ETV Bharat / state

ஆண்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் நீதிபதி: குற்றம்சாட்டி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் - ஆண்களுக்கு ஆதரவாக செயல்படும் நீதிபதி

திருச்சி மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதியை பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
author img

By

Published : Mar 16, 2022, 5:43 PM IST

திருச்சி: திருச்சி மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் மணிவாசகன். இவரிடம் பல்வேறு குடும்ப நல வழக்குகள், ஆண்களால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த வழக்குகள் விசாரணைக்கு வரும்.

இந்த வழக்குகளை மணிவாசகன் முறையாக விசாரணை செய்யாமல் எல்லா வழக்குகளிலும் பெண்களுக்கு எதிராகவே தீர்ப்பு வழங்குவதாகவும், தொடர்ந்து அவரிடம் வரும் வழக்குகளில் பெண்களுக்கு எதிராகவும், ஆண்களுக்கு ஆதரவாகவும் செயல்படுகிறார் எனவும் ஏற்கெனவே இவர் மீது புகார்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

இந்தநிலையில் அவரைப் பணியிடை நீக்கம் செய்யாமல் விசாரணை செய்வதை ஏற்றுக்கொள்ளமுடியாது எனக்கூறி நீதிபதியை கண்டித்தும், உடனடியாக அவரை பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தியும் திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் இன்று(மார்ச் 16) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க: சென்னை அண்ணாநகர் கட்டடத்தில் தீ விபத்து - 6 பேர் சிக்கித்தவிப்பு

திருச்சி: திருச்சி மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் மணிவாசகன். இவரிடம் பல்வேறு குடும்ப நல வழக்குகள், ஆண்களால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த வழக்குகள் விசாரணைக்கு வரும்.

இந்த வழக்குகளை மணிவாசகன் முறையாக விசாரணை செய்யாமல் எல்லா வழக்குகளிலும் பெண்களுக்கு எதிராகவே தீர்ப்பு வழங்குவதாகவும், தொடர்ந்து அவரிடம் வரும் வழக்குகளில் பெண்களுக்கு எதிராகவும், ஆண்களுக்கு ஆதரவாகவும் செயல்படுகிறார் எனவும் ஏற்கெனவே இவர் மீது புகார்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

இந்தநிலையில் அவரைப் பணியிடை நீக்கம் செய்யாமல் விசாரணை செய்வதை ஏற்றுக்கொள்ளமுடியாது எனக்கூறி நீதிபதியை கண்டித்தும், உடனடியாக அவரை பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தியும் திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் இன்று(மார்ச் 16) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க: சென்னை அண்ணாநகர் கட்டடத்தில் தீ விபத்து - 6 பேர் சிக்கித்தவிப்பு

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.