ETV Bharat / state

சித்த மருத்துவம் மீது பாகுபாடு - மத்திய அரசுக்கு ராமதாஸ் கண்டனம்

author img

By

Published : Sep 4, 2020, 2:07 PM IST

சென்னை : ஆயுஷ் அமைச்சகத்தில் சித்த மருத்துவ இணை ஆலோசகர் பதவியிலிருந்து தமிழர் ஒருவரை பதவியிறக்கம் செய்துள்ளதும், அப்பதவி கலைக்கப்பட்டதும் கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சித்த மருத்துவம் மீது மத்திய அரசு பாகுபாடு காட்டிவருகிறது!
சித்த மருத்துவம் மீது மத்திய அரசு பாகுபாடு காட்டிவருகிறது!

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆயுஷ் அமைச்சகத்தில் சித்த மருத்துவ இணை ஆலோசகராக சென்னையில் பணியாற்றி வந்த சித்த மருத்துவர் ரவி பதவி இறக்கம் செய்யப்பட்டதும், சித்த மருத்துவ இணை ஆலோசகர் பதவி கலைக்கப்பட்டதும் கண்டிக்கத்தக்கவை. சித்த மருத்துவம் மீது மத்திய அரசு பாகுபாடு காட்டுவதை இது உறுதிசெய்கிறது.

அதேபோல், சித்த மருத்துவ இணை மருந்து கட்டுப்பாட்டாளர் பதவிக்கு சித்தா குண பாடத்தில் முதுநிலை பட்டம் படித்தவர்களை நியமிக்க வேண்டும். அத்தகையப் படிப்பு படித்தவர்கள் ஏராளமானவர்கள் இருந்தும், ஆயுர்வேத மருத்துவரை நியமித்தது சித்த மருத்துவ முறையை அவமதிக்கும் செயல் ஆகும்.

ஆயுர்வேதத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் சித்தா உள்ளிட்ட பிற மருத்துவ முறைகளுக்கு வழங்கப்படுவதில்லை. ஆயுர்வேதம் தவிர்த்த மற்ற இந்திய மருத்துவ முறைகளின் அடையாளத்தை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆயுஷ் அமைச்சகம் செயல்படுவது சரியல்ல.

சித்த மருத்துவம் என்பது தமிழர்களின் பாரம்பரிய மருத்துவ முறையாகும். அதற்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை எதிர்த்து போராட தமிழ்நாட்டு மக்களும், தமிழ் உணர்வாளர்களும் முன்வர வேண்டும். ஒரு கை ஓசை தராது. ஊர்கூடித் தான் தேர் இழுக்க வேண்டும் என்பதை மக்கள் உணர வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆயுஷ் அமைச்சகத்தில் சித்த மருத்துவ இணை ஆலோசகராக சென்னையில் பணியாற்றி வந்த சித்த மருத்துவர் ரவி பதவி இறக்கம் செய்யப்பட்டதும், சித்த மருத்துவ இணை ஆலோசகர் பதவி கலைக்கப்பட்டதும் கண்டிக்கத்தக்கவை. சித்த மருத்துவம் மீது மத்திய அரசு பாகுபாடு காட்டுவதை இது உறுதிசெய்கிறது.

அதேபோல், சித்த மருத்துவ இணை மருந்து கட்டுப்பாட்டாளர் பதவிக்கு சித்தா குண பாடத்தில் முதுநிலை பட்டம் படித்தவர்களை நியமிக்க வேண்டும். அத்தகையப் படிப்பு படித்தவர்கள் ஏராளமானவர்கள் இருந்தும், ஆயுர்வேத மருத்துவரை நியமித்தது சித்த மருத்துவ முறையை அவமதிக்கும் செயல் ஆகும்.

ஆயுர்வேதத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் சித்தா உள்ளிட்ட பிற மருத்துவ முறைகளுக்கு வழங்கப்படுவதில்லை. ஆயுர்வேதம் தவிர்த்த மற்ற இந்திய மருத்துவ முறைகளின் அடையாளத்தை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆயுஷ் அமைச்சகம் செயல்படுவது சரியல்ல.

சித்த மருத்துவம் என்பது தமிழர்களின் பாரம்பரிய மருத்துவ முறையாகும். அதற்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை எதிர்த்து போராட தமிழ்நாட்டு மக்களும், தமிழ் உணர்வாளர்களும் முன்வர வேண்டும். ஒரு கை ஓசை தராது. ஊர்கூடித் தான் தேர் இழுக்க வேண்டும் என்பதை மக்கள் உணர வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.