ETV Bharat / state

நின்றிருந்த லாரியின் மீது பஸ்மோதி கோர விபத்து

திருச்சி:மணப்பாறை மேனிவயல் அருகே நின்றிருந்த லாரியின் மீது அரசுப்பேருந்து மற்றும் தனியார் பேருந்து மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.

author img

By

Published : Jul 21, 2019, 1:15 PM IST

bus accident


திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கல்லுப்பட்டி மேனிவயல் அருகே உள்ள திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கம்பி பாரம் ஏற்றிய லாரி ஒன்று என்ஜின் கோளாறு காரணமாக சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது அவ்வழியே சென்னையில் இருந்து தென்காசி நோக்கி சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று லாரியின் பின்புறத்தில் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்நிலையில் விபத்தில் சிக்கி நின்ற அரசுப்பேருந்தின் மீது அவ்வழியே வந்த தனியார் பேருந்து ஒன்றும் மோதியது

இந்த கோர விபத்தில் அரசுப்பேருந்து ஓட்டுனர்,லாரி கிளீனர் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்தில் சிக்கிய பேருந்து
தகவலறிந்து சம்பவ இடத்திற்க்கு விரைந்த துவரங்குறிச்சி போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் காயமடைந்த 25க்கும் மேற்பட்ட பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் ஒருவர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார் என்றும் சிலருக்கு தீவிர சிகிச்சை அளித்துவருவதாகவும் மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கல்லுப்பட்டி மேனிவயல் அருகே உள்ள திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கம்பி பாரம் ஏற்றிய லாரி ஒன்று என்ஜின் கோளாறு காரணமாக சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது அவ்வழியே சென்னையில் இருந்து தென்காசி நோக்கி சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று லாரியின் பின்புறத்தில் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்நிலையில் விபத்தில் சிக்கி நின்ற அரசுப்பேருந்தின் மீது அவ்வழியே வந்த தனியார் பேருந்து ஒன்றும் மோதியது

இந்த கோர விபத்தில் அரசுப்பேருந்து ஓட்டுனர்,லாரி கிளீனர் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்தில் சிக்கிய பேருந்து
தகவலறிந்து சம்பவ இடத்திற்க்கு விரைந்த துவரங்குறிச்சி போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் காயமடைந்த 25க்கும் மேற்பட்ட பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் ஒருவர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார் என்றும் சிலருக்கு தீவிர சிகிச்சை அளித்துவருவதாகவும் மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:மணப்பாறை அருகே லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் - 2 பேர் பலி.Body:திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கல்லுப்பட்டி மேனிவயல் என்ற இடத்தில் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கம்பி பாரம் ஏற்றிய லாரி ஒன்று என்ஜின் கோளாறு காரணமாக சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து அவ்வழியே சென்னையில் இருந்து தென்காசி நோக்கி கொண்டிருந்த அரசுப் பேருந்து லாரியின் பின் பக்கத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.இந்நிலையில் விபத்தில் சிக்கி நின்ற அரசுப் பேருந்து மீது அவ்வழியே வந்த தனியார் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது. அடுத்தடுத்து நடந்த இந்த கோர விபத்தில் அரசுப் பேருந்து ஓட்டுனர்,லாரி கிளீனர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 25க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர். இதனையடுத்து தகவலறிந்து வந்த துவரங்குறிச்சி போலீசார் மற்றும் மீட்பு படையினர் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதில் ஒருவர் கவலைக்கிடமான நிலையிலும், மேலும் சிலர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.