ETV Bharat / state

திருப்பூரில் ரேபிட் சோதனை பணி தீவிரம்!

author img

By

Published : Apr 20, 2020, 4:35 PM IST

திருப்பூர்: கரோனா தொற்றை உறுதிசெய்யும் இரண்டாயிரத்து 400 ரேபிட் டெஸ்ட் கிட் திருப்பூருக்கு வந்துள்ள நிலையில், அதன்மூலம் பரிசோதனை மேற்கொள்ளும் பணியை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.

திருப்பூர் ரேபிட் டெஸ்ட் பணி தீவிரம்!
திருப்பூர் ரேபிட் டெஸ்ட் பணி தீவிரம்!

கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதிவேகமாகப் பரவிவரும் இந்த வைரஸ் தொற்றைக் கண்டறிந்து, இதனால் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தி மருத்துவ சிகிச்சை அளிக்க ஏதுவாக அனைத்து மாவட்டத்திற்கும் தமிழ்நாடு அரசு ரேபிட் சோதனைக் கருவியை வழங்கியுள்ளது.

அதன்படி, திருப்பூர் மாவட்டத்திற்கு என இரண்டாயிரத்து 400 ரேபிட் சோதனைக் கருவி வழங்கப்பட்டுள்ளது. இந்த ரேபிட் சோதனைக் கருவி மூலம் கரோனா வைரஸ் குறித்த பரிசோதனை மேற்கொள்ளும் பணியை மாநில கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.

இதன்பின், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன், சட்டப்பேரவை உறுப்பினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

திருப்பூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 108 ஆக அதிகரித்துள்ளது. இதனால், ரேபிட் சோதனைக் கருவி மூலம் பரிசோதனைசெய்யும் பணியை மாவட்ட சுகாதாரத் துறை தீவிரப்படுத்தியுள்ளது.

இதையும் பார்க்க: காவல் துறை எச்சரித்ததால் தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு!

கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதிவேகமாகப் பரவிவரும் இந்த வைரஸ் தொற்றைக் கண்டறிந்து, இதனால் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தி மருத்துவ சிகிச்சை அளிக்க ஏதுவாக அனைத்து மாவட்டத்திற்கும் தமிழ்நாடு அரசு ரேபிட் சோதனைக் கருவியை வழங்கியுள்ளது.

அதன்படி, திருப்பூர் மாவட்டத்திற்கு என இரண்டாயிரத்து 400 ரேபிட் சோதனைக் கருவி வழங்கப்பட்டுள்ளது. இந்த ரேபிட் சோதனைக் கருவி மூலம் கரோனா வைரஸ் குறித்த பரிசோதனை மேற்கொள்ளும் பணியை மாநில கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.

இதன்பின், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன், சட்டப்பேரவை உறுப்பினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

திருப்பூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 108 ஆக அதிகரித்துள்ளது. இதனால், ரேபிட் சோதனைக் கருவி மூலம் பரிசோதனைசெய்யும் பணியை மாவட்ட சுகாதாரத் துறை தீவிரப்படுத்தியுள்ளது.

இதையும் பார்க்க: காவல் துறை எச்சரித்ததால் தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.