ETV Bharat / state

அரசு செட்-டாப் பாக்ஸ்களில்  தனியார் கனெக்சனா? உடுமலை கே.ராதாகிருஷ்ணன்

திருப்பூர் : அரசு சார்பில் வழங்கப்படும் செட்-டாப் பாக்ஸ்களில் கேபிள் ஆபரேட்டர்கள் தனியார் கேபிள் இணைப்பு கொடுப்பது தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Aug 6, 2019, 2:25 AM IST

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கலந்தாய்வு கூட்டம்


திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அரசு கேபிள் ஆப்ரேட்டர்களுக்கான கலாந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், அரசு சார்பில் வழங்கப்படும் செட்-டாப் பாக்ஸ்களை கேபிள் ஆப்ரேட்டர்கள் பெற்றுக்கொண்டு அதில், தனியார் கேபிள் கனெக்சன் கொடுப்பதாக புகார் வந்துள்ளது.

அப்படி தனியார் கேபிள் கனெக்சன் கொடுப்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வரும் காலங்களில் மக்களுக்கு விலையில்லா செட்-டாப் வழங்குவதோடு, கேபிள் கட்டணம், ஜிஎஸ்டி வரி சேர்த்து ரூ.155 வசூலிக்கப்படும். அதுமட்டுமல்லாமல் அரசு கேபிள்களில் இருந்து தனியார் கேபிளுக்கு மாறியவர்களை அரசு கேபிள் சந்தாதரர்களாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.

செய்தியாளர்களை சந்திக்கும் அமைச்சர் உடுமலை ராதகிருஷ்ணன்


திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அரசு கேபிள் ஆப்ரேட்டர்களுக்கான கலாந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், அரசு சார்பில் வழங்கப்படும் செட்-டாப் பாக்ஸ்களை கேபிள் ஆப்ரேட்டர்கள் பெற்றுக்கொண்டு அதில், தனியார் கேபிள் கனெக்சன் கொடுப்பதாக புகார் வந்துள்ளது.

அப்படி தனியார் கேபிள் கனெக்சன் கொடுப்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வரும் காலங்களில் மக்களுக்கு விலையில்லா செட்-டாப் வழங்குவதோடு, கேபிள் கட்டணம், ஜிஎஸ்டி வரி சேர்த்து ரூ.155 வசூலிக்கப்படும். அதுமட்டுமல்லாமல் அரசு கேபிள்களில் இருந்து தனியார் கேபிளுக்கு மாறியவர்களை அரசு கேபிள் சந்தாதரர்களாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.

செய்தியாளர்களை சந்திக்கும் அமைச்சர் உடுமலை ராதகிருஷ்ணன்
Intro:அரசு செட்-டாப் பாக்ஸ்களை கேபிள் ஆபரேட்டர்கள் பெற்றுக்கொண்டு தனியார் கேபிள் கனெக்சன் கொடுக்கப்பட்டிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு , அவை அரசு கேபிளாக மாற்றப்படும் என அமைச்சரும் , கேபிள் நிறுவன தலைவருமான உடுமலை ராதாகிருஷ்ணன் திருப்பூரில் பேட்டி

Body:தமிழ்நாடு அரசு கேபிள் வாரியத்தின் மாவட்ட வாரியான ஆய்வுக்கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது . இதில் மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும் கேபிள் நிறுவன வாரிய தலைவருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டனர் . இதில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி வாரிய தலைவராக நியமணம் செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த அவர் அமைச்சராவதற்கு முன் கேபிள் வாரியத்தின் தலைவராக இருந்தபோது சிறப்பாக செயலாற்றியதாகவும் இம்முறையும் அதேபோல் செயல்பட உள்ளதாகவும் , அரசு செட்-டாப் பாக்ஸ்களை கேபிள் ஆபரேட்டர்கள் பெற்றுக்கொண்டு தனியார் கேபிள் கனெக்சன் கொடுக்கப்பட்டிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு , அவை அரசு கேபிளாக மாற்றப்படும் எனவும் விலையில்லா செட்டாப் பாக்ஸ் வழங்கப்படுவதோடு , கேபிள் டிவி கட்டணம் 130 ருபாய் ஜிஸ்டியோடு சேர்த்து 155 ருபாயாக வசூலிக்கப்படும் எனவும் கடந்த காலங்களில் அரசு கேபிளிலிருந்து தனியார் கேபிளுக்கு மாறுதல் அடைந்தவர்களையும் அரசு கேபிள் சந்தாதாரர்களாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார் . இந்த ஆய்வுக்கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தின் வட்டாட்சியர்கள் , கேபிள் தாசில்தார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் . Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.