ETV Bharat / state

பாக்கத்தான் சுள்ளான்... போலீசாரிடம் எகிறிய இளைஞன்!

author img

By

Published : Oct 2, 2019, 1:30 PM IST

திருப்பூர் : உடுமலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துக் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் இளைஞனின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.

காவல் துறையிடம் வாக்குவாதம் செய்யும் இளைஞன்


திருப்பூர் மாவட்டம் உடுமலையில் போக்குவரத்து சார்பு ஆய்வாளர்கள் மொய்தீன், ரகுபதி ஆகியோர் போக்குவரத்து காவலர்களுடன் பொள்ளாச்சி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த திருப்பூரைச் சேர்ந்த பாபு என்ற இளைஞரை நிறுத்தி ஆய்வு மேற்கொண்டபோது, கோபமடைந்த அந்த வாலிபர் போக்குவரத்து காவலர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

போக்குவரத்துக் காவலர்களிடம் வாக்குவாதம் செய்யும் இளைஞனின் காணொலி

தொடர்ந்து சாலையில் செல்லும் வாகனங்களை நிறுத்தி ரகளையில் ஈடுபட்ட அந்த இளைஞரை காவல் துறையினர் சமதானம் செய்ய முயற்சித்தனர். எனினும் அதைக் கேட்காத அந்த இளைஞர் சாலையின் நடுவே அமர்ந்துக் கொண்டு சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு செய்தார். இதனை அங்கிருந்த சிலர் செல்ஃபோனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தற்போது இந்த வீடியோ வைரலாகியுள்ளது.

போக்குவரத்து காவலர்களை தரைகுறைவாக பேசி பணிசெய்யவிடாமல் தடுத்ததாகவும், போக்குவரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியதற்காகவும் அந்த இளைஞன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையும் படிங்க : பேருந்தை நடு ரோட்டில் நிறுத்திவிட்டு சண்டை: ஸ்தம்பித்த போக்குவரத்து!


திருப்பூர் மாவட்டம் உடுமலையில் போக்குவரத்து சார்பு ஆய்வாளர்கள் மொய்தீன், ரகுபதி ஆகியோர் போக்குவரத்து காவலர்களுடன் பொள்ளாச்சி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த திருப்பூரைச் சேர்ந்த பாபு என்ற இளைஞரை நிறுத்தி ஆய்வு மேற்கொண்டபோது, கோபமடைந்த அந்த வாலிபர் போக்குவரத்து காவலர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

போக்குவரத்துக் காவலர்களிடம் வாக்குவாதம் செய்யும் இளைஞனின் காணொலி

தொடர்ந்து சாலையில் செல்லும் வாகனங்களை நிறுத்தி ரகளையில் ஈடுபட்ட அந்த இளைஞரை காவல் துறையினர் சமதானம் செய்ய முயற்சித்தனர். எனினும் அதைக் கேட்காத அந்த இளைஞர் சாலையின் நடுவே அமர்ந்துக் கொண்டு சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு செய்தார். இதனை அங்கிருந்த சிலர் செல்ஃபோனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தற்போது இந்த வீடியோ வைரலாகியுள்ளது.

போக்குவரத்து காவலர்களை தரைகுறைவாக பேசி பணிசெய்யவிடாமல் தடுத்ததாகவும், போக்குவரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியதற்காகவும் அந்த இளைஞன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையும் படிங்க : பேருந்தை நடு ரோட்டில் நிறுத்திவிட்டு சண்டை: ஸ்தம்பித்த போக்குவரத்து!

Intro:Body:உடுமலையில் வாகனதனிக்கையின் போது போக்குவரத்து காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது

போக்குவரத்து காவலர்களுடன் வாலிபர் வாக்குவதில் ஈடுபட்டு சாலையில் ரகளை செய்யும் வீடியோ வைரலாகிவரும் நிலையில் உடுமலை போலீசார் நடவடிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் போக்குவரத்து சார்பு ஆய்வாளர்கள் மொய்தீன் மற்றும் ரகுபதி மற்றும் போக்குவரத்து காவலர்களுடன் பொள்ளாச்சி சாலையில் வாகன தணிக்கை செய்துகொண்டு இருந்தனர்

அப்போது இருசக்கர வாகணத்தில் திருப்பூரை சார்ந்த பாபு என்ற பைட்டன் என்ற வாலிபரை நிறுத்தி ஆய்வு மேற்கொண்டபோது கோபமடைந்த அந்த வாலிபர் போக்குவரத்து காவலர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு சாலையில் வாகனங்களை நிறுத்தி ரகளையில் ஈடுபட்டார் இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது அவரை போலீசார் சமதானம் செய்து அனுப்பிவைத்தனர்

இதனை அங்கிருந்த சிலர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதலங்களில் வைரலாக்கினர்

இந்நிலையில் உடுமலை போலீசார் போக்குவரத்து காவலர்களை அசிங்கமாக பேசி பணிசெய்யவிடாமல் தடுத்ததாகவும் போக்குவரத்தை தடைசெய்ததாகவும் வழக்கு பதிவு செய்து ரகலையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் இன்று கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினார்

போக்குவரத்து விதிகள் கடுமையாக்கபட்டபின் போக்குவரத்து காவலர்களுடன் பலர் வாக்குவாத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் தற்பொது ஒருவர் போக்குவரத்தை நிறுத்தசென்று கைதாகி இருப்பது உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.