ETV Bharat / state

கழிவுநீருக்குள் இறங்கி போராட்டம்! - சாக்கடை கால்வாயில் அடைப்பு

திருப்பூர்: சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு குளம்போல் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றாத மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, பொதுமக்கள் சாக்கடைக்குள் இறங்கி போராட்டம் நடத்தினர்.

TPR PROTEST
author img

By

Published : Apr 26, 2019, 2:29 PM IST

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 22ஆவது வார்டு, பவானி நகர் பகுதியில் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாக்கடைக் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பின் காரணமாக கழிவுநீர் குளம்போல தேங்கியுள்ளதோடு, சாலையிலும் ஓடுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த 5 ஆண்டுகளில் இதேபோல் பலமுறை பிரச்னை ஏற்பட்ட நிலையில், மாநகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்தினரிடம் மனுக்களை அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையெனவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கழிவுநீருக்குள் இறங்கி போராட்டம்!

போராட்டங்கள் நடத்தும்போது மட்டுமே அலுவலர்கள் வந்து பிரச்னையை சரி செய்வதாகக் கூறும் இவர்கள், நான்கடி ஆழம்வரை தேங்கியிருந்த சாக்கடை கழிவுக்குள் இறங்கி போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, பிரச்னையைத் தீர்க்க உடனடி நடவடிக்கை எடுப்பதாக போராட்டக்காரர்களிடம் மாநகராட்சி நிர்வாகிகள் கைப்பேசியில் தொடர்புகொண்டு உறுதியளித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 22ஆவது வார்டு, பவானி நகர் பகுதியில் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாக்கடைக் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பின் காரணமாக கழிவுநீர் குளம்போல தேங்கியுள்ளதோடு, சாலையிலும் ஓடுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த 5 ஆண்டுகளில் இதேபோல் பலமுறை பிரச்னை ஏற்பட்ட நிலையில், மாநகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்தினரிடம் மனுக்களை அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையெனவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கழிவுநீருக்குள் இறங்கி போராட்டம்!

போராட்டங்கள் நடத்தும்போது மட்டுமே அலுவலர்கள் வந்து பிரச்னையை சரி செய்வதாகக் கூறும் இவர்கள், நான்கடி ஆழம்வரை தேங்கியிருந்த சாக்கடை கழிவுக்குள் இறங்கி போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, பிரச்னையைத் தீர்க்க உடனடி நடவடிக்கை எடுப்பதாக போராட்டக்காரர்களிடம் மாநகராட்சி நிர்வாகிகள் கைப்பேசியில் தொடர்புகொண்டு உறுதியளித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

திருப்பூரில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு குளம் போல் தேங்கியுள்ள சாக்கடை கழிவுகளை அகற்றாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து -- சாக்கடை கழிவுக்குள் இறங்கி போராட்டம் !!

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 22 - வது வார்டு , பவானி நகர் பகுதியில் ஆயிரத்தி 500 க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொது மக்கள் வசித்து வருகின்றனர். இதனிடையே அப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் ஏற்பட்ட அடைப்பின் காரணமாக சாக்கடை நீர் குளம் போல் தேங்கியுள்ளதோடு சாலையில் ஆறு போல் செல்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால்  பொது மக்கள் பலருக்கு தொடர்ச்சியாக இருமல், சுவாச கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 5 வருடங்களில் பல முறை இதே போல் பிரச்சனை ஏற்பட்ட நிலையில், பல முறை மாநகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்தினரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருக்கும் அதிகாரிகள் , போராட்டங்கள் நடத்தும் போது தான் சம்பவ இடத்திர்க்கு வந்து  பிரச்சனையை சரி செய்வதாக கூறும் இப்பகுதி மக்கள், இம்முறை பல மாதங்களாக.அடைப்பு ஏர்பட்ட நிலையில் பல முரை மாநகராட்சி அதிகாரிகள் முதல் மாவட்ட.நிர்வாகம் வரை அதிகாரிகள் பலரிடம் முனு அளித்தும் நடடிக்கை எடுக்காததால்.அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் 4 அடி வரை  ஆழமுள்ள தேங்கியிருந்த சாக்கடை கழிவுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாநகராட்சி அதிகரிகள் செல்போனில் தொடர்பு கொண்டு சமரசம் செய்ததின்.பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.