ETV Bharat / state

செல்போன் பேசிக்கொண்டு சாலையை கடக்க முயன்ற இளைஞர் உயிரிழப்பு!

author img

By

Published : Oct 4, 2022, 10:07 PM IST

திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர் ஒருவர் செல்போன் பேசிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி விபத்துக்குள்ளாகியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

செல்போன் பேசிக்கொண்டு சாலையை கடக்க முயன்ற இளைஞர் உயிரிழப்பு!
செல்போன் பேசிக்கொண்டு சாலையை கடக்க முயன்ற இளைஞர் உயிரிழப்பு!

திருச்சி: வையம்பட்டி அடுத்த துலுக்கம்பட்டியைச் சேர்ந்த மலைச்சாமி மகன் ராம்குமார்(24) நேற்று மாலை சக்கம்பட்டி என்ற இடத்தில் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது திண்டுக்கல் நோக்கி அதிவேகமாக சென்ற கார் ராம்குமாரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் தூக்கி வீசப்பட்ட ராம்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து நிற்காமல் சென்ற கார் குறித்து வையம்பட்டி காவல்துறையினர் மேற்கொண்ட துரித நடவடிக்கையால் வடமதுரை காவல்துறையினர் காரை மடக்கிப் பிடித்து வையம்பட்டி காவல் ஆய்வாளரிடம் ஒப்படைத்தனர். பின்னர் மேற்கொண்ட விசாரணையில் காரை ஓட்டிச் சென்ற சென்னை குளத்தூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமாரை கைது செய்தனர்.

இந்நிலையில் அந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. அதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த ராம்குமார் செல்போனில் பேசிக்கொண்டு கார் வந்ததை கவனிக்காமல் சாலையைக் கடக்க முயன்றதால் விபத்து நிகழ்ந்துள்ளது.

செல்போன் பேசிக்கொண்டு சாலையை கடக்க முயன்ற இளைஞர் உயிரிழப்பு!

இதையும் படிங்க:வீடியோ: பட்டப்பகலில் சர்வ சாதாரணமாக திருடப்பட்ட இருசக்கர வாகனம்

திருச்சி: வையம்பட்டி அடுத்த துலுக்கம்பட்டியைச் சேர்ந்த மலைச்சாமி மகன் ராம்குமார்(24) நேற்று மாலை சக்கம்பட்டி என்ற இடத்தில் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது திண்டுக்கல் நோக்கி அதிவேகமாக சென்ற கார் ராம்குமாரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் தூக்கி வீசப்பட்ட ராம்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து நிற்காமல் சென்ற கார் குறித்து வையம்பட்டி காவல்துறையினர் மேற்கொண்ட துரித நடவடிக்கையால் வடமதுரை காவல்துறையினர் காரை மடக்கிப் பிடித்து வையம்பட்டி காவல் ஆய்வாளரிடம் ஒப்படைத்தனர். பின்னர் மேற்கொண்ட விசாரணையில் காரை ஓட்டிச் சென்ற சென்னை குளத்தூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமாரை கைது செய்தனர்.

இந்நிலையில் அந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. அதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த ராம்குமார் செல்போனில் பேசிக்கொண்டு கார் வந்ததை கவனிக்காமல் சாலையைக் கடக்க முயன்றதால் விபத்து நிகழ்ந்துள்ளது.

செல்போன் பேசிக்கொண்டு சாலையை கடக்க முயன்ற இளைஞர் உயிரிழப்பு!

இதையும் படிங்க:வீடியோ: பட்டப்பகலில் சர்வ சாதாரணமாக திருடப்பட்ட இருசக்கர வாகனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.