தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் ஒன்றான ஆம்பூர் பஜார் பகுதியில் உள்ள ஜாக்கிரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை முதலே ஆண்களைவிட அதிகளவு இஸ்லாமிய பெண்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.