திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் கிராமத்தில் சுமார் 80 ஏக்கர் பரபளவில் ஏரி அமைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து கனமழையின் காரணமாக 42 வருடங்களுக்குப் பிறகு ஏரி நிரம்பியது.
அதனை கொண்டாடும் வகையில் அச்சமங்கலம் கிராம பகுதி மக்கள் இரண்டு ஆடுகளை வெட்டி கொண்டாடினர். மேலும் தங்களது பழமை வாய்ந்த கல்வெட்டு குலச்சாமிக்கு பூஜை செய்த பின் ஆடுவெட்டினர்.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் அண்ணாதுரை துணைத் தலைவர் அன்பழகன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:தீபாவளி பண்டிகை.. பின்பற்றப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன?