ETV Bharat / state

கால்வாயில் சிக்கிய காட்டு யானையை மீட்கச் சென்று மாயமான வனக்காவலர் சடலமாக மீட்பு!

author img

By

Published : May 10, 2020, 5:00 PM IST

Updated : May 11, 2020, 12:00 AM IST

திருப்பூர்: கால்வாயில் சிக்கிய காட்டுயானையை மீட்கச் சென்று மாயமான வனக்காவலர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வனக்காவலரை மீட்கும் பணியில்  ஈடுபட்டுள்ள தீயணைப்புத் துறையினர்
வனக்காவலரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்புத் துறையினர்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணைக்கு வரும் காண்டூர் கால்வாயில் நேற்றிரவு காட்டு யானை ஒன்று தண்ணீர் குடிக்க வந்தபோது தவறி கால்வாயில் விழுந்துள்ளது. நீண்ட நேரம் தண்ணீரில் போராடிய காட்டுயானை நீரின் வேகம் காரணமாக கால்வாயில் ஏற முடியாமல் இறந்து போனது.

இந்நிலையில், அவ்வழியே ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறையினர், இறந்த நிலையில், நீரில் மூழ்கி கிடந்த யானையின் உடலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மீட்புப் பணியின் போது வனக்காவலர் சந்துரு என்பவர் கால்வாயில் விழுந்து மாயமானார். அவர் நீண்ட நேரமாக தென்படாத காரணத்தால், நீரில் மூழ்கி வனக்காவலர் இறந்திருக்கலாம் எனக் கருதிய தீயணைப்பு துறையினர், வனத் துறையினர் காண்டூர் கால்வாய் மற்றும் திருமூர்த்தி அணை பகுதியில் தீவிரமாக தேடிவந்தனர்.

வனக்காவலரை மீட்கும் பணி தீவிரம்!

இந்த நிலையில், நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு வனக்காவலர் சந்துரு உடலை தீயணைப்பு துறையினர் சடலமாக மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட வனக்காவலர் உடல் பிரேத பரிசோதனைக்காக, உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. கால்வாயில் சிக்கிய காட்டு யானையும், இறந்த நிலையில் ஹிட்டாச்சி வாகனம் மூலம் மீட்கப்பட்டது.
தண்ணிரில் மூழ்கி, காட்டு யானையும் யானையை மீட்கும் பணியில் ஈடுபட்ட வனக்காவலரும் இறந்துப் போன சம்பவம் வனத்துறை மற்றும் பொது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதையும் பார்க்க: முழு பேரழிவுக்கு வித்திட்ட ட்ரம்ப் - முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா தாக்கு!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணைக்கு வரும் காண்டூர் கால்வாயில் நேற்றிரவு காட்டு யானை ஒன்று தண்ணீர் குடிக்க வந்தபோது தவறி கால்வாயில் விழுந்துள்ளது. நீண்ட நேரம் தண்ணீரில் போராடிய காட்டுயானை நீரின் வேகம் காரணமாக கால்வாயில் ஏற முடியாமல் இறந்து போனது.

இந்நிலையில், அவ்வழியே ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறையினர், இறந்த நிலையில், நீரில் மூழ்கி கிடந்த யானையின் உடலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மீட்புப் பணியின் போது வனக்காவலர் சந்துரு என்பவர் கால்வாயில் விழுந்து மாயமானார். அவர் நீண்ட நேரமாக தென்படாத காரணத்தால், நீரில் மூழ்கி வனக்காவலர் இறந்திருக்கலாம் எனக் கருதிய தீயணைப்பு துறையினர், வனத் துறையினர் காண்டூர் கால்வாய் மற்றும் திருமூர்த்தி அணை பகுதியில் தீவிரமாக தேடிவந்தனர்.

வனக்காவலரை மீட்கும் பணி தீவிரம்!

இந்த நிலையில், நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு வனக்காவலர் சந்துரு உடலை தீயணைப்பு துறையினர் சடலமாக மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட வனக்காவலர் உடல் பிரேத பரிசோதனைக்காக, உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. கால்வாயில் சிக்கிய காட்டு யானையும், இறந்த நிலையில் ஹிட்டாச்சி வாகனம் மூலம் மீட்கப்பட்டது.
தண்ணிரில் மூழ்கி, காட்டு யானையும் யானையை மீட்கும் பணியில் ஈடுபட்ட வனக்காவலரும் இறந்துப் போன சம்பவம் வனத்துறை மற்றும் பொது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதையும் பார்க்க: முழு பேரழிவுக்கு வித்திட்ட ட்ரம்ப் - முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா தாக்கு!

Last Updated : May 11, 2020, 12:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.