ETV Bharat / state

திருப்பரங்குன்றம் சமணர் குகையில் பச்சை நிற பெயின்ட் அடித்தவர்களை தேடும் போலீஸ்! - THIRUPARANKUNDRAM MADURAI

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள பழமையான சமணர் குகைத்தளத்தில் அடையாளம் தெரியாத சிலர் பச்சை நிற பெயின்ட் அடித்து அப்பகுதியை சேதப்படுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெயின்ட் அடிக்கப்பட்ட  சமணர் குகை
பெயின்ட் அடிக்கப்பட்ட சமணர் குகை (ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 22, 2025, 8:25 PM IST

மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் சமணர் தொடர்பான தொல்லியல் எச்சங்கள் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த நிலையில் அங்குள்ள பழமையான சமணர் குகைத்தளத்தில் அடையாளம் தெரியாத சிலர் பச்சை நிற பெயின்ட் அடித்து சேதப்படுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக கருதப்படுவது திருப்பரங்குன்றம். இங்குள்ள மலையில் ஆயிரத்தில் இருந்து 2000 ஆண்டுகள் பழமையான பல்வேறு தொல்லியல் சின்னங்கள் நிறைந்துள்ளன. அதுமட்டுமன்றி மலை மேல் காசி விஸ்வநாதர் கோயிலும் அதற்கு சற்று அருகே இஸ்லாமியர்கள் வழிபடும் தர்காவும் உள்ளன.

இம்மலையை ஆக்கிரமிக்கும் நோக்கில் சில அமைப்புகள் செயல்பட்டு வருவதாக, இந்து அமைப்புகள் போராடி வரும் நிலையில், திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சமணர் குகையை ஆக்கிரமிக்கும் நோக்கில், பச்சை பெயின்ட் பூசப்பட்டுள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தவிர, பாறையில் சில வாக்கியங்களும் எழுதப்பட்டுள்ளன.

இதுகுறித்து, மத்திய தொல்லியல் துறை உதவி பாதுகாப்பு அலுவலர் சங்கர் அளித்த புகாரில், பொதுச் சொத்து மற்றும் தொல்லியல் பாதுகாப்பு சட்டப்பிரிவுகளின் கீழ், மர்ம நபர்கள் மீது திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக, அங்குள்ள தர்காவில் கடந்த மாதம் விருதுநகரைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் ‌ஆடு வெட்ட முயன்றபோது காவலர்கள் தடுத்தனர். இதனால் தாங்கள் வழிபட அனுமதி மறுக்கப்படுகிறது எனக்கூறி, சில இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. 'வழிபட தடையில்லை. உயிர்பலி கொடுக்க தான் தடை' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பொருட்படுத்தாமல், ஜன., 18ஆம் தேதி ஆடு, கோழி வெட்டி சமபந்தி விருந்து கொடுக்க போவதாக கூறி, இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த சிலர் மலையேற முயன்றனர். அப்போது போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது.

மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் சமணர் தொடர்பான தொல்லியல் எச்சங்கள் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த நிலையில் அங்குள்ள பழமையான சமணர் குகைத்தளத்தில் அடையாளம் தெரியாத சிலர் பச்சை நிற பெயின்ட் அடித்து சேதப்படுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக கருதப்படுவது திருப்பரங்குன்றம். இங்குள்ள மலையில் ஆயிரத்தில் இருந்து 2000 ஆண்டுகள் பழமையான பல்வேறு தொல்லியல் சின்னங்கள் நிறைந்துள்ளன. அதுமட்டுமன்றி மலை மேல் காசி விஸ்வநாதர் கோயிலும் அதற்கு சற்று அருகே இஸ்லாமியர்கள் வழிபடும் தர்காவும் உள்ளன.

இம்மலையை ஆக்கிரமிக்கும் நோக்கில் சில அமைப்புகள் செயல்பட்டு வருவதாக, இந்து அமைப்புகள் போராடி வரும் நிலையில், திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சமணர் குகையை ஆக்கிரமிக்கும் நோக்கில், பச்சை பெயின்ட் பூசப்பட்டுள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தவிர, பாறையில் சில வாக்கியங்களும் எழுதப்பட்டுள்ளன.

இதுகுறித்து, மத்திய தொல்லியல் துறை உதவி பாதுகாப்பு அலுவலர் சங்கர் அளித்த புகாரில், பொதுச் சொத்து மற்றும் தொல்லியல் பாதுகாப்பு சட்டப்பிரிவுகளின் கீழ், மர்ம நபர்கள் மீது திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக, அங்குள்ள தர்காவில் கடந்த மாதம் விருதுநகரைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் ‌ஆடு வெட்ட முயன்றபோது காவலர்கள் தடுத்தனர். இதனால் தாங்கள் வழிபட அனுமதி மறுக்கப்படுகிறது எனக்கூறி, சில இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. 'வழிபட தடையில்லை. உயிர்பலி கொடுக்க தான் தடை' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பொருட்படுத்தாமல், ஜன., 18ஆம் தேதி ஆடு, கோழி வெட்டி சமபந்தி விருந்து கொடுக்க போவதாக கூறி, இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த சிலர் மலையேற முயன்றனர். அப்போது போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.