ETV Bharat / state

திருப்பத்தூரில் புதியதாக கரோனா பாதிப்பு இல்லை! - Thiruppathur corona impact

திருப்பத்தூர்: மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக புதியதாக யாருக்கும் கரோனா வைரஸ் தொற்று இல்லை என மாவட்ட சிறப்பு அலுவலர் மங்கத் சர்மா தெரிவித்துள்ளார்.

புதியதாக கரோனா பாதிப்பு இல்லை
புதியதாக கரோனா பாதிப்பு இல்லை
author img

By

Published : Apr 17, 2020, 8:55 PM IST

தமிழ்நாட்டில் கரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு மேற்கொள்ள 14 மண்டலங்களாக பிரித்து, அதில் 4 மாவட்டத்திற்கு ஒரு சிறப்பு அலுவலரை நியமனம் செய்து முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி திருப்பத்தூரில் மாவட்ட சிறப்பு அலுவலர் மங்கத் சர்மா கரோனா பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "கரோனோ தடுப்புப் பணியில் மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் திருப்பத்தூர் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் தலைமையிலான வருவாய்த் துறை, சுகாதாரத்துறை, காவல் துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்களும் சிறப்பாக வேலை செய்து வருகின்றனர். இதனால் திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் ஒருவர் கூட இல்லை" எனத் தெரிவித்தார்.

புதியதாக கரோனா பாதிப்பு இல்லை

தொடர்ந்து பேசிய அவர், "சீனாவிலிருந்து வரவழைக்கப்பட்ட வென்டிலேட்டர்களை திருப்பத்தூர் மாவட்டத்திற்கும் கேட்டுள்ளோம். அதற்கு, விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் கூறினார்" என்றார்.

இதையும் படிங்க: முகக் கவசம் - எவ்வாறு கையாள வேண்டும் என விளக்குகிறார் மருத்துவர் வெங்கடேஷ்

தமிழ்நாட்டில் கரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு மேற்கொள்ள 14 மண்டலங்களாக பிரித்து, அதில் 4 மாவட்டத்திற்கு ஒரு சிறப்பு அலுவலரை நியமனம் செய்து முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி திருப்பத்தூரில் மாவட்ட சிறப்பு அலுவலர் மங்கத் சர்மா கரோனா பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "கரோனோ தடுப்புப் பணியில் மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் திருப்பத்தூர் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் தலைமையிலான வருவாய்த் துறை, சுகாதாரத்துறை, காவல் துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்களும் சிறப்பாக வேலை செய்து வருகின்றனர். இதனால் திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் ஒருவர் கூட இல்லை" எனத் தெரிவித்தார்.

புதியதாக கரோனா பாதிப்பு இல்லை

தொடர்ந்து பேசிய அவர், "சீனாவிலிருந்து வரவழைக்கப்பட்ட வென்டிலேட்டர்களை திருப்பத்தூர் மாவட்டத்திற்கும் கேட்டுள்ளோம். அதற்கு, விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் கூறினார்" என்றார்.

இதையும் படிங்க: முகக் கவசம் - எவ்வாறு கையாள வேண்டும் என விளக்குகிறார் மருத்துவர் வெங்கடேஷ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.