ETV Bharat / state

கரோனாவின் கோர பிடியில் தண்டையார்பேட்டை!

author img

By

Published : Oct 6, 2020, 12:24 PM IST

சென்னை: தண்டையார்பேட்டையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

கரோனா
Corona update

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டபோதிலும் கரோனாவின் தாக்கம் குறையாமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் அண்ணா நகர், கோடம்பாக்கம், அடையாறு போன்ற மண்டலங்களில் கரோனா தொற்று தீவிரமடைந்துள்ளது.

இந்தப் பரவலை குறைப்பதற்கு அந்தப் பகுதி முழுவதும் அதிக மருத்துவ முகாம்கள் மற்றும் மக்களுக்கு தொடர்ந்து மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

சென்னையில் மொத்தம் ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 143 பேர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்ணா நகர் மற்றும் கோடம்பாக்கத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இரண்டு மண்டலங்களுக்கு அடுத்து தேனாம்பேட்டை மற்றும் ராயபுரத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16ஆயிரத்தைக் கடந்துள்ளது. அதை தொடர்ந்து தற்போது தண்டையார்பேட்டையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 14 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

நோய்த் தொற்று அதிகரித்து வந்தாலும் ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 290 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோரின் விழுக்காடு 92ஆக உள்ளது, எஞ்சியுள்ள 10 ஆயிரத்து 12 பேரும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

சிகிச்சைப் பெற்று வருபவர்களின் விழுக்காடு 6 ஆக உள்ளனர். இதுவரை சிகிச்சைப் பலனின்றி 3 ஆயிரத்து 91 பேர் இந்த வைரஸ் தொற்றினால் உயிரிழந்தனர்.

மண்டலவாரியாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

கோடம்பாக்கம் - 19432 பேர்

அண்ணா நகர் - 19369 பேர்

ராயபுரம் - 16315 பேர்

தேனாம்பேட்டை - 16618 பேர்

தண்டையார்பேட்டை - 14088 பேர்

திரு.வி.க. நகர் - 13412 பேர்

அடையாறு - 13588 பேர்

வளசரவாக்கம் - 11328 பேர்

அம்பத்தூர் - 12286 பேர்

திருவொற்றியூர் - 5347 பேர்

மாதவரம் - 6283 பேர்

ஆலந்தூர் - 7072 பேர்

சோழிங்கநல்லூர் - 4874 பேர்

பெருங்குடி - 6146 பேர்

மணலி - 2753 பேர்

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டபோதிலும் கரோனாவின் தாக்கம் குறையாமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் அண்ணா நகர், கோடம்பாக்கம், அடையாறு போன்ற மண்டலங்களில் கரோனா தொற்று தீவிரமடைந்துள்ளது.

இந்தப் பரவலை குறைப்பதற்கு அந்தப் பகுதி முழுவதும் அதிக மருத்துவ முகாம்கள் மற்றும் மக்களுக்கு தொடர்ந்து மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

சென்னையில் மொத்தம் ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 143 பேர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்ணா நகர் மற்றும் கோடம்பாக்கத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இரண்டு மண்டலங்களுக்கு அடுத்து தேனாம்பேட்டை மற்றும் ராயபுரத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16ஆயிரத்தைக் கடந்துள்ளது. அதை தொடர்ந்து தற்போது தண்டையார்பேட்டையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 14 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

நோய்த் தொற்று அதிகரித்து வந்தாலும் ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 290 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோரின் விழுக்காடு 92ஆக உள்ளது, எஞ்சியுள்ள 10 ஆயிரத்து 12 பேரும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

சிகிச்சைப் பெற்று வருபவர்களின் விழுக்காடு 6 ஆக உள்ளனர். இதுவரை சிகிச்சைப் பலனின்றி 3 ஆயிரத்து 91 பேர் இந்த வைரஸ் தொற்றினால் உயிரிழந்தனர்.

மண்டலவாரியாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

கோடம்பாக்கம் - 19432 பேர்

அண்ணா நகர் - 19369 பேர்

ராயபுரம் - 16315 பேர்

தேனாம்பேட்டை - 16618 பேர்

தண்டையார்பேட்டை - 14088 பேர்

திரு.வி.க. நகர் - 13412 பேர்

அடையாறு - 13588 பேர்

வளசரவாக்கம் - 11328 பேர்

அம்பத்தூர் - 12286 பேர்

திருவொற்றியூர் - 5347 பேர்

மாதவரம் - 6283 பேர்

ஆலந்தூர் - 7072 பேர்

சோழிங்கநல்லூர் - 4874 பேர்

பெருங்குடி - 6146 பேர்

மணலி - 2753 பேர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.