ETV Bharat / state

திருச்சியில் காரில் எரிந்த நிலையில் மனித உடல் மீட்பு! - காரில் எரிந்து கிடந்த மனித எலும்புக்கூடு

திருச்சி: சிறுகனூர் அருகே காருக்குள் எரிந்த நிலையில் மனித உடல் மீட்கப்பட்டது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

burned body
author img

By

Published : Nov 13, 2019, 8:34 PM IST

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே தச்சங்குறிச்சியில் வனப்பகுதி ஒன்று உள்ளது. இப்பகுதியில் காலை அவ்வழியாக சென்றவர்கள் கார் ஒன்று எரிந்த நிலையில் இருப்பதைக் பார்த்தனர். அப்போது காரின் அருகே சென்று பார்த்தபோது எரிந்த நிலையில் மனித உடல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். காரில் இருந்த உடல் முற்றிலும் எரிந்த நிலையில் இருந்தது.

இதனையடுத்து உடனடியாக காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிறுகனூர் காவல்துறையினர் காரில் எரிந்த நிலையில் கிடந்த உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், எரிந்த நிலையில் இருக்கும் உடல் ஆணா? பெண்ணா? என்பது தெரியாமல் தவித்து வருகின்றனர். எனினும் உடல் கூறு ஆய்வுக்குப் பின்னரே இது குறித்த உறுதியான தகவல் வெளியாகும் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர் யார்? அவர் எரித்துக் கொல்லப்பட்டாரா? அல்லது கார் தீப்பிடித்ததில் இறந்தாரா? எனப் பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:

'காவல்துறைக்கு உபகரணங்கள் வாங்கியதில் ஏற்பட்ட ஊழலை விசாரிக்க வேண்டும்' - ஸ்டாலின் அறிக்கை

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே தச்சங்குறிச்சியில் வனப்பகுதி ஒன்று உள்ளது. இப்பகுதியில் காலை அவ்வழியாக சென்றவர்கள் கார் ஒன்று எரிந்த நிலையில் இருப்பதைக் பார்த்தனர். அப்போது காரின் அருகே சென்று பார்த்தபோது எரிந்த நிலையில் மனித உடல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். காரில் இருந்த உடல் முற்றிலும் எரிந்த நிலையில் இருந்தது.

இதனையடுத்து உடனடியாக காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிறுகனூர் காவல்துறையினர் காரில் எரிந்த நிலையில் கிடந்த உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், எரிந்த நிலையில் இருக்கும் உடல் ஆணா? பெண்ணா? என்பது தெரியாமல் தவித்து வருகின்றனர். எனினும் உடல் கூறு ஆய்வுக்குப் பின்னரே இது குறித்த உறுதியான தகவல் வெளியாகும் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர் யார்? அவர் எரித்துக் கொல்லப்பட்டாரா? அல்லது கார் தீப்பிடித்ததில் இறந்தாரா? எனப் பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:

'காவல்துறைக்கு உபகரணங்கள் வாங்கியதில் ஏற்பட்ட ஊழலை விசாரிக்க வேண்டும்' - ஸ்டாலின் அறிக்கை

Intro:திருச்சி அருகே காருக்குள் எரிந்த நிலையில் மனித உடல் மீட்கப்பட்டுள்ளது.Body:

திருச்சி:

திருச்சி அருகே காருக்குள் எரிந்த நிலையில் மனித உடல் மீட்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே தச்சங்குறிச்சியில் வனப்பகுதி உள்ளது. இங்கு காலை அப்பகுதிக்கு சென்றவர்கள் கார் ஒன்று எரிந்த நிலையில் இருப்பதை கண்டனர். அருகில் சென்று பார்த்தபோது ஒருவர் எரிந்த நிலையில் எலும்பு கூடாக இருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த சிறுகனூர்
காவல்நிலைய போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு உடல் கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரில் இருந்த உடல் முற்றிலும் எரிந்த நிலையில் இருந்துள்ளது.

இதனால் அது ஆணா? பெண்ணா? என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறினர். எனினும் உடல் கூறு ஆய்வுக்கு பின்னரே இது குறித்த உறுதியாக தகவல் வெளியாகும் என்று போலீசார் தெரிவித்தனர். இறந்தவர் யார்?, அவர் எரித்து கொல்லப்பட்டாரா? அல்லது கார் தீப்பிடித்ததில் இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.