ETV Bharat / state

முதலமைச்சர் மருமகன் சபரீசன் பெயரில் ரூ.1 கோடி பண மோசடி

author img

By

Published : Jan 23, 2023, 7:52 AM IST

Updated : Jan 23, 2023, 12:20 PM IST

முதலமைச்சரின் மருமகன் சபரீசன் பெயரைக் கூறி திமுக கவுன்சிலரிடம் பணம் பறித்த கும்பலை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பண மோசடி
பண மோசடி

திருப்பத்தூர் மாவட்டம் நரியம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பாரதி. இவர் ஊராட்சி மன்ற தலைவராகவும், கடந்த 10 வருடங்களாக அதே பகுதியில் திமுக கவுன்சிலராகவும் உள்ளார். திமுகவில் எம்எல்ஏ சீட்டு கேட்டு முயற்சி செய்தபோது பாரதிக்கு கிடைக்கவில்லை. இதனால் அரசு பணி வாங்குவதில் தீவிரம் காட்டி வந்துள்ளார்.

இதனிடையே வேலூர் மாவட்டத்தில் ஓட்டல் நடத்தி வரும் அதிமுகவைச் சேர்ந்த பாலச்சந்திரன் மூலம் புவனேஷ் அவரது மனைவி ராஜலக்ஷ்மி ஆகியோரிடம் பாரதி அறிமுகமாகி உள்ளார். புவனேஷ் - ராஜலட்சுமி இருவரும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவி காலியாக இருப்பதாக கூறியுள்ளனர். அதோடு அந்த பதவியை வாங்கி தருவதாக பாரதியிடம் கூறியுள்ளனர்.

அதற்கு ரூ. 1 கோடி செலவாகும் என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இதை நம்பிய பாரதி, சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து 34 லட்ச ரூபாயை புவனேஷ் மற்றும் அவரது மனைவி ராஜலட்சுமிடம் கொடுத்துள்ளார். அப்போது அவர்கள் ஐஏஎஸ் அதிகாரி என்று சசிகுமார் என்பவரை பாரதிக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளனர். அதன்பின் டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் அவரை சந்தித்து ரூ.43 லட்ச ரூபாயை பாரதி கொடுத்துள்ளார்.

அப்போது இந்த பணத்தை முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் தான் இந்த பதவியை வாங்கி தர உள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்பின் பல மாதங்கள் கழிந்தும் பதவி வாங்கி தராததால் சந்தேகமடைந்த பாரதி பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.

அப்போது புவனேஷ் அவரது மனைவி ராஜலட்சுமி பணத்தை திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வந்தனர். ஒருகட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பாரதி பணத்தை மீட்டுக் கொடுக்கும்படி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். சென்னை மத்திய குற்றப்பிரிவு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

அப்போது, புவனேஷ், ராஜலட்சுமி, போலி ஐஏஎஸ் அதிகாரி சசிகுமார் உள்பட 5 பேருக்கு வழக்கில் தொடர்பு இருப்பதை தெரியவந்தது. குறிப்பாக சசிகுமார் ரயில்வே மற்றும் அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் வேலூரை சேர்ந்த சதீஷ் மற்றும் ராஜலட்சுமி ஆகிய இருவரையும் சென்னை மத்திய குற்ற பிரிவு போலீசார் கைது செய்தனர்.

புவனேஷ் உள்பட இருவர் தலைமறைவாக இருக்கும் நிலையில், அதுகுறித்து சதீஷ் மற்றும் ராஜலட்சுமியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மின்னொலியில் ஜொலிக்கும் பழனி முருகன் கோயில் வளாகம்

திருப்பத்தூர் மாவட்டம் நரியம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பாரதி. இவர் ஊராட்சி மன்ற தலைவராகவும், கடந்த 10 வருடங்களாக அதே பகுதியில் திமுக கவுன்சிலராகவும் உள்ளார். திமுகவில் எம்எல்ஏ சீட்டு கேட்டு முயற்சி செய்தபோது பாரதிக்கு கிடைக்கவில்லை. இதனால் அரசு பணி வாங்குவதில் தீவிரம் காட்டி வந்துள்ளார்.

இதனிடையே வேலூர் மாவட்டத்தில் ஓட்டல் நடத்தி வரும் அதிமுகவைச் சேர்ந்த பாலச்சந்திரன் மூலம் புவனேஷ் அவரது மனைவி ராஜலக்ஷ்மி ஆகியோரிடம் பாரதி அறிமுகமாகி உள்ளார். புவனேஷ் - ராஜலட்சுமி இருவரும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவி காலியாக இருப்பதாக கூறியுள்ளனர். அதோடு அந்த பதவியை வாங்கி தருவதாக பாரதியிடம் கூறியுள்ளனர்.

அதற்கு ரூ. 1 கோடி செலவாகும் என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இதை நம்பிய பாரதி, சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து 34 லட்ச ரூபாயை புவனேஷ் மற்றும் அவரது மனைவி ராஜலட்சுமிடம் கொடுத்துள்ளார். அப்போது அவர்கள் ஐஏஎஸ் அதிகாரி என்று சசிகுமார் என்பவரை பாரதிக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளனர். அதன்பின் டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் அவரை சந்தித்து ரூ.43 லட்ச ரூபாயை பாரதி கொடுத்துள்ளார்.

அப்போது இந்த பணத்தை முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் தான் இந்த பதவியை வாங்கி தர உள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்பின் பல மாதங்கள் கழிந்தும் பதவி வாங்கி தராததால் சந்தேகமடைந்த பாரதி பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.

அப்போது புவனேஷ் அவரது மனைவி ராஜலட்சுமி பணத்தை திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வந்தனர். ஒருகட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பாரதி பணத்தை மீட்டுக் கொடுக்கும்படி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். சென்னை மத்திய குற்றப்பிரிவு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

அப்போது, புவனேஷ், ராஜலட்சுமி, போலி ஐஏஎஸ் அதிகாரி சசிகுமார் உள்பட 5 பேருக்கு வழக்கில் தொடர்பு இருப்பதை தெரியவந்தது. குறிப்பாக சசிகுமார் ரயில்வே மற்றும் அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் வேலூரை சேர்ந்த சதீஷ் மற்றும் ராஜலட்சுமி ஆகிய இருவரையும் சென்னை மத்திய குற்ற பிரிவு போலீசார் கைது செய்தனர்.

புவனேஷ் உள்பட இருவர் தலைமறைவாக இருக்கும் நிலையில், அதுகுறித்து சதீஷ் மற்றும் ராஜலட்சுமியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மின்னொலியில் ஜொலிக்கும் பழனி முருகன் கோயில் வளாகம்

Last Updated : Jan 23, 2023, 12:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.