ETV Bharat / state

'இப்படியே பேசினால் கமலை நடமாட விடமாட்டோம்..!' - மன்னார்குடி ஜீயர் மிரட்டல்

author img

By

Published : May 15, 2019, 11:48 PM IST

திருச்சி : "ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புகளிடம் பணத்தை பெற்றுக் கொண்டு கமல் இந்துகளுக்கு எதிராக பேசி வருகிறார். அவரை இந்து அமைப்புகள் ஒன்றாக சேர்ந்து நடமாட விடமாட்டோம்" என்று மன்னார்குடி ஜீயர் மிரட்டியுள்ளார்.

மன்னார்குடி ஜீயர்

சென்டலங்கார மன்னார்குடி செண்பக மன்னார் ஜீயர் திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள மடத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "கோயில்களில் கலாச்சாரம் தெரியாத அதிகாரிகளை அகற்றப்படவேண்டும்.

ஸ்ரீரங்கத்தில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் பலர் இன்னமும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்கள் சாமி கும்பிட வரும் பக்தர்களிடம் கெடுபிடியாக நடந்து கொள்கின்றனர். திருப்பதியை விட ஸ்ரீரங்கத்தில்தான் அதிக அளவில் நகைகள் உள்ளன. ஆயினும் அவைகள் எங்கு உள்ளது என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட வேண்டும். அதற்காக அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

மன்னார்குடி ஜீயர் பேட்டி

நடிகர் கமல்ஹாசன் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் பணம் பெற்றுக்கொண்டு இந்துக்களுக்கு விரோதமாக பேசி வருகிறார். இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களுடன் இணைந்து இந்துகளுக்கு விரோதமாக நடித்து வருகிறார். இதேநிலையில் அவர் இருந்தால் எல்லா இந்து அமைப்புகளும் இணைந்து கமல்ஹாசனை நடமாட விட மாட்டோம். அவர் செல்லும் இடமெல்லாம் அவரை அவமானப்படுத்தும் வகையில் எதிர்ப்பை தெரிவிப்போம். கமல் மட்டுமின்றி இந்துக்களுக்கு எதிராக யார் கருத்து தெரிவித்தாலும் அவர்களுக்கு எங்களது எதிர்ப்பை தெரிவிப்போம்" என்றார்.

சென்டலங்கார மன்னார்குடி செண்பக மன்னார் ஜீயர் திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள மடத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "கோயில்களில் கலாச்சாரம் தெரியாத அதிகாரிகளை அகற்றப்படவேண்டும்.

ஸ்ரீரங்கத்தில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் பலர் இன்னமும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்கள் சாமி கும்பிட வரும் பக்தர்களிடம் கெடுபிடியாக நடந்து கொள்கின்றனர். திருப்பதியை விட ஸ்ரீரங்கத்தில்தான் அதிக அளவில் நகைகள் உள்ளன. ஆயினும் அவைகள் எங்கு உள்ளது என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட வேண்டும். அதற்காக அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

மன்னார்குடி ஜீயர் பேட்டி

நடிகர் கமல்ஹாசன் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் பணம் பெற்றுக்கொண்டு இந்துக்களுக்கு விரோதமாக பேசி வருகிறார். இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களுடன் இணைந்து இந்துகளுக்கு விரோதமாக நடித்து வருகிறார். இதேநிலையில் அவர் இருந்தால் எல்லா இந்து அமைப்புகளும் இணைந்து கமல்ஹாசனை நடமாட விட மாட்டோம். அவர் செல்லும் இடமெல்லாம் அவரை அவமானப்படுத்தும் வகையில் எதிர்ப்பை தெரிவிப்போம். கமல் மட்டுமின்றி இந்துக்களுக்கு எதிராக யார் கருத்து தெரிவித்தாலும் அவர்களுக்கு எங்களது எதிர்ப்பை தெரிவிப்போம்" என்றார்.

Intro: அகில பாரத துறவியர் சங்கத் துணைத்தலைவர் சென்டலங்கார மன்னார்குடி செண்பகமன்னார் ஜீயர் ஸ்ரீரங்கத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.


Body:திருச்சி:
இந்து அமைப்புகள் ஒன்றிணைந்து கமல்ஹாசனை நடமாட விட மாட்டோம் என்று மன்னார்குடி ஜீயர் கூறினார்.
சென்டலங்கார மன்னார்குடி செண்பகமன்னார் ஜீயர் திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள அவரது மடத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
கோயில்களின் நிர்வாகத்தில் இந்து அறநிலையத் துறையும், தமிழக அரசும் சிறப்பாக செயல்படுகிறது. இருப்பினும் கோயில்களில் கலாச்சாரம் தெரியாத அதிகாரிகள் அகற்றப்படவேண்டும். ஸ்ரீரங்கத்தில் ஓய்வு பெற்ற அதிகாரிகள் பலர் இன்னமும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்கள் சாமி கும்பிட வரும் பக்தர்களிடம் கெடுபிடியாக நடந்து கொள்கின்றனர். திருப்பதியை விட ஸ்ரீரங்கத்தில் அதிக அளவில் நகைகள் உள்ளன. ஆயினும் அவைகள் எங்கு உள்ளது என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட வேண்டும். அதற்காக அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். கமல்ஹாசன் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் பணம் பெற்றுக்கொண்டு இந்துக்களுக்கு விரோதமாக பேசி வருகிறார். முஸ்லிம் தீவிரவாத இயக்கங்களுடன் இணைந்து இந்து விரோதமாக நடித்து வருகிறார். எல்லா இந்து அமைப்புகளும் இணைந்து கமல்ஹாசனை நடமாட விட மாட்டோம். அவர் செல்லும் இடமெல்லாம் அவரை அவமானப்படுத்தும் வகையில் எதிர்ப்பை தெரிவிப்போம். கமல் மட்டுமின்றி இந்துக்களுக்கு எதிராக யார் கருத்து தெரிவித்தாலும் அவர்களுக்கு எங்களது எதிர்ப்பை தெரிவிப்போம்.
கமல் ஏற்கனவே கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறிவிட்டார். சாருஹாசன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினரும் மதம் மாறிவிட்டனர். இதற்கான ஆதாரங்கள் அவரது வீட்டிலேயே உள்ளது. இந்து விரோத துரோகியான கமலை மன்னிக்க மாட்டோம். தேர்தல் ஆணையத்தில் பொய்யான தகவல்களை பதிந்து அவர் கட்சி நடத்தி வருகிறார். நாதுராம் கோட்சே நாட்டின் மீது கொண்ட தேச பக்தியின் காரணமாக காந்தியை சுட்டார். காந்தியை சுட்டது தவறு என்றாலும், அவர் தனது சுய சிந்தனையோடு இதை செய்துள்ளார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றமே தீர்ப்பு அளித்து விட்டது. கோட்சே திராவிடர் கழகத் தலைவர் வீரமணி ஆகிய அனைவருமே இந்துக்கள்தான் ஆகையால் இவர்களது செயல்பாடுகள் எல்லாம் இந்துக்கள் செய்வதாக அர்த்தம் கிடையாது என்றார்.


Conclusion:கமலஹாசன் ஏற்கனவே அவரது குடும்பத்தோடு கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறிவிட்டார் என்று ஜீயர் கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.