ETV Bharat / state

இன்று முதல் வங்கிகள் இயங்கும் நேரம் குறைப்பு

திருப்பூர்: கரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்றுமுதல் (ஏப். 26) வங்கிகள் அரை நாள் மட்டுமே செயல்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த நிலையில், திருப்பூர்-ஊத்துக்குளி சாலை, எஸ்பிஐ வங்கிக்கு வாடிக்கையாளர்கள் அதிகளவில் வந்திருந்தனர்.

author img

By

Published : Apr 26, 2021, 5:53 PM IST

வங்கிகள் நேரம் குறைப்பு
வங்கிகள் நேரம் குறைப்பு

கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாடு அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி, அழகு நிலையங்கள், சலூன் கடைகள், திரையரங்குள் இன்று முதல் (ஏப். 26) செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உணவகங்களில் பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. வழிபாட்டுத்தலங்களில் பொதுமக்கள் வழிபட அனுமதியில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளது.

வங்கி செயல்படும் நேரம்

இதன் ஒருபகுதியாக வங்கிகள் காலை 10 மணிமுதல் மதியம் இரண்டு மணிவரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து முகக்கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பூர் SBI வங்கி
திருப்பூர் SBI வங்கி

முகக்கவசம் இல்லாதவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பின்னரே வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்க, செலுத்த குறைந்த அளவிலான வாடிக்கையாளர்கள் அனுமதிக்கபடுகின்றனர்.

வங்கிகள் நேரம் குறைப்பு
வங்கிகள் நேரம் குறைப்பு

காசோலை, வரவோலை உள்ளிட்ட பிற சேவைகளுக்கு வங்கியின் முன் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பெட்டியை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கிகளுக்கு வருபவர்கள் வரிசையில் நிற்க தடுப்புகள், காத்திருக்க குடிநீர் வசதியுடன் கூடிய பந்தல் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

திருப்பூர் எஸ்பிஐ வங்கியில்
திருப்பூர் எஸ்பிஐ வங்கியில்

கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாடு அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி, அழகு நிலையங்கள், சலூன் கடைகள், திரையரங்குள் இன்று முதல் (ஏப். 26) செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உணவகங்களில் பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. வழிபாட்டுத்தலங்களில் பொதுமக்கள் வழிபட அனுமதியில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளது.

வங்கி செயல்படும் நேரம்

இதன் ஒருபகுதியாக வங்கிகள் காலை 10 மணிமுதல் மதியம் இரண்டு மணிவரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து முகக்கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பூர் SBI வங்கி
திருப்பூர் SBI வங்கி

முகக்கவசம் இல்லாதவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பின்னரே வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்க, செலுத்த குறைந்த அளவிலான வாடிக்கையாளர்கள் அனுமதிக்கபடுகின்றனர்.

வங்கிகள் நேரம் குறைப்பு
வங்கிகள் நேரம் குறைப்பு

காசோலை, வரவோலை உள்ளிட்ட பிற சேவைகளுக்கு வங்கியின் முன் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பெட்டியை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கிகளுக்கு வருபவர்கள் வரிசையில் நிற்க தடுப்புகள், காத்திருக்க குடிநீர் வசதியுடன் கூடிய பந்தல் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

திருப்பூர் எஸ்பிஐ வங்கியில்
திருப்பூர் எஸ்பிஐ வங்கியில்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.