ETV Bharat / state

திருமணத்தை மீறிய உறவு - மாமியாரை கொலை செய்த மருமகள் உள்பட மூவர் கைது!

author img

By

Published : Jul 1, 2022, 8:26 PM IST

திருப்பத்தூர் அருகே திருமணத்தை மீறிய உறவுக்குத் தடையாக இருந்த மாமியாரை கொலை செய்த மருமகள் உள்பட மூவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

மாமியாரை கொலை செய்த மருமகள் உள்பட மூவர் கைது
மாமியாரை கொலை செய்த மருமகள் உள்பட மூவர் கைது

திருப்பத்தூர்: செவ்வாத்தூர் புதூரைச் சேர்ந்தவர் செல்வராஜ் (58) என்பவரது மகன் ஏழுமலை (25.)

இவருக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு குனிச்சி பகுதியைச்சேர்ந்த அம்சா (21) என்பவருடன் திருமணம் நடந்தது. ஏழுமலை சென்னையில் கார் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார்.

ஏழுமலையின் மனைவி அம்சா குனிச்சி பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் படித்தார். அதே பள்ளியில் அவருடன் பயின்றவர் கார்த்திகேயன் (22). இவர்கள் இருவருக்கும் பள்ளிப் பருவத்திலேயே காதல் மலர்ந்ததாகத் தெரிகிறது. இதனையடுத்து ஏழுமலைக்கும் அம்சாவுக்கும் திருமணம் நடைபெற்றதால் ஏழுமலைக்குத் தெரியாமல் கார்த்திகேயனுடன் அம்சா திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றிரவு (ஜூன் 30) மதுபோதையில் இருந்த கார்த்திகேயன் மற்றும் அவருடைய தம்பி மோகன்குமார் ஆகியோர் அம்சா வீட்டுக்குச் சென்றனர். பின்னர் வீட்டிலிருந்த அம்சா, கார்த்திகேயன், மோகன்குமார் மூவரும் சேர்ந்து ஏழுமலையின் தாயார் ராமரோஜாவை கம்பியால் கழுத்தை இறுக்கிக்கொலை செய்தனர்.

அதனைத்தொடர்ந்து ஒன்றும் தெரியாததுபோல் அம்சா வீட்டின் உள்ளே சென்று தூங்கிவிட்டார். பின்பு காலையில் ராமரோஜா இறந்ததை அறிந்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து கந்திலி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்குச்சென்ற காவல் துறையினர் அவரது உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கொலை குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இந்நிலையில் அக்கம்பக்கத்தினர் அம்சாவின் திருமணத்தை மீறிய உறவு குறித்துக்கொடுத்த தகவலின் பேரில் காவல் துறையினர் கார்த்திகேயனை பிடித்து விசாரணை செய்தனர்.

கொலை செய்யப்பட்ட ராமரோஜா
கொலை செய்யப்பட்ட ராமரோஜா

விசாரணையில் மூவரும் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதன் காரணமாக மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: ஆசிரியை தம்பதிகளை கட்டிப்போட்டு 140 சவரன் நகை கொள்ளை - முகமூடியில் வந்த மர்ம நபர்கள் யார்?

திருப்பத்தூர்: செவ்வாத்தூர் புதூரைச் சேர்ந்தவர் செல்வராஜ் (58) என்பவரது மகன் ஏழுமலை (25.)

இவருக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு குனிச்சி பகுதியைச்சேர்ந்த அம்சா (21) என்பவருடன் திருமணம் நடந்தது. ஏழுமலை சென்னையில் கார் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார்.

ஏழுமலையின் மனைவி அம்சா குனிச்சி பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் படித்தார். அதே பள்ளியில் அவருடன் பயின்றவர் கார்த்திகேயன் (22). இவர்கள் இருவருக்கும் பள்ளிப் பருவத்திலேயே காதல் மலர்ந்ததாகத் தெரிகிறது. இதனையடுத்து ஏழுமலைக்கும் அம்சாவுக்கும் திருமணம் நடைபெற்றதால் ஏழுமலைக்குத் தெரியாமல் கார்த்திகேயனுடன் அம்சா திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றிரவு (ஜூன் 30) மதுபோதையில் இருந்த கார்த்திகேயன் மற்றும் அவருடைய தம்பி மோகன்குமார் ஆகியோர் அம்சா வீட்டுக்குச் சென்றனர். பின்னர் வீட்டிலிருந்த அம்சா, கார்த்திகேயன், மோகன்குமார் மூவரும் சேர்ந்து ஏழுமலையின் தாயார் ராமரோஜாவை கம்பியால் கழுத்தை இறுக்கிக்கொலை செய்தனர்.

அதனைத்தொடர்ந்து ஒன்றும் தெரியாததுபோல் அம்சா வீட்டின் உள்ளே சென்று தூங்கிவிட்டார். பின்பு காலையில் ராமரோஜா இறந்ததை அறிந்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து கந்திலி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்குச்சென்ற காவல் துறையினர் அவரது உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கொலை குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இந்நிலையில் அக்கம்பக்கத்தினர் அம்சாவின் திருமணத்தை மீறிய உறவு குறித்துக்கொடுத்த தகவலின் பேரில் காவல் துறையினர் கார்த்திகேயனை பிடித்து விசாரணை செய்தனர்.

கொலை செய்யப்பட்ட ராமரோஜா
கொலை செய்யப்பட்ட ராமரோஜா

விசாரணையில் மூவரும் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதன் காரணமாக மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: ஆசிரியை தம்பதிகளை கட்டிப்போட்டு 140 சவரன் நகை கொள்ளை - முகமூடியில் வந்த மர்ம நபர்கள் யார்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.