ETV Bharat / state

நாமம் போட்டு விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம்!

author img

By

Published : Aug 1, 2023, 9:38 PM IST

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 5வது நாளாக நாமம் போட்டு, அரை நிர்வாண காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Etv Bharat
Etv Bharat
தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்

திருச்சி: தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 5வது நாளாக நாமம் போட்டு, அரை நிர்வாண காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது பேசிய அவர்கள், 'இந்தப் போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலையை கொடுக்காமல், விவசாயிகளை வஞ்சித்து வருகிறது.

ஒரு கிலோ நெல்லுக்கு 54 ரூபாயும் ஒரு டன் கரும்புக்கு 8,100 ரூபாயும் வழங்க வேண்டும். விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.

மேலும் 2016-ல் வறட்சியின் பொழுது பெரிய விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யுங்கள் என்று உயர் நீதிமன்றம் கூறிய பிறகு, பெரிய விவசாயிகள் வாங்கிய குறுகிய கால கடனை விவசாயிகளின் கையெழுத்தை பெறாமலே போலியாக கையெழுத்தை போட்டு மத்திய கால கடனாக அப்போதைய அரசு மாற்றி வைத்தது. ஆகையால், விவசாயக் கடனை தள்ளுபடி செய்து விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டுகிறோம்.

மேட்டூரில் இருந்து கடலில் கலக்கும் வெள்ள நீரை மேட்டூர் அணையின் வடபுறம் கால்வாய் வெட்டி, அய்யாற்றுடன் இணைத்து சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டுகிறோம்.

அதேபோல் ஆலடியாறு டேமில், துளையிட்டு கீழ்கூடலூர், கம்பம், தேனி, பெரியகுளம், திண்டுக்கல், எரியோடு, கடவூர் வழியாக பொன்னியாறு டேமில் இணைத்தால், தேனி, மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி மாவட்ட விவசாயிகள் பயன்பெற முடியும் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், கோவில் நிலங்களை தலைமுறை தலைமுறையாக சாகுபடி செய்தும், குடியிருந்தும் வரும் விவசாயிகளை வெளியேற்றாமல் வீட்டிற்கு வாடகையும், குத்தகைதாரராக பதிவு செய்து விவசாயிகளையும், பொது மக்களையும் காப்பாற்ற வேண்டுகிறோம்.

குறிப்பாக தக்காளி, வெங்காயம், காய்கறிகள் 1 கிலோ ரூ.1க்கு விற்கும் பொழுது கிராமங்களில் குளிர் சாதன கிடங்கை அரசே கட்டி கொடுத்து அதில் 1 கிலோ காய்கறிகளுக்கு கூட்டுறவு சங்கத்தின் மூலமாக ரூ.10 கடன் கொடுத்து வைத்திருந்தால், 1 கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை விலை வராமல் 1 கிலோ தக்காளி, வெங்காயத்தை ரூ.40க்கு பொது மக்களுக்கு விற்க முடியும்’ என்றனர்.

’தனியார் நிறுவனங்கள் ரூ.5,00,000 கடன் கொடுத்து 48 மாதங்களில் ரூ.7 லட்சம் கட்டச்சொல்லி கையெழுத்து வாங்கி விட்டு ரூ.62 லட்சம் கடனை திருப்பி கட்டிய பிறகு 71 மாதங்களாக்கி 11, 1/2 லட்சம் கட்டச் சொல்லி 1 தவணை கட்டவில்லையென்றால் டிராக்டர், கார்களை தூக்கி செல்பவர்களை கைது செய்ய வேண்டுகிறோம்.

மேலும், 100 நாட்கள் கூலி, பிரதமர் பென்சன், முதியோர், ஊனமுற்றோர், விதவை உதவி தொகையை, வீடு கட்ட கொடுக்கும் பணத்தை வங்கிகள் விவசாயக் கடன் பாக்கிக்காக பிடிக்கக் கூடாது என்று மத்திய அரசு கூறிய பிறகும் பிடிக்கும் வங்கி மேலாளர்களை கைது செய்ய வேண்டுகிறோம்’ என்று பல்வேறு கோரிக்கைகளை முன்நிறுத்தி விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து அய்யாகண்ணு செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது, "விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும், விளைவிக்கும் விளைபொருட்களுக்கு உரிய விலையை நிர்ணயிக்க வேண்டும். குறிப்பாக நெல் ,கரும்பு, பருத்தி போன்ற விளைபொருட்களுக்கு உரிய விலையை நிர்ணயிக்க வேண்டும். விவசாயிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறோம்.

ராமேஸ்வரத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா பொய் கதையாக கூறி வருகிறார். இதுவரை விவசாயிகளுக்கு எந்தத் திட்டத்தையும் முறையாக செயல்படுத்தவில்லை' என குற்றம்சாட்டினார். மேலும் 'மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை என்றால் எங்களுடைய போராட்டம் மேலும் தீவிரமடையும்' என தெரிவித்தார்.

