ETV Bharat / state

அதிமுக தொடங்கிய அவினாசி - அத்திக்கடவு திட்டம் ஏமாற்றுவேலை - ஆ.ராசா

திருப்பூர்: நாடாளுமன்ற உறுப்பினாராக எவ்வாறு பணியாற்றினேன் என்பது உங்களுக்குத் தெரியும் இன்னொரு முறை வாய்ப்பு வழங்க வேண்டுமென ஆ. ராசா மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

author img

By

Published : Mar 24, 2019, 5:52 PM IST

ஆ.ராசா

ஏழு கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 18 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இதற்கான தேர்தல் பணிகளும், பரப்புரைகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஆ.ராசா நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அவிநாசியில் கூட்டணி கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் பரப்புரையில் ஈடுபட்டார். இதையடுத்து கூட்டணி கட்சியினர் மத்தியில் அவர் பேசியதாவது: இன்னொரு முறை பிஜேபி ஆட்சிக்கு வந்தால் தேர்தல் என்பது நடைபெறாது. இந்திய அரசியல் சட்டத்தின் மீது மிகப்பெரிய ஆபத்து வந்துள்ளது என கருத்து தெரிவித்தார்.

ஐந்தாண்டு காலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது எவ்வாறு பணியாற்றினேன் என்பது உங்களுக்குத் தெரியும். தற்போது இன்னொரு முறை வாய்ப்பு கொடுத்தால் அதை விட சிறப்பாக பணியாற்றுவேன் என்று நம்பிக்கை தெரிவித்தார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் ‘தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கின்ற அவிநாசி அத்திக்கடவு திட்டம் என்பது ஏமாற்று வேலை’ என்று சாடினார்.

ஏழு கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 18 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இதற்கான தேர்தல் பணிகளும், பரப்புரைகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஆ.ராசா நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அவிநாசியில் கூட்டணி கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் பரப்புரையில் ஈடுபட்டார். இதையடுத்து கூட்டணி கட்சியினர் மத்தியில் அவர் பேசியதாவது: இன்னொரு முறை பிஜேபி ஆட்சிக்கு வந்தால் தேர்தல் என்பது நடைபெறாது. இந்திய அரசியல் சட்டத்தின் மீது மிகப்பெரிய ஆபத்து வந்துள்ளது என கருத்து தெரிவித்தார்.

ஐந்தாண்டு காலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது எவ்வாறு பணியாற்றினேன் என்பது உங்களுக்குத் தெரியும். தற்போது இன்னொரு முறை வாய்ப்பு கொடுத்தால் அதை விட சிறப்பாக பணியாற்றுவேன் என்று நம்பிக்கை தெரிவித்தார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் ‘தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கின்ற அவிநாசி அத்திக்கடவு திட்டம் என்பது ஏமாற்று வேலை’ என்று சாடினார்.

அவிநாசி அத்திக்கடவு திட்டமென்பதே ஏமாற்று வேலை -- பிஜேபி ஆட்சிக்கு வந்தால் தேர்தல் என்பதே நடைபெறாது -- இந்திய அரசியல் சட்டத்தின் மீது மிகப்பெரிய ஆபத்து வந்துள்ளதாகவும் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் திமுக வேட்பாளர் ஆர்.இராசா பேட்டி  !!


 திருப்பூர் மாவட்டம்
நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில்  திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் போட்டியிடும் ஆர்.இராசா கூட்டணி கட்சியினருடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

 இதையடுத்து கூட்டணி கட்சியினர் மத்தியில் பேசியவர் :-

 தேசத்தை காப்பாற்றுவதற்காக நடைபெறுகின்ற தேர்தல்.. தற்போது மதசார்பின்மை , ஜனநாயகம் , சோசியலிசம் ஆகிய மூன்றுக்கும் ஆபத்து வந்துள்ளது,  இன்னொரு முறை பிஜேபி ஆட்சிக்கு வந்தால் தேர்தல் என்பது நடைபெறாது. இந்திய அரசியல் சட்டத்தின் மீது மிகப்பெரிய ஆபத்து வந்துள்ளது. ஐந்தாண்டு காலம் நாடாளமன்ற உறுப்பினாராக இருந்த போது எவ்வாறு பணியாற்றினேன் என்பது உங்களுக்குத் தெரியும் தற்போது இன்னொரு முறை வாய்ப்பு கொடுத்தால் அதை விட சிறப்பாக பணியாற்றுவேன் என்று கூறினார்.



இதையடுத்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் :-

தமிழக அரசு அறிவித்திருக்கிற அவிநாசி அத்திக்கடவு திட்டம் என்பது ஏமாற்றுவேலை,,  அதற்க்கு.உள்ளபடியே பெயர் வைக்க வேண்டும் என்று சொன்னால் காளிங்கராயன் வாய்காளிலிருந்து பெருகின்ற உபரி நீர் திட்டம்.என்று தான் சொல்ல வேண்டும், அந்த காளிங்கராயன் உபரி நீர் திட்டத்தை வேண்டுமென்றே பிறித்து அத்திக்கடவு.அவிநாசி திட்டத்தை தான் முழுமையாக நிறைவேற்றப் போவாதாக சொல்லியிருப்பது  நகைப்புக்கு குறிய ஒன்று, அது ஒரு ஏமாற்று வேலை. திமுக ஆட்சிக் காலத்தில் , நான் மத்திய அமைச்சராக இருந்தபோது முதலமைச்சர் கருணாநிதி அறிவுறுத்தலின்படி தலைமைச் செயலகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலர்களையும் அழைத்து கூர்வாக கூட்டம் நடத்தியதில் அத்திக்கடவு அவினாசி திட்டம் ஊர்ஜின திட்டம், முன்னோடி திட்டம் , அரசு அளிக்கப்பட்ட திட்ட சாத்தியமான திட்டம் , அந்தத் திட்டத்தை அத்திக்கடவிலிருந்து  தான் தொடங்க வேண்டும் என்று திட்டத்தை முழ வேகத்தொடு துவங்கினோம், ஆனால் அதன் பின் திமுக.ஆட்சி வரவில்லை , ஆனால் அந்த திட்டத்தை நிறை வேற்றாமல், சிறிய திட்டத்தை , யானையை காட்டி பூனை நிறுத்திய வாறு, காளிங்கராயன் வாய்க்கால்  உபரி நீர் வாய்கால் திட்டத்தை இங்கு நிறைவேற்ற பார்க்கிறார்கள் , அதுவும் பைப் லைனில் கொண்டு போக பார்க்கிறார்கள் இது அவிநாசி அத்திகடவு திட்டமாகாது. இது மேட்டுபாளையம், காரமடை போன்ற பகுதிகளுக்கு வராது .எனவே அவிநாசி அத்திக்கடவு திட்டமென்பதே ஏமாற்று வேலை என்று கூரினார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.