ETV Bharat / state

மனைவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற கணவன் கைது - தமிழ் குற்ற செய்திகள்

திருப்பத்தூர்: குழந்தை இல்லாத காரணத்தால், மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற கணவர், காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

man-arrested-for-burning-petrol-over-wife
man-arrested-for-burning-petrol-over-wife
author img

By

Published : Jun 27, 2020, 6:59 PM IST

திருப்பத்தூர் சிதம்பரனார் தெருவைச் சேர்ந்தவர் சேஷாலம் (65). இவர் அப்பகுதியிலுள்ள நகை கடை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மல்லிகாவுக்கும் (60) இவருக்கும் இதுவரையில் குழந்தைகள் ஏதுமில்லாமல் வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று இரவு சேஷாலம் தன் மனைவி மீது பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளார். இதில் படுகாயமைடைந்த மல்லிகா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், பெண்ணின் உடலை மீட்டு, உடற்கூராய்வுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து சேஷாலம் மீது வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்த திருப்பத்தூர் நகர காவல் துறையினர், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் சிதம்பரனார் தெருவைச் சேர்ந்தவர் சேஷாலம் (65). இவர் அப்பகுதியிலுள்ள நகை கடை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மல்லிகாவுக்கும் (60) இவருக்கும் இதுவரையில் குழந்தைகள் ஏதுமில்லாமல் வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று இரவு சேஷாலம் தன் மனைவி மீது பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளார். இதில் படுகாயமைடைந்த மல்லிகா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், பெண்ணின் உடலை மீட்டு, உடற்கூராய்வுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து சேஷாலம் மீது வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்த திருப்பத்தூர் நகர காவல் துறையினர், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.