ETV Bharat / state

கோயில் உண்டியல் கொள்ளை: சிசிடிவி காட்சிகளை வைத்து தேடி வரும் போலிஸ்

author img

By

Published : Feb 3, 2021, 10:15 PM IST

திருப்பத்தூர்: பிரசித்தி பெற்ற ஊட்டல் மலைக்கோயில் உண்டியல்களை உடைத்து பணம், பூஜை பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருப்பதால் அந்தக் காட்சிகளை வைத்து காவல்துறையினர் கொள்ளையர்கள் தேடி வருகின்றனர்.

கோயில் உண்டியல் கொள்ளை : சிசிடிவி காட்சிகளை வைத்து தேடி வரும் போலிஸ்
கோயில் உண்டியல் கொள்ளை : சிசிடிவி காட்சிகளை வைத்து தேடி வரும் போலிஸ்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த கோயிலான ஊட்டல் மலைக்கோயிலில் சரஸ்வதி, விஷ்ணு, விநாயகர், சப்தக் கன்னிகள் என தனித்தனியாக அமைந்துள்ள கோயிலில் உள்ளுர் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வாடிக்கையாகும். கரோனா காலக்கட்டத்தில் கூட்டம் குறைவாக இருந்தாலும், பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறிய பின் காணிக்கை செலுத்தி விட்டு செல்கின்றனர்.

கோயில் மலைப் பகுதியில் இருப்பதால் கோயிலுக்கு சொந்தமான முக்கிய நகைகளையும், உண்டியல் பணத்தையும் வாரத்திற்கு ஒரு முறை கோயில் நிர்வாகத்தினர் எடுத்து அதனை பராமரித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் பூஜைகளை முடித்து விட்டு அர்ச்சகர் மிட்டாளம் பகுதியை சேர்ந்த ரவி என்பவர் கோயிலை பூட்டி சென்றுள்ளார்.

இதனையறிந்த அடையாளம் தெரியாத நபர்கள் கோயிலுக்குள் புகுந்து அங்கிருந்த 2 சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தி விட்டு 3 உண்டியல்களை உடைத்து அதிலிருந்த சுமார் 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பூஜை பொருள்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

கோயிலிலிருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்து விட்டதால் எதுவும் பதிவாகாது என தைரியமாக கோயில் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது அங்குள்ள மற்றொரு கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து கோயில் நிர்வாகி கிஷோர் அளித்த புகாரின் பேரில் உமராபாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த இருவர் கைது!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த கோயிலான ஊட்டல் மலைக்கோயிலில் சரஸ்வதி, விஷ்ணு, விநாயகர், சப்தக் கன்னிகள் என தனித்தனியாக அமைந்துள்ள கோயிலில் உள்ளுர் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வாடிக்கையாகும். கரோனா காலக்கட்டத்தில் கூட்டம் குறைவாக இருந்தாலும், பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறிய பின் காணிக்கை செலுத்தி விட்டு செல்கின்றனர்.

கோயில் மலைப் பகுதியில் இருப்பதால் கோயிலுக்கு சொந்தமான முக்கிய நகைகளையும், உண்டியல் பணத்தையும் வாரத்திற்கு ஒரு முறை கோயில் நிர்வாகத்தினர் எடுத்து அதனை பராமரித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் பூஜைகளை முடித்து விட்டு அர்ச்சகர் மிட்டாளம் பகுதியை சேர்ந்த ரவி என்பவர் கோயிலை பூட்டி சென்றுள்ளார்.

இதனையறிந்த அடையாளம் தெரியாத நபர்கள் கோயிலுக்குள் புகுந்து அங்கிருந்த 2 சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தி விட்டு 3 உண்டியல்களை உடைத்து அதிலிருந்த சுமார் 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பூஜை பொருள்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

கோயிலிலிருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்து விட்டதால் எதுவும் பதிவாகாது என தைரியமாக கோயில் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது அங்குள்ள மற்றொரு கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து கோயில் நிர்வாகி கிஷோர் அளித்த புகாரின் பேரில் உமராபாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த இருவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.