ETV Bharat / state

சொத்து பிரச்சினை: ஆட்சியர் அலுவலகத்தில் அக்கா, தம்பி தீக்குளிக்க முயற்சி

author img

By

Published : Dec 4, 2020, 12:26 PM IST

திருப்பத்தூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சொத்துப் பிரச்சினைக்காக அக்கா, தம்பி தீக்குளிக்க முயற்சித்தையடுத்து காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

suicide
suicide

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்குள்பட்ட நரியனேரி ஊராட்சி மாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் முனிசாமி. இவருடைய முதல் மனைவியின் மகன் சீனிவாசன் (29), மகள் லாவண்யா (32). லாவண்யாவுக்கு திருமணமாகி வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் வசித்துவருகிறார். சீனிவாசன் திருமணமாகாமல் வீட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் முனிசாமி இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டு தங்களுக்குத் சொத்தில் பங்கு தராமல் மிரட்டிவருவதாகவும் சொத்தில் பங்கு கேட்கச் சென்ற தங்களை முனிசாமி அடியாள்களை வைத்து மிரட்டிவருவதாகவும் சீனிவாசன், லாவண்யா இருவரும் கந்திலி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

இந்தப் புகார் குறித்து காவல் துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (டிசம்பர் 4) இருவரும்‌ தீக்குளிக்க முயற்சி செய்தனர்.

அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் காவலர் தடுத்து நிறுத்தினார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பணியாளர்கள் அவர்களை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின் இது குறித்து திருப்பத்தூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்குள்பட்ட நரியனேரி ஊராட்சி மாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் முனிசாமி. இவருடைய முதல் மனைவியின் மகன் சீனிவாசன் (29), மகள் லாவண்யா (32). லாவண்யாவுக்கு திருமணமாகி வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் வசித்துவருகிறார். சீனிவாசன் திருமணமாகாமல் வீட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் முனிசாமி இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டு தங்களுக்குத் சொத்தில் பங்கு தராமல் மிரட்டிவருவதாகவும் சொத்தில் பங்கு கேட்கச் சென்ற தங்களை முனிசாமி அடியாள்களை வைத்து மிரட்டிவருவதாகவும் சீனிவாசன், லாவண்யா இருவரும் கந்திலி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

இந்தப் புகார் குறித்து காவல் துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (டிசம்பர் 4) இருவரும்‌ தீக்குளிக்க முயற்சி செய்தனர்.

அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் காவலர் தடுத்து நிறுத்தினார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பணியாளர்கள் அவர்களை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின் இது குறித்து திருப்பத்தூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.