ETV Bharat / state

4 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய பெரியாங்குப்பம் ஏரி - விவசாயிகள் மகிழ்ச்சி! - மழையின் காரணமாக நிரம்பிய ஏரி

திருப்பத்தூர்: தொடர் கனமழையின் காரணமாக நான்கு ஆண்டுகளுக்கு பின் ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பெரியாங்குப்பம் ஏரி
Lake filled up after four years
author img

By

Published : Dec 8, 2020, 4:13 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்தது. இதன் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகள் நிரம்பின. அதன் ஒரு பகுதியாக ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியில் அருகே காமனூர்தட்டு மலைப்பகுதியில் ஊற்று நீர் காட்டாறாக ஓடி ஏரிப்பகுதியில் வந்தடைந்தது.

இதனால் பெரியாங்குப்பம் ஏரி தனது முழு கொள்ளளவை எட்டி நான்கு ஆண்டுகளுக்கு பின் நிரம்பி வழிந்தது. இதனை அப்பகுதி மக்கள் பூஜை செய்து வழிபட்டனர்.

4 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய பெரியாங்குப்பம் ஏரி

பெரியாங்குப்பம் ஏரியின் மூலம் ஏரியை சுற்றியுள்ள நாச்சியார்குப்பம், ஆலங்குப்பம், சோலூர், புதூர், ரங்காபுரம், காட்டுக்கொல்லை ஆகிய பகுதியில் உள்ள நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, இன்னும் பல நாட்களுக்கு இப்பகுதி மக்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்துள்ளது.

மேலும் காட்டாறு ஓடையை சீரமைத்து ஏரிப்பகுதியை மேலும் தூர்வாரி தண்ணீர் அதிகளவு நிரம்ப வழிவகை செய்யும்மாறு இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

அதேசமயம், இந்த ஏரிப்பகுதியில் தற்போதே மீன்கள் அதிகளவில் காணப்படுவதால் இளைஞர்கள் பலர் ஆர்வத்துடன் மீன்பிடித்து செல்கின்றனர்.

இதையும் படிங்க: ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட்டுக்கு பூட்டு: காங்கிரஸார் கைது!

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்தது. இதன் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகள் நிரம்பின. அதன் ஒரு பகுதியாக ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியில் அருகே காமனூர்தட்டு மலைப்பகுதியில் ஊற்று நீர் காட்டாறாக ஓடி ஏரிப்பகுதியில் வந்தடைந்தது.

இதனால் பெரியாங்குப்பம் ஏரி தனது முழு கொள்ளளவை எட்டி நான்கு ஆண்டுகளுக்கு பின் நிரம்பி வழிந்தது. இதனை அப்பகுதி மக்கள் பூஜை செய்து வழிபட்டனர்.

4 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய பெரியாங்குப்பம் ஏரி

பெரியாங்குப்பம் ஏரியின் மூலம் ஏரியை சுற்றியுள்ள நாச்சியார்குப்பம், ஆலங்குப்பம், சோலூர், புதூர், ரங்காபுரம், காட்டுக்கொல்லை ஆகிய பகுதியில் உள்ள நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, இன்னும் பல நாட்களுக்கு இப்பகுதி மக்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்துள்ளது.

மேலும் காட்டாறு ஓடையை சீரமைத்து ஏரிப்பகுதியை மேலும் தூர்வாரி தண்ணீர் அதிகளவு நிரம்ப வழிவகை செய்யும்மாறு இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

அதேசமயம், இந்த ஏரிப்பகுதியில் தற்போதே மீன்கள் அதிகளவில் காணப்படுவதால் இளைஞர்கள் பலர் ஆர்வத்துடன் மீன்பிடித்து செல்கின்றனர்.

இதையும் படிங்க: ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட்டுக்கு பூட்டு: காங்கிரஸார் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.