ETV Bharat / state

திருப்பூரில் 120 பேருக்கு கரோனா பாதிப்பு

author img

By

Published : Aug 29, 2020, 12:52 AM IST

திருப்பூர்: மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 120 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

corona virus
corona virus

திருப்பூர் மாவட்டத்தில் கரோனா தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாநில அரசும், மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இருப்பினும், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் நேற்று (ஆகஸ்ட் 28) ஒரேநாளில் புதிதாக 120 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு இரண்டாயிரத்து 458 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த 166 பேர் குணமடைந்தனர். இதன்மூலம் திருப்பூரில் இதுவரை ஆயிரத்து 710 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதேபோல, கரோனா தொற்று சிகிச்சைப் பலனின்றி நேற்று மட்டும் மூவர் உயிரிழந்ததையடுத்து மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 271 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 686 பேர் நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

இதையும் படிங்க: கோவையில் 496 பேருக்கு கரோனா தொற்று உறுதி

திருப்பூர் மாவட்டத்தில் கரோனா தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாநில அரசும், மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இருப்பினும், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் நேற்று (ஆகஸ்ட் 28) ஒரேநாளில் புதிதாக 120 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு இரண்டாயிரத்து 458 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த 166 பேர் குணமடைந்தனர். இதன்மூலம் திருப்பூரில் இதுவரை ஆயிரத்து 710 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதேபோல, கரோனா தொற்று சிகிச்சைப் பலனின்றி நேற்று மட்டும் மூவர் உயிரிழந்ததையடுத்து மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 271 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 686 பேர் நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

இதையும் படிங்க: கோவையில் 496 பேருக்கு கரோனா தொற்று உறுதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.