ETV Bharat / state

சிறுநீரக தானம்: திருச்சியில் லேப்ராஸ்கோப்பி சிகிச்சை அறிமுகம் - உலக சிறுநீரக தினம்

திருச்சி: சிறுநீரக தானம் செய்வோருக்கு லேப்ராஸ்கோப்பி மூலம் அறுவை சிகிச்சை செய்யும் முறை திருச்சியில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Laproscopy_trichy
author img

By

Published : Mar 14, 2019, 7:09 PM IST

திருச்சி அப்போலோ மருத்துவமனையில் உலக சிறுநீரக தினம் இன்று கொண்டாடப்பட்டது. விழாவில் மருத்துவமனையின் சிறுநீரக அறுவை சிகிச்சை சிறப்பு நிபுணர் டாக்டர் வேல் அரவிந்த் கூறுகையில்,

ஆண்டுதோறும், மார்ச் மாதம் இரண்டாவது வியாழக்கிழமை உலக சிறுநீரக தினமாக கடைபிடிக்கப்படுகிறது. உயிரிழப்பை ஏற்படுத்தும் நோய்களில் சிறுநீரகத் தொற்று ஆறாவது இடத்தில் உள்ளது. சிறுநீரக பாதிப்பை முன்கூட்டியே தவிர்ப்பது குறித்த கருத்து தற்போது உலகம் முழுவதும் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. சிறுநீரக பரிசோதனை என்பது வெறும் 300 ரூபாயில் செய்துவிட முடியும்.

Laproscopy_trichy
Laproscopy_trichy

சிறுநீரக பாதிப்பு என்பது ஒரு நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கக் கூடியதாகும். இந்த சூழ்நிலையில் சிறுநீரக தானம் செய்வோர் தெய்வத்திற்கு சமமானவர்கள். இதன் காரணமாக சிறுநீரக தானம் செய்வோருக்கு லேப்ராஸ்கோப்பி (Laparoscopy) மூலம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இதன்மூலம் சிறுநீரக தானம் செய்வோர் மூன்று முதல் நான்கு நாட்களுக்குள் வீடு திரும்பலாம்.

திருச்சியிலேயே முதன்முறையாக லேப்ராஸ்கோப்பி சிகிச்சை இங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. திருச்சி அப்போலோ மருத்துவமனையில் இதுவரை 50 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றார்.

திருச்சி அப்போலோ மருத்துவமனையில் உலக சிறுநீரக தினம் இன்று கொண்டாடப்பட்டது. விழாவில் மருத்துவமனையின் சிறுநீரக அறுவை சிகிச்சை சிறப்பு நிபுணர் டாக்டர் வேல் அரவிந்த் கூறுகையில்,

ஆண்டுதோறும், மார்ச் மாதம் இரண்டாவது வியாழக்கிழமை உலக சிறுநீரக தினமாக கடைபிடிக்கப்படுகிறது. உயிரிழப்பை ஏற்படுத்தும் நோய்களில் சிறுநீரகத் தொற்று ஆறாவது இடத்தில் உள்ளது. சிறுநீரக பாதிப்பை முன்கூட்டியே தவிர்ப்பது குறித்த கருத்து தற்போது உலகம் முழுவதும் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. சிறுநீரக பரிசோதனை என்பது வெறும் 300 ரூபாயில் செய்துவிட முடியும்.

Laproscopy_trichy
Laproscopy_trichy

சிறுநீரக பாதிப்பு என்பது ஒரு நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கக் கூடியதாகும். இந்த சூழ்நிலையில் சிறுநீரக தானம் செய்வோர் தெய்வத்திற்கு சமமானவர்கள். இதன் காரணமாக சிறுநீரக தானம் செய்வோருக்கு லேப்ராஸ்கோப்பி (Laparoscopy) மூலம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இதன்மூலம் சிறுநீரக தானம் செய்வோர் மூன்று முதல் நான்கு நாட்களுக்குள் வீடு திரும்பலாம்.

திருச்சியிலேயே முதன்முறையாக லேப்ராஸ்கோப்பி சிகிச்சை இங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. திருச்சி அப்போலோ மருத்துவமனையில் இதுவரை 50 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றார்.

