ETV Bharat / state

ஆம்பூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் உயிரிழப்பு! - Youth killed in car accident

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

மணிகண்டன்
மணிகண்டன்
author img

By

Published : Dec 3, 2020, 5:10 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கிளி பகுதியில் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. பின் இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அவர்களை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த மூவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இருவர் படுகாயமடைந்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். உயிரிழந்தவர் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை சேர்ந்த மணிகண்டன் (35) என்பது விசாரணையில் தெரியவந்தது.

இவர் சென்னை வண்டலூரில் பேக்கரியில் பணிபுரிந்து வந்த நிலையில், நாட்றம்பள்ளியில் உறவினர் இறந்துவிட்டதால் துக்க நிகழ்விற்கு வண்டலூரில் இருந்து தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது வெங்கிளி பகுதியில் இன்று (டிச.03) அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.

மேலும் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த மணிகண்டனின் நண்பர்கள் பார்த்திபன், (30) ரமேஷ் (31) ஆகிய இருவர் படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர் என காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: சுவர் இடிந்த விபத்தில் 7 வயது சிறுமி உயிரிழப்பு!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கிளி பகுதியில் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. பின் இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அவர்களை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த மூவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இருவர் படுகாயமடைந்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். உயிரிழந்தவர் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை சேர்ந்த மணிகண்டன் (35) என்பது விசாரணையில் தெரியவந்தது.

இவர் சென்னை வண்டலூரில் பேக்கரியில் பணிபுரிந்து வந்த நிலையில், நாட்றம்பள்ளியில் உறவினர் இறந்துவிட்டதால் துக்க நிகழ்விற்கு வண்டலூரில் இருந்து தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது வெங்கிளி பகுதியில் இன்று (டிச.03) அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.

மேலும் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த மணிகண்டனின் நண்பர்கள் பார்த்திபன், (30) ரமேஷ் (31) ஆகிய இருவர் படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர் என காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: சுவர் இடிந்த விபத்தில் 7 வயது சிறுமி உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.