகளுக்கு சீட் தராததால் காலேஜ் அப்ரூவலுக்கு அலையவிட்டேன்" - அமைச்சர் மூர்த்தி சர்ச்சை பேச்சு!

பேட்டியளித்த மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா

திருச்சி: மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகக் குழு கூட்டம் திருச்சியில் நேற்று (ஜூன் 12) நடைபெற்றது. இந்த கூட்டமானது மனிதநேய மக்கள் கட்சி மாநிலத் தலைவரும், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய ஜவாஹிருல்லா, “20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு சிறைச் சாலைகளில் உள்ள முஸ்லீம் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பல முறை இது குறித்து பேசி உள்ளோம்.

37 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை குறித்து தமிழ்நாடு அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது தமிழ்நாட்டின் கவனத்தை ஈர்த்த வழக்குகளில் பலர் விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள். அதேப் போல தற்போதைய அரசும் முஸ்லீம் சிறைவாசிகள் விடுதலையில் கவனம் செலுத்தி, இது குறித்து அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வருகிற ஜீலை 9ஆம் தேதி கோவை மத்திய சிறைச் சாலையை முற்றுகையிடும் போராட்டம் நடத்த உள்ளோம். திமுக அரசு ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் அவர்கள் அளித்த பல தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார்கள். கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு முஸ்லீம் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்” என கூறினார்.

மேலும் பேசிய அவர் “நேற்று தமிழ்நாடு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜகவினரை உற்சாகமூட்டவே தமிழ்நாட்டில் 25 எம்பிக்கள் வெற்றி பெறுவார்கள் என பேசி உள்ளார். ஒரு படி மேலே போய் அவர் தமிழர் ஒருவர்தான் பிரதமர் ஆவார் என கூறி இருக்கிறார். தற்போதைய பிரதமர் மோடி மீது அவருக்கு என்ன கடுப்போ தெரியவில்லை.

ஆனால், தமிழ்நாடு பாசிசத்திற்கு ஆதரவாக மதச்சார்பின்மைக்கும், ஜனநாயகத்திற்கும் எதிராக அரசியலமைப்புச் சட்டத்தையே மதிக்காத பாஜகவையும், அவர்களுடன் கூட்டணி வைப்பவர்களையும் ஒன்று சேர்ந்து முறியடிக்கும். பள்ளிகொண்டாவில் அமித்ஷா பேசிய பேச்சு பள்ளிக்கூட மாணவரை போன்ற கற்பனையான பேச்சுதான் என்ற அளவில்தான் எடுத்துக் கொள்ள முடியும்.

ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். நடிகர்களாக இருப்பதாலேயே அவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்பதில்லை. ஆனால், அரசியலுக்கு வருவதற்கு முன்பு உள்ள நிலையும், அரசியலுக்கு வந்த பின்பு உள்ள எதார்த்த நிலையும் வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அதிமுகவும், பாஜகவும் கூட்டணியில் இருந்து பிரிவார்கள் என கூறுவது நாடகம்தான். பாஜகவின் கடும் பிடியிலிருந்து, கொடும் பிடியிலிருந்து, அடிமை பிடியிலிருந்து அதிமுகவால் விலகி வர முடியாது. நீட் தேர்வைக் கொண்டு வந்து தமிழ்நாடு மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்தது போல, தற்போது அகில இந்திய அளவில் மருத்துவத்திற்கு ஒரே கலந்தாய்வு வைப்பது என்பது தவறான முடிவு. இது மாணவர்களின் மருத்துவ கனவை பாதிக்கும். மத்திய அரசின் இந்த முடிவை தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: Minister Moorthy: "சிபாரிசு செய்த மாணவிகளுக்கு சீட் தராததால் காலேஜ் அப்ரூவலுக்கு அலையவிட்டேன்" - அமைச்சர் மூர்த்தி சர்ச்சை பேச்சு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.