இதையும் படிங்க: கோவையில் புஷ்பா பட பாணியில் சுமார் 1 டன் சந்தனக்கட்டைகள் கடத்தல் - அதிரடியாக விரட்டிப்பிடித்த போலீஸ்!

தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்

திருச்சி: தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 5வது நாளாக நாமம் போட்டு, அரை நிர்வாண காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது பேசிய அவர்கள், 'இந்தப் போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலையை கொடுக்காமல், விவசாயிகளை வஞ்சித்து வருகிறது.

ஒரு கிலோ நெல்லுக்கு 54 ரூபாயும் ஒரு டன் கரும்புக்கு 8,100 ரூபாயும் வழங்க வேண்டும். விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.

மேலும் 2016-ல் வறட்சியின் பொழுது பெரிய விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யுங்கள் என்று உயர் நீதிமன்றம் கூறிய பிறகு, பெரிய விவசாயிகள் வாங்கிய குறுகிய கால கடனை விவசாயிகளின் கையெழுத்தை பெறாமலே போலியாக கையெழுத்தை போட்டு மத்திய கால கடனாக அப்போதைய அரசு மாற்றி வைத்தது. ஆகையால், விவசாயக் கடனை தள்ளுபடி செய்து விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டுகிறோம்.

மேட்டூரில் இருந்து கடலில் கலக்கும் வெள்ள நீரை மேட்டூர் அணையின் வடபுறம் கால்வாய் வெட்டி, அய்யாற்றுடன் இணைத்து சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டுகிறோம்.

அதேபோல் ஆலடியாறு டேமில், துளையிட்டு கீழ்கூடலூர், கம்பம், தேனி, பெரியகுளம், திண்டுக்கல், எரியோடு, கடவூர் வழியாக பொன்னியாறு டேமில் இணைத்தால், தேனி, மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி மாவட்ட விவசாயிகள் பயன்பெற முடியும் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், கோவில் நிலங்களை தலைமுறை தலைமுறையாக சாகுபடி செய்தும், குடியிருந்தும் வரும் விவசாயிகளை வெளியேற்றாமல் வீட்டிற்கு வாடகையும், குத்தகைதாரராக பதிவு செய்து விவசாயிகளையும், பொது மக்களையும் காப்பாற்ற வேண்டுகிறோம்.

குறிப்பாக தக்காளி, வெங்காயம், காய்கறிகள் 1 கிலோ ரூ.1க்கு விற்கும் பொழுது கிராமங்களில் குளிர் சாதன கிடங்கை அரசே கட்டி கொடுத்து அதில் 1 கிலோ காய்கறிகளுக்கு கூட்டுறவு சங்கத்தின் மூலமாக ரூ.10 கடன் கொடுத்து வைத்திருந்தால், 1 கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை விலை வராமல் 1 கிலோ தக்காளி, வெங்காயத்தை ரூ.40க்கு பொது மக்களுக்கு விற்க முடியும்’ என்றனர்.

’தனியார் நிறுவனங்கள் ரூ.5,00,000 கடன் கொடுத்து 48 மாதங்களில் ரூ.7 லட்சம் கட்டச்சொல்லி கையெழுத்து வாங்கி விட்டு ரூ.62 லட்சம் கடனை திருப்பி கட்டிய பிறகு 71 மாதங்களாக்கி 11, 1/2 லட்சம் கட்டச் சொல்லி 1 தவணை கட்டவில்லையென்றால் டிராக்டர், கார்களை தூக்கி செல்பவர்களை கைது செய்ய வேண்டுகிறோம்.

மேலும், 100 நாட்கள் கூலி, பிரதமர் பென்சன், முதியோர், ஊனமுற்றோர், விதவை உதவி தொகையை, வீடு கட்ட கொடுக்கும் பணத்தை வங்கிகள் விவசாயக் கடன் பாக்கிக்காக பிடிக்கக் கூடாது என்று மத்திய அரசு கூறிய பிறகும் பிடிக்கும் வங்கி மேலாளர்களை கைது செய்ய வேண்டுகிறோம்’ என்று பல்வேறு கோரிக்கைகளை முன்நிறுத்தி விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து அய்யாகண்ணு செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது, "விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும், விளைவிக்கும் விளைபொருட்களுக்கு உரிய விலையை நிர்ணயிக்க வேண்டும். குறிப்பாக நெல் ,கரும்பு, பருத்தி போன்ற விளைபொருட்களுக்கு உரிய விலையை நிர்ணயிக்க வேண்டும். விவசாயிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறோம்.

ராமேஸ்வரத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா பொய் கதையாக கூறி வருகிறார். இதுவரை விவசாயிகளுக்கு எந்தத் திட்டத்தையும் முறையாக செயல்படுத்தவில்லை' என குற்றம்சாட்டினார். மேலும் 'மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை என்றால் எங்களுடைய போராட்டம் மேலும் தீவிரமடையும்' என தெரிவித்தார்.

இதையும் படிங்க: கோவையில் புஷ்பா பட பாணியில் சுமார் 1 டன் சந்தனக்கட்டைகள் கடத்தல் - அதிரடியாக விரட்டிப்பிடித்த போலீஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.