Intro:திருச்சி அப்போலோ மருத்துவமனையில் உலக சிறுநீரக தினம் இன்று கொண்டாடப்பட்டது.


Body:திருச்சி: சிறுநீரக தானம் செய்வோருக்கு லேப்ராஸ்கோப்பி மூலம் அறுவை சிகிச்சை செய்யும் முறை திருச்சியில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி அப்போலோ மருத்துவமனையில் உலக சிறுநீரக தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதுகுறித்து மருத்துவமனையின் சிறுநீரக அறுவை சிகிச்சை சிறப்பு நிபுணர் டாக்டர் வேல் அரவிந்த் கூறுகையில், ஆண்டுதோறும் மார்ச் மாதம் இரண்டாவது வியாழக்கிழமை உலக சிறுநீரக தினமாக கடைபிடிக்கப்படுகிறது. உயிரிழப்பை ஏற்படுத்தும் நோய்களில் சிறுநீரகத் தொற்று ஆறாவது இடத்தில் உள்ளது. சிறுநீரக பாதிப்பை முன்கூட்டியே தவிர்ப்பது குறித்த கருத்து தற்போது உலகம் முழுவதும் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. எந்த நோயும் அறிகுறி இல்லாமல் வராது. ஆனால் நாம் அந்த அறிகுறிகளை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. சிறுநீரக பரிசோதனை என்பது வெறும் 300 ரூபாயில் செய்துவிட முடியும். சிறுநீரகம் என்பது நம் உடம்பின் துப்புரவுத் தொழிற்சாலை ஆகும். சிறுநீரக பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். புகையிலையை ஒழித்தால் சிறுநீரகத்தை பாதுகாக்கலாம். சிறுநீரக பாதிப்பு என்பது ஒரு நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கக் கூடியதாகும். ரத்ததானம் செய்யவே பலர் தயங்குகின்றனர். இந்த சூழ்நிலையில் சிறுநீரக தானம் செய்வோர் தெய்வத்திற்கு சமமானவர்கள். அதனால் தானம் செய்வோரை விஐபி போல் நடத்தப்பட வேண்டும். இதன் காரணமாக சிறுநீரக தானம் செய்வோருக்கு லேப்ராஸ்கோப்பி மூலம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இதன்மூலம் சிறுநீரக தானம் செய்வோர் மூன்று முதல் நான்கு நாட்களுக்குள் வீடு திரும்பலாம். பெரிய அளவில் உடலில் காயங்கள், தையல்கள் ஏற்படாது. திருச்சியிலேயே முதன்முறையாக லேப்ராஸ்கோப்பி சிகிச்சை இங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. திருச்சி அப்போலோ மருத்துவமனையில் இதுவரை 50 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
டாக்டர் செந்தில் பேசுகையில், சிறுநீரகத் தொற்று என்பது கடந்த 10 ஆண்டுகளாக பொது சுகாதார பிரச்சனையாக இருக்கிறது. 6 முதல் 8 சதவீதம் பேர் சிறுநீரக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்றார். டாக்டர் அழகப்பன் பேசுகையில், ஒரு நிமிடத்திற்கு உலகம் முழுவதும் சிறுநீரக தானம் கிடைக்காமல் 17 பேர் உயிரிழக்கின்றனர். சராசரியாக சிறுநீரகம் பாதிக்கப்பட்ட 5 கோடிப் பேருக்கு ஒருவர் மட்டுமே சிறுநீரக தானம் செய்ய முன்வருகிறார். மேலும் சிறுநீரக அறுவை சிகிச்சை குறித்து எதிர்மறையான கருத்துக்கள் பரப்பப்படுகிறது. 40 வயதுக்கு மேல் தண்ணீர் அளவுடன் குடிக்க வேண்டும். அதிகத் தண்ணீர் குடிப்பதாலும், குறைந்தளவு தண்ணீர் குடிப்பதாலும் சிறுநீரகம் பாதிக்கும் என்றார். இந்நிகழ்ச்சியில் சிறுநீரக தானம் செய்தவர்கள், உடல் உறுப்பு தானம் செய்தவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. டாக்டர் மகேந்திரவர்ம நன்றி கூறினார்.


Conclusion:தண்ணீர் அதிகமாக குடித்தாலும், குறைவாக குடித்தாலும் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் என்று டாக்டர் கூறினார்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.