ETV Bharat / state

தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் மோதிக்கொண்டதில் இளைஞர் உயிரிழப்பு!

author img

By

Published : Aug 4, 2020, 10:32 PM IST

திருப்பத்தூர் : ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மூன்று இருசக்கர வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில், இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் மோதிக்கொண்டதில் இளைஞர் உயிரிழப்பு!
தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் மோதிக்கொண்டதில் இளைஞர் உயிரிழப்பு!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்த திருவள்ளூர் பல்கலைக்கழக துணைப்பேராசிரியர் அகிலா என்பவர் வேலூரிலிருந்து ஜோலார்பேட்டை நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தார்.

ஆம்பூர் அடுத்த செங்கிலி குப்பம் பகுதி அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்துகொண்டிருந்த பார்சனபள்ளி பகுதியைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் லோகேஷ் (26) என்பவரது வண்டி எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து அகிலாவின் வாகனத்தின் மீது மோதியுள்ளார்.

அடுத்தடுத்து மூன்று இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளான லோகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் படுகாயமடைந்த துணைப் பேராசிரியர் அகிலா, மற்றொரு இளைஞர் ஆகிய இருவரும் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

தகவலறிந்து சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வந்தடைந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர், லோகேஷின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்த திருவள்ளூர் பல்கலைக்கழக துணைப்பேராசிரியர் அகிலா என்பவர் வேலூரிலிருந்து ஜோலார்பேட்டை நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தார்.

ஆம்பூர் அடுத்த செங்கிலி குப்பம் பகுதி அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்துகொண்டிருந்த பார்சனபள்ளி பகுதியைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் லோகேஷ் (26) என்பவரது வண்டி எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து அகிலாவின் வாகனத்தின் மீது மோதியுள்ளார்.

அடுத்தடுத்து மூன்று இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளான லோகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் படுகாயமடைந்த துணைப் பேராசிரியர் அகிலா, மற்றொரு இளைஞர் ஆகிய இருவரும் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

தகவலறிந்து சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வந்தடைந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர், லோகேஷின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.